வாயைத் திறங்க முதல்வரே!

         "சுரன்".              

காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், நீர் வேண்டும் என தமிழக அரசு கேட்கவில்லை என்றும், கர்நாடக அமைச்சர் பேசி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறி உள்ளார்.


 கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;’கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்து விட முடியாது, நீர் வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்று கர்நாடக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சுக்கு என்ன பதில் வைத்து உள்ளார்?


 முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், கடந்த ஐந்து ஆண்டு முழுவதும், மிகச் சரியாக ஜூன் 12ஆம் தேதி அன்று, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டது. 


ஆனால், இந்த ஆண்டு இன்று வரை, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.

மேகதாது அணை கட்டும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாக சென்று, ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தேன்.


காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி நீரை கர்நாடக மாநிலம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.


இதற்கெல்லாம் முதல்வர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடக மாநிலம் தர மறுக்கிறது. 

ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நீரை முதல்வர் கேட்டுப் பெற வேண்டும்.


எம்எல்ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடக மாநிலத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய நீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.


கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1

“கரூ­ருக்கு முத­ல­மைச்­சர் விஜய் செல்­கி­றார் என்­ற­தும் தி.மு.க. பயப்­ப­டு­கிறது. கரூர் மக்­களை முத­ல­மைச்­சர் விஜய் சந்­திப்­ப­தைப் பார்த்து தி.மு.க. பயப்­ப­டு­கி­றது” என்று அமைச்­சர் நிர்­மல்­கு­மார் புலம்பி இருக்­கிறார்.

 எந்த நிர்­மல் குமார்? கரூர் சம்­ப­வத்­தில் போலீஸ் தேடி­ய­போது தலை­ம­றை­வாக இருந்­தாரே அந்த நிர்­மல்­கு­மார். இப்­போது அமைச்­சர் ஆன­தும் ஏதோ தைரி­ய­சா­லி­யைப் போல போக்­குக் காட்­டு­கி­றார்.

கரூ­ரில் ஒவ்­வொரு உயி­ரா­கப் போய்க் கொண்டு இருந்­த­போது பயந்து அங்­கி­ருந்து ஓடி வந்­த­வர்­தான் விஜய். கரூ­ரில் இருக்­கா­மல் திருச்­சிக்கு ஓடி வந்­தார். அவ­ரைச் சுற்றி இருக்­கும் அனை­வ­ரும் செல்­போனை அணைத்து வைத்து விட்­டார்­கள். 

திருச்சி விமான நிலை­யத்­தில் சூழ்ந்து கத்­திய அனைத்து ஊட­கங்­க­ளை­யும் பார்க்­கா­மல் சென்­னைக்கு ஓடி வந்து விட்­டார் விஜய். சென்னை விமான நிலை­யத்­தி­லும் ஊட­கங்­கள் குரல் எழுப்­பி­னார்­கள். அவர்­க­ளைப் பார்க்­கா­மல் பயந்து போய் தனது வீட்­டுக்கு வந்து பதுங்­கிக் கொண்­டார் விஜய்.

அதன்­பி­றகு அவ­ரைப் பல நாட்­கள் பொது­வெளி­யில் காண­வில்லை. வெளியே வர­வில்லை. தனது சுற்­றுப் பய­ணங்­க­ளையே ரத்து செய்து விட்­டார் விஜய்.

41 உயிர்­கள் பலி­யான குடும்­பத்­தைப் பார்க்க விஜய் அதோ வரு­கிறார், இதோ வரு­கி­றார், அன்று வரப் போகி­றார், இன்று வரப்­போ­கி­றார் என்று ஊட­கங்­கள் செய்தி போட்டு விஜய்யை உசுப்­பி­விட்­டார்­களே தவிர, அவர் வரவே இல்லை.41 உயிர்­க­ளைப் பலி கொடுத்த குடும்­பத்­தி­னரை சென்­னைக்கு வர வழைத்­துப் பார்த்த அசிங்­கத்­தை­யும் விஜய்யே செய்­தார்.

27.9.2025 அன்று நடந்த கொடூ­ர­மான சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர்­க­ளாக மூன்று பேர் மீது அப்­போது கரூர் நகர காவல் நிலை­யத்­தில் வழக்­குப் பதி­வா­னது.

 த.வெ.க.வின் கரூர் மேற்கு மாவட்­டச் செய­லா­ளர் மதி­ய­ழ­கன், கட்சி பொதுச்­செ­ய­லா­ளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்­வாகி நிர்­மல்­கு­மார் என்று குறிப்­பி­டப்­பட்­டது. விஜய் பெயர்

அப்­போது சேர்க்­கப்­ப­ட­வில்லை. ‘பழி­வாங்­கும் நட­வ­டிக்கை’ என்று

அப்­போதே சொல்லி இருப்­பார்­கள். 


இருந்­தா­லும், விஜய்க்கு பயம்.

அத­னால்­தான் உடனே சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு நீதி­மன்­றத்தை

நாடி­னார்­கள்.‘போலீஸை வைத்­துச் செய்து விட்­டார்­கள்’ என்று இன்று குற்­றம் சாட்­டு

­கி­றார்­களே. ஆனால் அன்­றைய தினம் விஜய் என்ன பேசி­னார்? ‘‘நான் இங்கு எப்­படி வந்­தேன் என்றே தெரி­ய­வில்லை. இதற்­காக காவல்துறை­யி­ன­ருக்கு நன்றி கூறு­கி­றேன்” என்­று­தான் பேசி­னார்.


‘‘விஜய் அங்கு மதி­யம் 12 மணிக்­குப் பேசு­வார் என்று த.வெ.க. சார்­பில் அறி­விக்­கப்­பட்­ட­தால் அவ­ரைப் பார்க்க காலை முதலே ஏரா­ள­மா­னோர் குவிந்­து­விட்­ட­னர்

 பல மணி­நே­ரம் தண்­ணீர் குடிக்­கா­மல், உணவு அருந்­தா­மல் காத்­தி­ருந்த அந்­தப் பெருங்­கூட்­டம் களைப்­பால் துவண்டு போயி­ருந்த நிலை­யில் இரவு 7 மணிக்­குத்­தான் விஜய் வந்­தார்” என்று ‘தினத்­தந்தி’ நாளி­தழ் (29.9.2025) தலை­யங்­கம் தீட்­டி­யது. 

எனவே விஜய்­யும் அவ­ரது கட்­சிக்­கா­ரர்­க­ளும் சொல்­வது முழுப்­பொய் என்­பதை பழைய நாளி­தழ்­களே சொல்­லும்.

அத­னால்­தான் முன் ஜாமின் கேட்டு புஸ்சி ஆனந்த், சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­யில் மனு போட்­டார். ஜாமின் கிடைக்­குமோ கிடைக்­காதோ என்ற பயத்­தில் தலை­ம­றைவு ஆனார்.இதே­போல் முன் ஜாமின் மனு போட்­ட­வர்­தான் இன்­றைய ஆகாச சூரர் நிர்­மல்­கு­மார். அவ­ரும் எங்கோ பதுங்­கி­னார்.

“நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் அவர்­கள்­தான் எனும் போது, அவர்­கள் தானே நடந்த சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்க வேண்­டும்” என்று சொல்லி புஸ்சி ஆனந்த், நிர்­மல்­கு­மார் ஆகி­யோ­ரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை ரத்து செய்­ததை நிர்­மல்­கு­மார் மறந்து விட்­டாரா? தலை­ம­றை­வாக இருந்த நேரத்­தில் நடந்­ததை அறி­ய­வில்­லையா

அர­சி­யல் கட்­சி­க­ளின் கூட்­டங்­களை முறைப்­ப­டுத்த வேண்­டும் என்று சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தாக்­க­லான வழக்­கில் தீர்ப்­ப­ளித்த நீதி­ய­ர­சர் செந்­தில்­கு­மார், “விஜய்க்கு தலை­மைப் பண்பு இல்லை’’ என்று சொன்­னதை யாரும் மறந்­தி­ருக்க முடி­யாது.

“கரூர் சம்­ப­வத்­தில் பெண்­கள், குழந்­தை­கள், பலி­யான நிலை­யில் அக்­கட்­சித் தொண்­டர்­களை, ரசி­கர்­களை பொறுப்­பற்ற முறை­யில் கைவிட்டு ஓடிய த.வெ.க. தலை­வர் விஜய் உள்­ளிட்ட நிர்­வா­கி­க­ளுக்­குத் தலை­மைப் பண்பு இல்லை. அவர்­கள் சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்­க­வும் இல்லை. த.வெ.க. தனது பொறுப்­பைத் தட்­டிக் கழிக்க முடி­யாது. 

கரூர் விபத்து மனி­த­ரால் உரு­வாக்­கப்­பட்ட பேர­ழிவு” என்று கடு­மை­யான சொற்­க­ளால் குறிப்­பிட்­டார் நீதி­ய­ர­சர் செந்­தில்­கு­மார். விஜய் பயந்து போய் ஓடிப்­போ­னார் என்­பதை சென்னை உயர்­நீ­தி­மன்­றமே சொன்­னது. ‘விஜய் சென்ற பிரச்­சார

வாக­னத்தை ஏன் பறி­மு­தல் செய்­ய­வில்லை?’ என்­றும் நீதி­ய­ர­சர் கேட்­டார்.

புஸ்சி ஆனந்­தும், நிர்­மல்­கு­மா­ரும் தலை­ம­றை­வா­கிய நிலை­யில் த.வெ.க. கரூர் மாவட்­டச் செய­லா­ளர் மதி­ய­ழ­கனை காவல்துறை அன்று கைது செய்­தது.

உடனே, ‘’இலங்கை, நேபா­ளத்தை போல புரட்சி வெடிக்­கும்’’ என்று ‘லாட்­டரி’ மாதிரி பத­வி­க­ளைப் பெற்று வரும் ஆதவ் அர்­ஜூன் பதிவு போட்­டார். இது­வும் நீதி­ப­தி­க­ளால் கண்­டிக்­கப்­பட்­டது.

 ‘இவர்­கள் என்ன சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வர்­களா?’ என்று கேட்­டது உயர்­நீ­தி­

மன்­றம். இதன் மீது சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்க அர­சுக்கு

உத்­த­ர­விட்­டார் நீதி­பதி. அதன்­பி­றகு ஆதவ் அர்­ஜூ­னா­வும் தலை­ம­றைவு ஆனார். இது பயத்­தி­னால் தானே?

.             -முரசொலி                                     . 













இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை