தறி கெட்ட.......?

டைம்ஸ. ஆப் இந்தியா

சொல்வநென்ன?

தேவை­யற்ற அள­வில் அதி­கா­ரத்­திற்கு அடி­ப­ணி­யும் தமிழ்­நாட்­டின் காவல்­து­றை­யால், இங்கு ஊடக சுதந்­தி­ரத்­திற்­கான அறி­கு­றியே இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்­தி­யா­வில் செய்­திக் கட்­டுரை வெளி­யாகி உள்­ளது.

“காவல்­து­றைக்கு சொல்ல வேண்­டிய ஒரு கதை இருக்­கி­றது” என்று தலை­மை­யில் டைம்ஸ் ஆப் இந்­தியா நாளேட்­டில் (20.7.2026) அதன் தமிழ்­நாடு பதிப்பு ஆசி­ரி­யர் அருண் ராம் எழு­தி­யுள்ள செய்­திக் கட்­டு­ரை­யின்

தமி­ழாக்­கம் வரு­மாறு:–

காவல்­து­றைக்கு பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தும் உரிமை உண்டு. ஆனால், விசா­ர­ணை­யையே தண்­ட­னை­யாக மாற்­றும் உரிமை இல்லை. கடந்த வாரம் தொலைக்­காட்சி செய்தி வாசிப்­பா­ளர் விஜ­யன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை, ஒரு தனிப்­பட்ட விசா­ர­ணை­யைப் பற்­றிய கேள்­வி­களை மட்­டு­மல்ல; தமிழ்­நாடு அரசு ஊட­கச் சுதந்­தி­ரத்தை எவ்­வாறு புரிந்­து ­கொள்­கி­றது என்­ப­தை­யும் கேள்­விக்­குள்­ளாக்­கு­கி­றது.

ஜூலை 15 அன்று, சில த.வெ.க. (TVK) சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை தங்­கள் கட்­சிக்கு இழுக்க முயன்­ற­தா­கக் கூறப்­ப­டும் வழக்­கில், காவல்­துறை செய்­தி­யா­ளர் விஜ­யனை விசா­ர­ணைக்கு அழைத்­தது. அதற்கு காவல்­துறை கூறிய கார­ணம் என்­ன­வென்­றால், ஜூலை 11 அன்று

த.வெ.க. சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு லஞ்­சம் வழங்­கி­ய­தாக கைது செய்­யப்­பட்ட திரு­நா­வுக்­க­ரசு, அந்த செய்தி வாசிப்­பா­ள­ரு­டன் சில வாட்ஸ்­அப் தக­வல்­க­ளைப் பரி­மா­றி­யி­ருந்­தார்

என்­பதே.

ஒரு பத்­தி­ரி­கை­யா­ளரை விசா­ர­ணைக்கு அழைப்­ப­தில் தவறு இல்லை. ஆனால், அந்த விசா­ரணை நடை­பெற்ற விதம் அச்­சு­றுத்­தும் தன்மை கொண்­ட­தாக இருந்­தது. அந்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தின் ஆசி­ரி­யர் கூறு­வ­தன்­படி, விஜ­ய­னி­டம் நள்­ளி­ரவு வரை விசா­ரணை நடத்தி வீட்­டிற்கு அனுப்­பிய பின்­ன­ரும், மீண்­டும் அழைத்து அதி­காலை 2 மணி வரை கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன. 

அவ­ரது கைப்­பேசி பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. காலை 11 மணிக்கு மீண்­டும் வரு­மாறு கூறி, அவர் வந்­த­பின் மாலை 7 மணி வரை காத்­தி­ருக்­கச் செய்­த­னர்.

அதே­போல், எந்த ஆதா­ர­மும் இல்­லா­மல், அவர் ‘மேகா­லயா திட்­டம்’ எனக் குறிப்­பி­டப்­பட்ட விவ­கா­ரத்­தில் தொடர்­பு­டை­ய­வர் என்ற வகை­யில் கையொப்­ப­மி­டப்­ப­டாத ஒரு காவல்­துறை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அவர் திரு­நா­வுக்­க­ர­சு­ வு­டன் சில “ஆட்­சே­ப­னைக்­கு­ரிய” செய்­தி­க­ளைப் பரி­மா­றி­ய­தாக அதில் கூறப்­பட்­டது. ஆனால், எதன் அடிப்­ப­டை­யில் அவை

ஆட்­சே­ப­னைக்­கு­ரி­யவை?

பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் தங்­கள் பணி­யின் ஒரு பகு­தி­யாக காவல்­துறை அதி­கா­ரி­கள், அர­சி­யல்­வா­தி­கள், அதி­கா­ரி­கள், சமூக ஆர்­வ­லர்­கள், தக­வல் பரி­மா­றிக் கொள்­வார்­கள், சில சம­யங்­க­ளில் குற்­றச்­சாட்­டுக்­குட்­பட்­ட­வர்­க­ளு­ட­னும் தொடர்­பில் இருப்­பது இயல்­பா­னது. தக­வல் பரி­மாற்­றம் நடந்­தது மட்­டுமே குற்­றத்­திற்­கான சான்­றா­காது.

ஒரு பத்­தி­ரி­கை­யா­ளர் குற்­ற­மற்­ற­வரா அல்­லது குற்­ற­வா­ளியா என்­பதை தீர்­மா­னிப்­பது விசா­ர­ணை­யின் கடமை. ஆனால் அந்த விசா­ரணை நியா­ய­மா­க­வும் மரி­யா­தை­யு­ட­னும் நடை­பெற வேண்­டும். காவல்­துறை பெரும்­பா­லும்

அர­சி­யல் சூழ­லி­லி­ருந்து தனித்து இயங்­கு­வ­தில்லை. ஆட்­சி­யா­ளர்­­களி­ட­மி­ருந்து கிடைக்­கும் சமிக்­ஞை­கள் அவர்­க­ளின் செயல்­பாட்டை பாதிக்­கக்­கூ­டும்.

