போர்க் குணம்
“வினாத்தாள் கசிவு - இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய நடவடிக்கை. வினாத்தாள் கசிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"மாணவர்களுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார். கடந்த 24 மணி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த 4 முறை அழைப்பு.
சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதியில் மறு எண்ணிக்கை கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு வாபஸ்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - விரைவு நீதிமன்றத்தை அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 17ம் தேதி விசாரணைக்காக தூத்துக்குடி தென்பாகம் போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று உயிரிழப்பு. போலீசார் தாக்கியதாக சிகிச்சையில் இருக்கும்போது அருணாச்சலம் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
"CJP கட்சியினர் போராட்டம் காரணமாக டெல்லி நாடாளுமன்றம் பகுதியில் இணைய சேவை முழுமையாக முடக்கம்
வினாத்தாள் கசிவு வழக்கு விசாரணைக்காகச் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பை CJP நிராகரித்தது.
கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி. தேர்தல் தோல்வி, கட்சியை பலப்படுத்தல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட8 பேருக்கு ஜாமீனை மறுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீது காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு. விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை
தேவைகளை சரி செய்ய வேண்டும்.
விடுதியில் உணவு பட்டியலை கட்டாயம்
காட்சிப்படுத்த வேண்டும். குறைபாடுகள்
இருந்தால் விடுதி கப்பாளர்கள்தான் பொறுப்பு."
*தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி மலையடிவாரப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 லிட்டர் வெளிமாநில மதுப்பாட்டில்கள் பறிமுதல்*
ஈரோடு: கொடுமுடி அருகே வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக காலிங்கராயன் கால்வாயில் இறங்கி மதகை திறக்க முயன்ற விவசாயி பழனிசாமி (50) மதகின் உள்ளே சிக்கி உயிரிழந்தார்
'காங்கி'ன் போர்க் குணம்
காங்கிரஸ் தி.மு.க-வுடன் உறவு கொண்டாலும் எப்போதும் தி.மு.க,வை பலவீனப்படுத்த, தனிமைப்படுத்த முயற்சி செய்துகொண்டே இருக்கும்.
எம்.ஜி.ஆர் தி.மு.க.-வை பிளந்து தனிக்கட்சி துவங்கியதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் தூண்டுதல் இருந்தது என்பதை பலரும் கூறியுள்ளார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரித்தது காங்கிரஸ்.
ராஜீவ் காந்தி கொலையில் ஏற்பட்ட அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ஆனால் மோசமான ஆட்சி தந்து மக்களின் அதிருப்திக்கு ஆளானார்.
அப்போதும் நரசிம்ம ராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததை எதிர்த்து மூப்பனாரும், சிதம்பர மும் தமிழ் மாநில காங்கிரஸை துவங்கினார்கள்.
ஒன்றியத்தில் மூன்றாவது அணி ஆட்சியில் தி.மு.க-வுடன் பங்கேற்றார்கள். அப்போது தி.மு.க மீது ஜெயின் கமிஷனில் ஐயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்ற ஒரு கதையாடலை உருவாக்கி தி.மு.க-வை அமைச்சரவையிலிருந்து விலக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. குஜ்ரால் மறுத்ததால் ஆட்சியைக் கவிழ்த்தது.
வாஜ்பேயி அதைச் செய்ய மறுத்தார். அப்போதுதான் சுப்ரமணிய சுவாமி டீ பார்ட்டி வைத்து சோனியாவையும், ஜெயலலிதாவையும் சந்திக்க வைத்தார்.
ஜெயலலிதா வாஜ்பேயி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதில் ஆட்சி கவிழ்ந்தது.
இப்படி மூன்றாவது அணியும் வலுவிழந்து, காங்கிரஸும், அ.இ.அ.தி.மு.க-வும் இணைந்து தி.மு.க-வை தனிமைப்ப டுத்திய நிலையில், தி.மு.க பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்தது. குறைந்த பட்ச வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து, வாஜ்பேயி கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றது. இதற்கான சூழ்நிலை உருவாக க் காரணம் காங்கிரஸ் தி.மு.க-வை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்த முயன்றதுதான்.
இன்று வரை இந்த பின்னணி தகவல்களை மறைத்துவிட்டு, தி.மு.க பா.ஜ.க.-வுடன் தானாக விரும்பி கூட்டணி வைத்த து போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சுபரமணிய சுவாமி டீ பார்ட்டியால் விளைந்த அழுத்தம், தி.மு.க மீது சுமத்தப்பட்ட அபாண்டமான
குற்றச்சாட்டுகள், திணிக்கப்பட்ட கதையாடல் ஆகியவையே அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தி.மு.க-வை பா.ஜ.க. நோக்கித் தள்ளியது என்றால் மிகையாகாது.
ஆனாலும் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல, தி.மு.க.-வின் கருத்தியலோ, கொள்கைகளோ எந்தவிதத்திலும் மாறுபடவில்லை. குஜராத் கலவரத்திற்குப் பிறகு பா.ஜ.க.-வின் போக்கினை புரிந்துகொண்ட தி.மு.க, மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்றது. அதிலிருந்து தொடர்ந்து காங்கிரஸுடனேயே பயணித்து வந்தது.
அந்த சூழ்நிலையில்தான் திடீரென ஒரு பிரவீன் சக்ரவர்த்தி வருகிறார். இவருக்கும் சுப்ரமணிய சுவாமிக்கும் பல பொருத்தங்கள். அவர் ராகுலின் தூதவராக விஜயுடன் பேசுகிறார். தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த பிறகும் விஜய் ஆதரவு கருத்துக்களைப் பேசுகிறார்.
தி.மு.க – காங்கிரஸ் உறவை பிளக்கிறார். என்ன காரணம்? தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம் கொடுக்கிறது என்பதுதான்.
எப்படியாவது தி.மு.க-வை தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தி களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற முயற்சி மீண்டும் தோன்றியுள்ளது போலத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டு நலனுடனும், தமிழ்நாட்டு வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்த தி.மு.க-வை இந்த சலசலப்புகள் எல்லாம் ஒன்றும் செய்யாது. அதன் வரலாற்றுப் பயணம் தொடரும்.
காங்கிரஸ்தான் பாவம்; பா.ஜ.க.-வையும் எதிர்த்துக்கொண்டு, மாநில கட்சிகளையும் பகைத்துக்கொண்டு திசைதெரியாமல் விழிக்கிறது.
பேச்சில் மட்டும் வீரவசனங்களுக்கு குறையிருக்காது.
-ராஜன் குறை.

