பூச்சுற்றும் வெள்ளை அறிக்கை?
🔺 தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 9 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை. நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்.
🔺 தமிழ்நாட்டில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிவதால் விவசாயிகள் வேதனை. கடந்த ஆண்டு இதே நாளில் 114 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக சரிவு
🔺 ஹார்முஸ் நீரிணையை கடக்கும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தல்.
🔺 ஜூலை 1-ம் தேதி முதல் திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு.
🔺 ஒப்பந்தம் பிடிக்கவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும். ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.வேறு வேலை,வெட்டியேகிடையாதா?
வெள்ளை அறிக்கைகள்!
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற அதே மேடையில், 'நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்' எனச் சினிமாவில் பேசுவதுபோல் வீரவசனம் பேசினார்.
அவரது வீரவசனத்தின்படி நேற்று வெள்ளை அறிக்கையைத் த.வெ.க. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
அதில், 'தி.மு.க. அரசு முறைகேடு செய்துள்ளது' என்று இருக்கும் என்று பார்த்தால், 'மக்களுக்கான திட்டங்களுக்காகவே தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது' என பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'நிதி இல்லை; அதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது' என்ற தொனியிலேயே அந்த வெள்ளை அறிக்கை இருந்தது.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு தி.மு.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையோடு ஒப்பிட்டுத் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தனது சமூக வலைத்தளத்தில் தெளிவாக விளக்கியுள்ளது."
அதில், ”2021 திமுக அரசின் வெள்ளை அறிக்கை:
This report is not an attempt to create a rationale for diluting or abandoning the commitments made to the people during the recently concluded elections.
அதாவது, "நிதி நெருக்கடி இருந்தாலும், மக்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தோ, எங்களுடைய கடமைகளில் இருந்தோ நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம், அதை தட்டிக்கழிக்க இந்த அறிக்கையைப் பயன்படுத்த மாட்டோம்" என்று துணிச்சலோடு அறிவித்தது திமுக அரசு!
2026 தொடைநடுங்கி அரசின் வெள்ளை அறிக்கை:
the fiscal space available for taking up new programmes during the year can only be very minimal.
அதாவது, இந்த 'மங்குனி' 24ஆம் புலிகேசி அரசோ, "ஐயோ, எங்ககிட்ட காசு இல்ல, நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அதனால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி ரொம்ப ரொம்ப கம்மி"னு பம்மி, தங்களின் இயலாமையை மூடிமறைக்க இந்த வெள்ளை அறிக்கையையே ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது!
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டோட நிதி நிலைமை எப்படி இருக்குனு தெரியாமலா ஓட்டுக் கேட்டீங்க விஜய்?
அப்போதெல்லாம் ஜோசியர் உங்ககிட்ட சொல்லலையா?
நிறைவேற்ற முடியாத அத்தனை போலி வாக்குறுதிகளையும் வாரி இறைத்துவிட்டு, இப்ப நாற்காலி கிடைச்ச உடனே "பட்ஜெட்ல இடமில்லை"னு காதுல பூ சுத்துறீங்க!
நிர்வாக ஆளுமையோ, பொருளாதாரப் புத்தியோ இல்லாத ஒரு 'முதிர்ச்சியற்ற' கத்துக்குட்டி அரசாங்கம் தமிழ்நாட்டின் அரியணையில் ஏறியதன் அப்பட்டமான விளைவு தான் இந்த நிதித் தப்பியோட்டம்!
விவசாயிக்குத் தண்ணீரும் வாங்கித் தரத் துப்பில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கத் துப்பில்லை, இப்ப கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் துப்பில்லை!" என தெரிவித்துள்ளது.



ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி பேரம்?
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்களாக முயன்று வருவதாக செய்திகள் வெளியாகின.
சிவசேனா கட்சியின் (உத்தவ்) எம்எல்ஏ.க்களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அவர்கள் சிவசேனாவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவசேனாவின் (ஏக்நாத் ஷிண்டே) இந்த நடவடிக்கை, ஆபரேஷன் டைகர் என அழைக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த 14ம் தேதி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், சிவசேனா (உத்தவ்) எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோருடன் இணைந்து சஞ்சய் ராவத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: சிவசேனா எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் யாரேனும் கட்சியை விட்டு வெளியே செல்ல விரும்பினால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லட்டும். எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குறித்து இதுபோன்ற செய்திகள் தற்போது வருகின்றன.
இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த எம்.பி.க்களின் வெற்றிக்காக எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஓய்வின்றி உழைத்துள்ளார். நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம்.
கட்சி மாறும் எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், எம்.பி.க்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. குறைந்தது அவர்களுக்கு ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களை அழைத்துச் செல்ல 3 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த உத்தரவாதத்தை அடுத்தே அவர்கள் நான்டெட், புனே உட்பட 3 இடங்களில் இருந்து தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்குக் கூட தகுதியானவர்கள் கிடையாது.
சிவசேனா கட்சி என்ற பெயர் காரணமாகவே இவர்களுக்கு இவ்வளவு மதிப்பு. எங்கள் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்சிக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளோம்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கட்சியின் கொறடா அரவிந்த் சாவந்த் இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