இந்த அரசு ஊட­கங்­க­ளு­டன் நேர­டி­யாக உரை­யா­டு­வதை விட சமூக ஊட­கங்­கள் வழி­யாக தக­வல் பரி­மாற்­றத்தை விரும்­பு­கி­றது. அது அர­சின் விருப்­ப­மாக இருக்­க­லாம். ஆனால், அதே மனப்­பான்மை பத்­தி­ரி­கை­யா­ளர்­களை நடத்­தும் முறை­யி­லும் வெளிப்­பட்­டால் அது கவ­லைக்­கு­ரி­யது.

ஜூலை 10 அன்று முத­ல­மைச்­சர் கரூ­ருக்கு சென்­ற­போது, செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தும், நுழை­வா­யி­லில் காவல்­து­றை­யி­னர் அவர்­­களைத் தடுத்­த­னர். மூன்று நாட்­­களுக்­குப் பிறகு, பெரம்­ப­லூ­ரில் முத­ல­மைச்­ச­ரின் முதல் தொகுதி பய­ணத்­தின் போது, செய்­தி­யா­ளர்­கள் மேடை­யி­லி­ருந்து மிக­வும் தொலை­வில் அமர வைக்­கப்­பட்­ட­தால், முத­ல­மைச்­சரை சரி­யா­கப் பார்க்­கக்­கூட முடி­ய­வில்லை.

இப்­போது, எந்த வழக்­கி­லும் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் பெயர் இல்­லாத ஒரு செய்­தி­யா­ள­ரின் கைப்­பே­சியே விசா­ரணை என்ற பெய­ரில் பறி ­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஊட­கச் சுதந்­தி­ரம் நில­வு­கி­றது என்ற நல்ல பெய­ரைப் பெற்­றி­ருந்த தமிழ்­நாட்­டிற்கு, இத்­த­கைய காவல்­துறை நட­வ­டிக்­கை­கள் நல்ல அறி­கு­றி­யாக இல்லை.

முதல்­வ­ராக பத­வி­யேற்ற பிறகு, விஜய் “இந்த அர­சின் ஒரே அதி­கார மையம் நான்­தான்” என்று கூறி­யி­ருந்­தார். அது உண்­மை­ யா­னால், பத்­தி­ரி­கை­யா­ளர்­­களையோ, அல்­லது எந்த குடி­ம­க­னையோ விசா­ரிக்­கும் போது காவல்­துறை சட்­டப்­படி, மரி­யா­தை­யு­டன் நடந்து கொள்ள வேண்­டும் என்­பதை அவர் உறுதி செய்ய வேண்­டும்.

ஒரு அரசு, பிர­தான ஊட­கப் பத்­தி­ரி­கைத்­துறை தேவை­யற்­றது என்று நினைத்­தால், முத­லில் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் தாங்­களே தங்­களை தேவை­யற்­ற­வர்­க­ளாக மாற்­றிக் கொண்­டார்­களா என்று சிந்­திக்க வேண்­டும். தெருக்­க­ளில் இறங்கி, மக்­க­ளின் வாழ்க்­கையை பிர­தி­ப­லிக்­கும் கதை­க­ளைத் தேடி, சமூ­கத்­தின் கண்­ணா­டி­யா­கச் செயல்­பட வேண்­டிய பொறுப்பு ஊட­கங்­க­ளுக்கு உண்டு.

அதே நேரத்­தில், காவல்­து­றை­யி­னர் தேவை­யற்ற அள­வில் அதி­கா­ரத்­திற்கு விசு­வா­ச­மாக நடக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவர்­கள் அள­வுக்கு மீறி ‘முனைப்­பு­டன்’ செயல்­ப­டும் போதெல்­லாம், அதன் விளை­வு­களை முத­லில் எதிர்­கொள்­வது பத்­தி­ரி­கை­யா­ளர்­கள்­தான். இது புதிய அனு­ப­வம் அல்ல; பல ஆண்­டு­க­ளாக ஊட­க­ வி­ய­லா­ளர்­கள் இது­போன்ற சூழல்­களை எதிர்­கொண்­டுள்­ள­னர்.

தங்­கள் செய்­தி­க­ளுக்­குத் தகு­தி­யான பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு எந்­தச் சலு­கை­யும் தேவை­யில்லை; அச்­ச­மும் தேவை­யில்லை.

இவ்­வாறு டைம்ஸ் ஆப் இந்­தி­யா­வில் அதன் ஆசி­ரி­யர் அருண்­ராம் எழு­தி­யுள்­ளார்.

தறிகெட்ட அரசாங்கம்...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி (18.07.2026) நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து நேற்று (20.07.2026) காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் வருகை தந்தனர்.காலை 6 மணி அளவில் போலீசார் ஜீ. வி. மார்க்கண்டேயனை அதிரடியாகக் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்கு பின் நேற்று இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். 

இதனையடுத்து நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 இந்நிலையில் இது தொடர்பாக பிரபல ஆங்கில நாளேட்டில் தலையங்கம் வெளியாகியிருந்தாது. 

இதனைக் குறிப்பிட்டு , திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது 
பிரபல ஆங்கில நாளேட்டின் இன்றைய தலையங்கம். 

நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. 

ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை