த.வெ.க,வை வெறுக்கிறோம்..

9ஆம் வகுப்பில் 3வது மொழி வேண்டாம்”: 
-உச்ச நீதிமன்றம்

நவோதயா பள்ளி வழக்கு விசாரணையில், 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கில் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து  முந்தைய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. 

தான்.


இதைத்தொடர்ந்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில்,  ”நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும்.


இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது.

தமிழகத்தில் 38 உறைவிட மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் படித்த 1,340 மாணவர்கள் 2024-2025 கல்வியண்டில் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்

. பல மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். 


கூடுதல் செலவை ஏற்படுத்தும் நவோதயா பள்ளிகளை கொண்டு வர நினைக்கும் மத்திய அரசு, சமகிரக சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் உள்ளது. 


கூடுதலாக நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. 


இந்தசூழலில் நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு இன்று (ஜூலை 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. 


அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ”இந்த வழக்கை 12 வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். 

இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், ”ஏற்கனவே இந்த கடிதத்தை கொடுத்திருக்கிறீர்கள்.


தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கிறது.  ஏன் நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறீர்கள்? என்று தெரிவியவில்லை.  இந்த அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்று கூறினர். 


மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ”தமிழ்நாட்டில் 1500க்கும் அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்தியை காரணம் காட்டி தமிழக அரசு நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறது.


இதில் உள்நோக்கம் இருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கல்வியில் சமநிலை இல்லாத சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார். 


இதைகேட்ட நீதிபதிகள்,  ”தமிழ்நாட்டில் யாரும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்க்கின்றனர்.  இதை மனதில் வைத்து வாதங்களை முன் வையுங்கள்” என்று கூறினர்.  


தமிழக அரசு சார்பில், ”நவோதயா பள்ளிகள் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதால் 12 வாரம் கால அவகாசம் வேண்டும்” என்று  கேட்டுக்கொள்ளப்பட்டது. 


இதையடுத்து நீதிபதிகள்,  ”மத்திய அரசு  அனைத்து செலவுகளையும் செய்யும். நீங்கள் நிலத்தை மட்டும் வழங்கினால் போதும். மற்ற எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன.   தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் அதை மறுக்கிறீர்கள்?

‘நவோதயா பள்ளி மத்திய அரசால் நடத்தப்படுகிறது என்பதால், அது எங்களுக்கு எதற்கு என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். 


தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,  ”மூன்றாவது மொழி என்பது  பிரச்சினைக்குரியதாகவே இருக்கிறது.  தயவுசெய்து 9 ஆம் வகுப்பில் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்தாதீர்கள்.


பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு அது கூடுதல் சுமையாக இருக்கும்.   5 அல்லது 6 ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியைத் தொடங்கலாம். 9 ஆம் வகுப்புக்குள் அந்த மூன்றாவது மொழியை நிறுத்திவிட வேண்டும்.


மாணவர்கள் படும் மன அழுத்தத்தைப் பாருங்கள். அதுபோன்று மூன்றாவது மொழியாக இந்திதான் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமஸ்கிருதம் கூட கற்கலாம்” என்று கூறினர். 


தொடர்ந்து தமிழக அரசு கேட்ட 12 வார கால அவகாசத்துக்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள்,  வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 





தவெகவின் போக்கை வெறுக்கிறோம்.. 


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவதை இடதுசாரிகள் விமர்சனம் செய்து வருகின்றன.


அந்த வகையில் சிபிஐ எம்பி சுப்பராயன் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. 
தவெக ஆட்சி அமைப்பதற்கு இடதுசாரி இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமைச்சரவையில் பங்கேற்ற மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார்கள்.

அதன்படி வெளியில் இருந்து மட்டும் ஆதரவு என்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியாக இருந்தன. இதனிடையில் சில தினங்களுக்கு முன்பாக சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக சூழல் வந்துள்ளதாக பேசியிருந்தார்.


அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கெடுக்க போகிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


இப்படியான நிலையில் சிபிஐ கட்சியை சார்ந்த எம்பி சுப்பராயன் இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். சமீபத்தில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்த சுப்பராயன் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.


அப்போது அவரிடம் தவெக அமைச்சரவையில் சிபிஐ இடம்பெறுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பராயன், ஒரு போடும் அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதோடு மாநில செயலாளர் வீரபாண்டியனே அமைச்சரவையில் சிபிஐ பங்கெடுக்கும் என்று சொல்லவில்லை என மறுத்துள்ளார். அவர் அப்படி சொல்லி இருக்கவும் மாட்டார். ஏனென்றால் கட்சி அதுபோல் ஒரு முடிவினை எடுக்கவில்லை.

உறுதிப்பட ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். உங்களுடைய மற்ற நடவடிக்கையில் பங்கு பெற மாட்டோம். மற்ற நடவடிக்கைகளிலும் ஆதரவு அளிக்க மாட்டோம் என அன்றைக்கே சிபிஐ மாநில செயலாளர் அறிவித்து விட்டார்.

தற்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார் எம்பி சுப்பராயன்.

தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாகவும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு இரண்டு மாதக்காலம் என்பது ஒரு கட்சியை மதிப்பிட செய்வதற்கான காலம் என்று கருதி விட முடியாது.

ஆனாலும் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை தவெக கடுமையாக எதிர்த்தது.

அந்த கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைத்த தவெக அரசு, தற்போது அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டும். இது குறையாமல் அதிகரித்து கொண்டிருப்பது ஆபத்தானது.

இந்த போக்கை நாங்கள் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதோடு அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையும் போக்கை வெறுக்கிறோம். எதிர்க்கிறோம் என்றும் விமர்சனங்களை சுப்பராயன் முன்வைத்துள்ளார்.


அவருடைய இந்த பேட்டி தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.


முன்னதாக ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், இந்த மண்ணில் இருந்தும் ஒருவர் அமைச்சராக வரலாம்.


அதற்கான சூழல் வந்து கொண்டிருக்கிறது என பேசியிருந்தார்.

அவருடைய இந்த கருத்தினை தொடர்ந்து தவெக அமைச்சரவையில் இடம்பெற சிபிஐ தயாராகி வருகிறது என்ற அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

விசிக தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் பங்கேற்றால் வரவேற்போம் எனவும் தெரிவித்து இருந்தார்.

இப்படியான நிலையில் தவெக அமைச்சரவையில் சிபிஐ இடம் பெறாது என திட்டவட்டமாக எம்பி சுப்பராயன் தற்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் சிறையில் நடந்த கொலை!

‘தூய­சக்தி’ ஆட்­சி­யில் கொலை­கொ­லை­யாய் கொலை­கள் நடப்­பதை தினந்­தோ­றும் பார்த்து வரு­கி­றோம். உள்­து­றை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் விஜய் எப்­போ­தும் ‘சைலண்ட்’ மோடில் இருப்­ப­தால் சிறைக்­குள்­ளும் கொலை­கள் நடக்­கத் தொடங்கி இருக்­கின்­றன.


‘இதோ இந்த நிமி­டம் முதல் எந்­தத் தவ­றும் நடக்க விட­மாட்­டேன்’ என்று விஜய் தனது பதவி ஏற்­பின் போது சொன்­னார். அந்த நிமி­டம் முதல் தான் அதி­க­மான தவ­று­கள் நடக்­கின்­றன. அதி­லும் குறிப்­பாக அவ­ரது உள்­து­றை­யில் தான் அதி­கப்­ப­டி­யான தவ­று­கள் நடக்­கின்­றது.


மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான சபரி வர்­மன் கொலை த.வெ.க. ஆட்சி யாரு­டைய கட்­டுப்­பாட்­டி­லும் இல்லை என்­ப­தற்கு உதா­ர­ணம் சொல்­லத்­தக்­க­தாக நடந்­துள்­ளது.


கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் தென்­தா­ம­ரை­கு­ளம் காவல் நிலை­யத்­திற்கு உட்­பட்ட ஈத்­தங்­காடு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சபரி வர்­மன். 35 வய­தான இவர் மாற்­றுத்­தி­ற­னாளி ஆவார். இவர் செந்­தா­ம­ரைக்­கு­ளம் காவல் நிலை­யத்­திற்கு மாமூல் கொடுக்­காத கார­ணத்­தால் குட்கா விற்­பனை செய்­த­தாக அவர் மீது பொய் வழக்­குப் போட்­டுள்­ளார்­கள். கடந்த 9 தேதி நாகர்­கோவில் கிளைச் சிறைச்­சா­லை­யில் அடைத்­த­னர். 


இந்த நிலை­யில் கடந்த

14 ஆம் தேதி காலை­யில் அவர் சிறை­யில் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறி ஆசா­ரி­பள்­ளத்­தில் உள்ள கன்­னி­யா­கு­மரி அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­

ம­னை­யில் சேர்க்­கப்பட்­டார். உடல் பிரே­தப் பரி­சோ­தனை அறை­யில் வைக்­கப்­பட்­டது.


அவ­ரது சாவில் சந்­தே­கம் இருப்­ப­தாக உற­வி­னர்­கள் போராட்­டம் நடத்­தி­னர். இந்த சாவு குறித்து நாகர்­கோ­வில் நீதி­பதி விசா­ரணை மேற்­கொண்­டார். கன்­னி­யா­கு­மரி, நெல்லை, தூத்­துக்­குடி மாவட்ட மருத்­து­வர்­கள் ஆய்வு மேற்­கொண்­ட­னர். உடற்­கூ­றாய்­வில் சபரி வர்­மனை சிறை­யில் அடித்­துக் கொலை செய்­யப்­பட்­டது உறு­தி­யா­னது.


அத­னைத் தொடர்ந்து நாகர்­கோ­வில் சட்­ட­மன்ற தி.மு.க. உறுப்­பி­னர் ஆஸ்­டின் தலை­மை­யில் மாவட்ட நிர்­வா­கத்­து­டன் பேச்சு வார்த்தை நடத்­தப்­பட்­டது. ‘உண்மை குற்­ற­வா­ளி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். பாதிக்­கப்­பட்ட சபரி வர்­மன் குடும்­பத்­துக்கு அரசு வேலை மற்­றும் நிவா­ர­ணம் வழங்க வேண்­டும்’ என்று கோரிக்கை வைக்­கப்­பட்­டது.


பிரச்­சி­னை­யில் தொடர்­பு­டை­யது காவ­லர்­கள் என்­ப­தா­லும், சிறை­யில்

மர­ணம் அடைந்­துள்­ள­தால் ஆட்­சிக்கு கெட்ட பெயர் வரும் என்­ப­தா­லும் இதனை மறைக்க முயற்சி செய்­தது த.வெ.க. அரசு.


சபரி வர்­ம­னின் மனைவி ஆனந்­த­வல்­லி­யி­டம் புகார் மனு பெற்று நேச­மணி நகர் காவல் நிலை­யத்­தில் இயற்­கைக்கு மாறான மர­ணம் என்று வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது. பிரச்­சினை பெரி­தா­னால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்­றி­விட்­டோம் என்று சொல்லி பிரச்­சி­னையை அமுக்­கப் பார்த்­தது

த.வெ.க. அரசு

இந்த நிலை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்

கடு­மை­யான அறிக்­கையை வெளி­யிட்­டார். தி.மு.க. வழக்­க­றி­ஞர் அணி இணைச் செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் பரந்­தா­மன், சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் இதற்­கா­கவே செய்­தி­யா­ளர் சந்­திப்பை நடத்­தி­னார்.

‘விசா­ர­ணைக் கைதி­யான சபரி வர்­மன் மர­ணத்தை த.வெ.க. அரசு கண்­டு­கொள்­ள­வில்லை. சிறை­யில் கைதியை அடித்தே கொலை செய்­துள்­ளார்­கள். கைதி கொல்­லப்­பட்ட நாளில் காவல்­து­றை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் விஜய், பெரம்­பூ­ரில் சூட்­டிங் நடத்­திக் கொண்டு இருந்­தார்.


