எண்ணித் துணிக கர்மம்
பிரதமர் மோடியி டம் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய நார்வே பெண் பத்திரிகையாளரின் சமூகவலைதள பதிவுகள் இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்ப டுத்தியுள்ளன.
கடந்த மே மாதத்தில் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடந்த இந்தியா–நார்வே உச்சி மாநாட்டின் போது, அங்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியிடம் நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங் ஸ்வென் சன் பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
உலகிலேயே மிக உயர்ந்த பத்திரிகை சுதந்திரம் கொண்ட நார்வே நாட்டின் பத்திரிகையா ளர்களின் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள் என்று அவர் கேட்டார்.
உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் நார்வே 1வது இடத்திலும், இந்தியா 157வது இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி அவர் கேட்ட இந்த கேள்வியை பிரதமர் மோடி புறக்கணித்து விட்டு அங் கிருந்து சென்றார்.
அதே நாளில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் பிற பத்திரிகையாளர்களுடன் இவரையும் அழைத்து இந்தியாவின் பண்டைய கலாசாரம் குறித்து விளக்கம் அளித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடியின் ஆதரவா ளர்கள்
அந்தபெண் பத்திரிகையாளரை வெளிநாட்டு உளவுத்துறை முகவர் என்றும், முட்டாள் பெண் என்றும் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர்.
மக்கள் வரிப்பணத்தில் மாம்பழம் சாப்பிடுகிறார்கள்!
தற்போது இந்த பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங் ஸ்வென்சன் இந்தி யாவின் அரசியல் மற் றும் சமூக நிலவரங்களை சமூகவலைதளங்களில் தொடர்ந்து கண்காணித்து காரசாரமான கருத்துக் களை பதிவிட்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் சமீ பத்திய ஆஸ்திரேலிய பய ணத்தை விமர்சித்து அவர், ‘பிரதமர் மோடி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுற்றி வருவதை விரும்புகிறார். அவர் நினைத்திருந்தால் ஆஸ்திரேலியாவில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டு, அங்கு அரசு வழங்கும் தரமான இலவச கல்வி முறை மற்றும் தொழில்நுட்ப கற்பித் தல் முறைகளை பார்த் திருக்கலாம். ஆனால் எனக்கு என்ன கவலை?’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘இந்த வாரத்தில் பெய்த கன மழையால் நடந்த விபத்துக்களில் 23 பேர் உயிரிழந்த ஸ்மார்ட் சிட்டியான சூரத் நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்த போது, பிரதமர் வெளிநாட்டில் நடன நிகழ்ச்சி களை ரசித்துக் கொண்டிருக்கிறார்
; 15 ஆண்டுகள் முதல்வ ராகவும் 15 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்தும் சொந்த ஊரை கூட ஊழலின்றி ஆள முடியாதவர் வெளிநாட்டில் பொழுதை கழிக்கிறார்’ என்று சாடியுள்ளார்.
ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இந்திய ஊடகங்கள்!
இந்தியாவின் அரசு பள்ளிகளின் அவல நிலை குறித்து கேள்வி எழுப்பி யுள்ள அவர், 5 டிரில்லி யன் டாலர் பொருளா தாரத்தை பற்றி பேசும் நாட்டில் மக்களுக்கு என்ன மாதிரியான வசதி கள் செய்யப்பட்டுள்ளன என்று கேட்டுள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோர் மக்கள் வரிப்பணத்தில் மாம்பழம் சாப்பிடுவதை கிண்டல் செய்துள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்கள் பிரச்னைகளின் போது களத்தில் இல்லாததையும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் ஒன் றிய அரசுக்கு ஆதரவாக கரும்பலகையை வைத்து பாடம் நடத்துவதாகவும், கடந்த 10ம் தேதியன்று பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்ப டத்தை பகிர்ந்து தனக்கு நடந்த மறக்க முடியாத தருணம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு, இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு – 2026 (All India Survey on Higher Education – AISHE) அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுவது மட்டுமின்றி, அவை மூன்று மடங்கிற்கும் மேல் அதிவேகமாக உருவெடுத்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 550-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை உயர் கல்வித்துறையின் கீழ் இணைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கை 76.9 சதவீதம் அதிகரித்து, 723-லிருந்து 1,279-ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிர்வாகத்தின் (Deemed Universities) கீழ் இயங்குபவை.
அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் 149.3 சதவீதம் மூன்று மடங்கிற்கும் மேல் விரிவடைந்துள்ளன.
தனியார் பல்கலைக்கழகங்களை ஒப்பிடுகையில் அரசுப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 504-லிருந்து 733 ஆக உயர்ந்து, ஒப்பீட்டளவில் 45.4 சதவீதம் மிகவும் குறைந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
மாநில அளவில், குஜராத் மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக விரிவடைந்துள்ளது.
தற்போது 57 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ள ராஜஸ்தானை விட, குஜராத் 2023-24 ஆம் ஆண்டில் 51 பல்கலைக்கழகங்களைச் சேர்த்து, மொத்த தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 67 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் 52 தனியார் பல்கலைக்கழகங்களுடன் இரண்டாம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா 45 மற்றும் 42 தனியார் பல்கலைக்கழகங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதில் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளன.
இருப்பினும், அரசு பல்கலைக்கழகங்களே பெரும்பான்மையான மாணவர்களுக்கு முறையான கல்வி அளித்து வருகின்றன.
ஆனால், அரசு பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஐந்தில் நான்கு பங்கிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு என்ற விகிதத்தில் (81.3% லிருந்து 68.1% வரை) மிகவும் குறைந்துள்ளது.
அதையே தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஐந்தில் ஒரு பங்கிலிருந்து மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் (18.6% லிருந்து 31.9 வரை) பூதாகரமாக அதிகரித்துள்ளது.
மொத்தமாக, அரசு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி விகிதம் 42.5% ஆகவும், தனியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி விகிதம் 191.8% மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio – GER), 2013 – 2014-ல் 23.0 ஆக இருந்ததிலிருந்து 2023 -2024-ல் 30.0 ஆக விரிவடைந்துள்ளது. மாணவர்களின் சேர்க்கை விகிதம் மாணவர்களை விட மாணவிகளுடையது அதிகமாக உள்ளது.
மாணவர்களின் GER – 28.9 ஆக இருக்கும்போது, மாணவிகளின் GER – 31.2 உயர்ந்துள்ளது. இத்தரவுகள், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மாணவிகள் அதிக சேர்க்கை விகிதத்தைப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. காவி கும்பல் மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது
இதனால், ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் மாற்றி கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது.


