அரசு ரகசியம் பாதுகாப்பு!
🔹 தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லை கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டம். அணைகளில் நீர் இல்லாததால் மழை பெய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் பேச்சு.
🔹 தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் விபி ஜி ராம் ஜி திட்டம் இன்று முதல் அமல். திட்டத்திற்கான நிதியில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 ஏற்க வேண்டும்.
🔹 திமுகவில் 10 பேர் கொண்ட மறு சீரமைப்பு ஆலோசனைக் குழு அமைப்பு. கிளைக்கழகத்தில் தொடங்கி கட்சி கட்டமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும்.
🔹 இன்று நடக்கும் தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என இடதுசாரி கட்சிகள் முடிவு. கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்.
🔹 பொள்ளாச்சியில் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர். அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்படி வழங்கியதாக அறிக்கை வெளியிட்டதால் அதிர்ச்சி.
🔹 தேர்தல் வாக்குறுதி படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி வலுக்கும் போராட்டம்.
🔹 வடலூரில் சாலையின் நடுவே பற்றி எரிந்த தனியார் பேருந்து. அருகில் இருந்த கடைகள், வாகனங்களுக்கும் பரவியதால் பல லட்ச ரூபாய் இழப்பு.
🔹 மயிலாடுதுறை அருகே காதல் ஜோடி உயிரிழந்த விவகாரம். பெண் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதால் பதற்றம்.
🔹 பண்ருட்டி அருகே சாலையில் மோதி கொண்ட இளைஞர்கள். வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் கைது.
🔹 நத்தம் அருகே தனியார் மதுபான பாருக்கு எதிராக மக்கள் போராட்டம். அரசு மருத்துவமனை அருகே உள்ள மதுக்கூடத்தை மூட வேண்டும் என வலியுற்றுத்தல்.
🔹 சிவகாசி அருகே தனியார் நிறுவனத்தின் கிணறு தோண்டும் பணியால் வீடுகள் சேதம். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நள்ளிரவில் சாலை மறியல்.
🔹 மரக்காணம் அருகே போதையில் இளைஞர்கள் அட்டகாசம். சாலையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் மக்கள் அச்சம்.
🔹 மகாராஷ்டிரா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள். மும்பை அந்தேரி சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தம்.
🔹 இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு, வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு.
🔹ஆந்திராவில் மலையில் இருந்து பறக்கப்போவதாக பள்ளத்தில் குதித்த கோயில் பூசாரி. பாறைகளில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்.
🔹 ஹோர்முஸ் நீரிணையில் பழைய நிலைக்கு திரும்பிய கப்பல் போக்குவரத்து. 4 மாதங்களுக்கு பின் ஒரே நாளில் 76 கப்பல்கள் பயணம்.
தடுத்து நிறுத்துக!
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒரு தேசியப் பிரச்சனையாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. வேளாண் விளை பொருள்களுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்காதது, இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது, கடன் சுமை, வறட்சி போன்ற பல காரணங்கள் இதற்கு உண்டு.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்ப கம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரம் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோ றும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், நாளொன் றுக்கு சராசரியாக 35 மாணவர்கள் உயிரி ழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் மாண வர்களின் தற்கொலை விகிதம் 60 சதவீதத்திற் கும் மேல் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த தற் கொலைகளின் எண்ணிக்கையில் மாணவர்க ளின் தற்கொலை 7.6 சதவீதத்திலிருந்து 8.5 சத வீதம் வரை உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரி விக்கின்றன.
இந்திய அளவில் மாணவர்கள் தற்கொலை யில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடி யாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மாணவர்களின் தற்கொலைக்கு தேர்வு முறையே முதல் காரணமாக உள்ளது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர் செய்தியாக உள்ளது. ஒவ்வோராண்டும் நீட் தேர்வின் போது நடை பெறும் மோசடி தொடர் கதையாகிறது.
ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் புதிய கல்விக் கொள்கை தேர்வு முறையை மேலும் சிக்கலாகவும், கடினமானதாகவும் மாற்றி யுள்ளது. இந்த முறை முழுமையாக நடை முறைப்படுத்தப்படும் போது, இந்தியாவின் எதிர்காலம் என்று கருதப்படுகிற மாணவர்க ளின் தற்கொலை விகிதம் மேலும் அதிக ரிக்கவே வாய்ப்பு உண்டு.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கூட சாதியப் பாகுபாடு அதிகரித்து வருகிறது. சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மாண வர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடை பெறுகிறது.
கல்வி வளாகச் சூழல் இன்னமும் பாலின சமத்துவம் உள்ளதாக இல்லை. பாலி யல் பாரபட்சம் மற்றும் கொடுமைகளாலும் தற்கொலைகள் நிகழ்கின்றன. தாராளமய பொருளாதாரக் கொள்கை கல்வியையும் கடைச் சரக்காக மாற்றி வருகிறது.
கல்வி என்பது அறிவு என்பது மாற்றப்பட்டு வியாபாரம் என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் தற்கொ லையை முற்றாக தடுத்து நிறுத்தவும், விலை மதிப்பற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உரிய நட வடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.
ஆனால், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனி நபர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்கள், உயர்மட்ட அரசு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
மேலும், அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிப்பது, கொள்கை முடிவுகளில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கு தலைமைச் செயலக வளாகத்துக்குள் முதல்வரின் அறைக்கு அருகிலேயே தனி அலுவலக அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் அரசு ஊழியர்களோ தமிழக அரசின் அலுவல் விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்ல. அப்படியிருக்கும்போது ரகசிய அரசு கோப்புகளையோ, அமைச்சரவை ஆவணங்களையோ பார்வையிட இவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது அரசு ரகசிய காப்பு சட்டத்தை மீறுவதாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் பொது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் உடனடியாக முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
தலைமைச் செயலகத்தின் வருகைப்பதிவேடுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் கோப்பு நகர்வு பதிவேடுகளை ஆதாரங்களாகக் கொண்டு, முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