 எங்­க­ளுக்கு ரீல்ஸ் வேண்­டாம்.நீதி வேண்­டும்’ என்று சொன்ன வழக்­க­றி­ஞர் பரந்­தா­மன், இதில் தொடர்­பு­டைய காவ­லர்­கள் யார் யார் என்­ப­தை­யும் அம்­ப­லப்­ப­டுத்­தி­னார். இவர்­கள் மீது கொலை வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும் என்று குறிப்­பிட்­டார். இல்­லா­விட்­டால் சி.பி.ஐ.

விசா­ரணை கேட்டு நாங்­கள் வழக்­குத் தாக்­கல் செய்­வோம் என்­றார். இது

த.வெ.க. அர­சுக்கு கடு­மை­யான நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது.

மூன்று மணி நேர ஆலோ­ச­னைக்­குப் பிறகு தொடர்­பு­டைய காவ­லர்­களை கைது செய்­யும் முடிவை த.வெ.க. அரசு எடுத்­தது. சபரி வர்­மன் கொலை

சம்­ப­வம் தொடர்­பாக தலைமை சிறைக் காவ­லர் சுரேஷ், சிறை வார்­டன் ஜெகன், இரண்­டாம் நிலை காவ­லர் சிவ­கு­மார் ஆகிய மூவ­ரை­யும் கைது செய்தே ஆக வேண்­டிய நெருக்­க­டிக்கு உள்­ளா­னது த.வெ.க. அரசு.

எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி அறிக்கை, தி.மு.க. தலை­மைக் கழ­கம் சார்­பில் பரந்­தா­மன் பேட்டி ஆகி­யவை வரா­மல் இருந்­தால் மாற்­றுத்­தி­ற­னாளி சபரி வர்­மன் கொலைக்கு நீதி கிடைத்­தி­ருக்­காது. ‘இயற்­கைக்கு மாறான மர­ணம்’ என்றே மூடி மறைத்­தி­ருப்­பார்­கள்.

மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான சபரி வர்­மன் கொடூ­ர­மான முறை­யில் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். உடற்­கூறு அறிக்­கை­யின் படி அவ­ரது உட­லில்

19 இடங்­க­ளில் படு­கா­யம் இருப்­ப­தா­கச் சொல்­லப்­பட்­டுள்­ளது.

1. வலது கையில் 6 இடங்­க­ளில் காயம்

2. வலது கால் மற்­றும் மூட்­டுப் பகு­தி­யில் காயம்.

3. இடது கால் மற்­றும் மூட்­டுப் பகு­தி­யில் காயம்

4. இடது நெஞ்­சின் கீழ் பகு­தி­யில் 7 CM அள­வில் காயம்.

5. தலை­யில் இரண்டு இடங்­க­ளில் காயம்.

6. மண்டை ஓடு சேதம்.

7. பின்­னங்­க­ழுத்­தில் பலத்த காயம்.

8. பின்­னந் தலை­யில் பலத்த காயம்.

– இப்­படி உடல் முழுக்க காயங்­கள். அதா­வது அடித்தே கொன்­றுள்­ளது த.வெ.க. ஆட்­சி­யில் சிறைத் துறை அதி­கா­ரி­கள். யார் கொடுத்த தைரி­யத்­தில் இவை நடக்­கி­றது?

ஒரு பக்­கம் குற்­றங்­க­ளைக் கண்டு கொள்­ளாத, தடுக்க முடி­யாத போலீஸ். இன்­னொரு பக்­கம், சிறை­யில் வைக்­கப்­பட்­டுள்ள கைதியை அடித்­துக்

கொள்­ளும் போலீஸ். இது­தான் விஜய் ஆட்­சிக் கால போலீஸ். ஒரு ஆட்சி

எப்­படி இருக்­கக் கூடாது என்­ப­தற்கு உதா­ர­ண­மாக நடந்து கொண்­டி­ருக்­கிறது விஜய் தூயசக்தி ஆட்சி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை