போலீஸ் ராஜ்யம். ?

🔹பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பு நில பத்திரப்பதிவு முறைகேட்டில், திடீர் திருப்பம். தன்னை வழக்கில் சிக்க வைத்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்த சார்பதிவாளர் ஜஸ்டினுக்கு, முன் ஜாமின்.🔹தமிழ்நாட்டில் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை. கணக்கில் வராத 82 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.🔹தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சுய ஆன்லைன் பதிவு நேற்று தொடக்கம். முதலமைச்சர் ஜோசப் விஜய், சுயமாக தனது விவரங்களை பதிவு செய்தார்.🔹குதிரை பேர விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் அதிமுக புகார். 6 அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதாக தவெக மீது குற்றச்சாட்டு.சென்னையிலிருந்து மதுரை சென்ற ஆம்னி பேருந்து பெரம்பலூர் அருகே தீ பிடித்து எரிந்ததுவிஜய்யுடன் இணைந்திருப்பது அனைவரும்  ஊழல்வாதிகள்..அப்புறம் எப்படி இவரு லஞ்சத்த ஒழிப்பாரு?_சகாயம் I.A.S. கேள்விபழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை.திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்புநாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் VIKRAM-1 இன்று காலை 11:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.





போலீஸ் ராஜ்யம் முத­ல­மைச்­சர் விஜய் கையில் லத்தி இல்­லையே தவிர,போலீஸ்

ஆட்­சி­யைத்­தான் அவர் நடத்தி வரு­கி­றார். எதிர்க் கருத்­துச் சொல்­கி­ற­வர்­கள் அனை­வ­ரை­யும் வழக்­குப் பதிவு செய்து கைது செய்து சிறை­யில் அடைப்­ப­தில் குறி­யாக இருக்­கி­றது குதிரை பேர அரசு.

100 கோடி ரூபாய் மதிப்­பி­லான பழனி கோவில் சொத்தை, 2 கோடிக்கு தனி­யா­ருக்­குத் தாரை வார்த்து விட்டு, மாட்­டிக் கொண்­ட­தும் பேய்­முழி முழிக்­கி­றார் அற­நி­லை­யத் துறை அமைச்­சர் ரமேஷ். அது­கு­றித்து சமூக வலை­த­ளத்­தில் விமர்­ச­னம் செய்­கி­ற­வர்­களை, ‘வழக்­குப் போட்­டு­வி­டு­வேன்’ என்­றும் மிரட்­டு­கி­றார்.

பழனி கோயில் நிலத்தை மோச­டி­யாக விற்ற விவ­கா­ரத்­தில் அமைச்­சர் ரமேஷ் மீது சமூக வலை­த­ளங்­க­ளில் அவ­தூறு பரப்­பி­னார் என்று வினோத் சூர்யா குமார் என்­ப­வர் கைது செய்­யப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்ட வினோத் சூர்யா குமார் மீது பொது அமை­தி­யைக் குலைப்­பது, கல­வ­ரத்­தைத் தூண்­டும் வகை­யில் செயல்­ப­டு­வது என விஜய் அரசு வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது. சாதா­ர­ண­மாக ஒரு விமர்­ச­னத்தை அமைச்­சர் மீது வைத்­த­தற்­காக அவ­தூறு வழக்கு எனப் பதிவு செய்­யா­மல் கல­வ­ரத்­தைத் தூண்­டு­வ­தாக வழக்­குப் போடு­கி­றார்­கள். இத­னைத் தான் போலீஸ் ராஜ்­யம் என்­கி­றோம்.

தன் மீதான வழக்கை ரத்து செய்­யக்­கோரி வினோத் சூர்யா குமார் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­தி­ருந்­தார். வழக்கை விசா­ரித்த நீதி­பதி, ‘’சமூக வலை­த­ளப் பதி­வுக்கு அவ­தூறு வழக்­கு­தானே தொடர முடி­யும்?” என்று மிகச் சரி­யான கேள்­வியை எழுப்­பி­னார்.

‘தவ­றான பிரி­வில் வழக்­குப்­ப­திவு செய்­வ­தைத் தவிர்க்­கு­மாறு

அர­சுக்கு அறி­வு­றுத்­துங்­கள்’ என்று அரசு குற்­ற­வி­யல் வழக்­க­றி­ஞ­ரி­டம் நீதி­பதி அறி­வு­றுத்­தி­னார். வழக்கு தொடர்­பாக காவல்­துறை பதி­ல­ளிக்­கு­மாறு உத்­த­ர­விட்ட நீதி­மன்­றம், வழக்கு விசா­ர­ணையை அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்­தி­வைத்­தது. தன் மீதான விமர்­ச­னங்­க­ளைத் தாங்க முடி­யா­மல் இது­போல மிரட்­டு­வதை வழக்­க­மாக வைத்­துள்­ளது விஜய் அரசு.

விஜய் அர­சின் போலீஸ் ராஜ்­யத்­துக்கு எத்­த­னையோ உதா­ர­ணங்­களைச் சொல்ல முடி­யும்.

« யூடி­யூப்­பில் விஜய் அரசு மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை வைத்­தார் என்று ஜூன் 8 ஆம் தேதி­யன்று மது­ரை­யில் மாரி­தாஸ் கைது செய்­யப்­பட்­டார். நீதி­மன்­றம் அவரை சொந்த ஜாமீ­னில் விடு­வித்­தது.

« கிருஷ்­ண­கிரி மாவட்­டம் – ராயக்­கோட்டை அருகே உள்ள போடம்­பட்டி கிரா­மத்­தில் வசிப்­ப­வர் அன்­பா­னந்­தம் (28). தி.மு.க.வின் ஜென்–சி ஒருங்­கி­ணைப்­புக்­குழு உறுப்­பி­ன­ராக உள்­ளார். இவர் தமி­ழக

முதல்­வர் விஜய், நடிகை த்ரிஷா­வு­டன் பிறந்­த­நாள் கொண்­டா­டி­யது குறித்து விமர்­ச­னம் செய்து வீடியோ ஒன்­றைப் பதி­விட்டு இருந்­தார். உடனே இவ­ரைத் தேடி போலீஸ் வந்­து­விட்­டது.

இதை அறிந்த அன்­பா­னந்­தம் தேன்­க­னிக்­கோட்டை நீதி­மன்றநீதி­பதி தினேஷ்­கு­மார் முன்­னி­லை­யில் சர­ண­டைந்­தார்.

அவரைவிசா­ரிக்க நீதி­பதி அனு­ம­தித்­தார். ஒரு நாள் போலீஸ் விசா­ர­ணை­யில் இருந்த அன்­பா­னந்­தத்தை நீதி­ப­தியே நிபந்­தனை ஜாமீ­னில் விடு­வித்து விட்­டார்.

« முன்­னாள் அமைச்­சர், இந்­நாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அனிதா ராதா­கி­ருஷ்­ணனை படுத்­திய பாடு நாட­றி­யும். முத­ல­மைச்­சர் விஜய் பற்றி அவ­தூ­றா­கப் பேசி­ய­தாக ஆத்­தூர் காவல்­து­றை­யி­ன­ரால் தூத்­துக்­குடி மாவட்­டம் – ஆத்­தூ­ரில் கைது செய்­யப்­பட்­டார் முன்­னாள் அமைச்­சர் அனிதா ராதா­கி­ருஷ்­ணன். கைது செய்­யப்­பட்ட அன்றே அவ­ருக்கு

நீதி­மன்­றம் ஜாமீன் வழங்­கி­யது.

« ‘பவு­டர்’ அடித்து மாட்­டிக் கொண்­டார் அமைச்­சர் சரத்­கு­மார். அந்த வீடி­யோவை வெளி­யிட்­டார் என்று தாம்­ப­ரத்­தைச் சேர்ந்த சரண் ஜெய­ரா­மன் தேடப்­பட்­டார். தனது உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் இருக்­கி­றது என்று

பேட்­டியே கொடுத்­தார் சரண் ஜெய­ரா­மன். அவரை வேறு ஒரு வழக்­கில் திடீ­ரென கொளத்­தூர் போலீ­ஸார் கைது செய்­தார்­கள்.

வழக்கை விசா­ரித்த சென்னை எழும்­பூர் நீதி­மன்ற நடு­வர்,

போலீ­சார் சட்­டப்­ப­டி­யான சரி­யான நடை­மு­றை­க­ளைப் (legal process) பின்­பற்­றா­மல் இந்­தக் கைதை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று சுட்­டிக்­காட்­டி­னார். காவல்­துறை தரப்­பின் ரிமாண்ட் (Remand) கோரிக்­கையை ஏற்க மறுத்த நீதி­மன்­றம், சரண் ஜெய­ரா­ம­னின் கைதை உட­ன­டி­யாக ரத்து செய்து (Cancel) அவரை விடு­தலை செய்ய உத்­த­ர­விட்­டது. எந்­த­ள­வுக்கு பழி­வாங்­கும் நோக்­கத்­தோடு கைது நட­வ­டிக்­கை­கள் விஜய் அர­சால் செய்­யப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு இது ஒரு உதா­ர­ணம் ஆகும்.

« ‘புதிய தலை­முறை’ தொலைக்­காட்­சி­யில் விவா­தங்­கள் நடத்­தும் ஊட­க­வி­ய­லா­ளர் விஜ­யனை, விசா­ரணை என்ற பெய­ரால் மிரட்டி அனுப்பி இருக்­கி­றார்­கள். குதிரை பேரத்­தால் உரு­வான விஜய் ஆட்சி, மற்­ற­வர்­கள் மீது குதிரை பேர குற்­றச்­சாட்டை வைத்து திசை திருப்பி வரு­கி­றது. இதில் சம்­பந்­தப்­பட்ட ஒரு­வர், ஊட­க­வி­ய­லா­ளர் விஜ­ய­னி­டம் பேசி­ய­தா­கச் சொல்லி, அவரை திரு­வல்­லிக்­கேணி காவல் துறை விசா­ர­ணைக்கு அழைத்து மிரட்டி உள்­ள­னர்.

சென்னை பத்­தி­ரிக்­கை­யா­ளர் மன்­றப் பொதுச்­செ­ய­லா­ளர் அசீப் இது குறித்து அளித்­துள்ள பேட்­டி­யில், ‘’விஜ­யனை இரவு 10 – 12 மணி வரை­யும் விசா­ரணை செய்­துள்­ளார்­கள். அவர் வீட்­டிற்­குச் சென்­ற­வு­டன் மீண்­டும் 2 மணிக்கு வரச் சொல்லி விசா­ரணை செய்­துள்­ள­னர். 

மீண்­டும் காலை 11 மணிக்கு வர வைத்து 11 – 5 மணி வரை விசா­ரணை என்று அலைக்­க­ழித்­துள்­ள­னர். அப்­போது அவ­ரி­டம் இருந்து மொபைல் போனை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.இந்த விசா­ர­ணை­யில், ‘யார் பெய­ரை­யா­வது சொல்­லுங்­கள்’ என்று தொடர்ந்து கேட்­கப்­பட்ட கேள்­வி­கள் ஏற்­றுக் கொள்ள முடி­யா­தவை. அடிப்­படை உரி­மைக்­கும், கருத்­து­ரி­மைக்­கும் எதி­ரான செயல்’’ என அவர் சொல்லி இருக்­கி­றார்.

குற்­றங்­கள் அதி­க­மாகி விட்­டன. த.வெ.க. நிர்­வா­கி­கள் செய்­யும்

குற்­றச் செயல்­க­ளும் அதி­க­மாகி விட்­டன. ஊழல்­கள் தொடங்கி விட்­டன. ஒவ்­வொரு அமைச்­ச­ராக அம்­ப­லப்­பட்டு வரு­கி­றார்­கள். இவை அனைத்­தை­யும் மறைக்­கவே போலீஸ் பாணியை கையில் எடுத்து அரா­ஜக

ஆட்­சியை நடத்தி வரு­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை