சென்ற 100நாட்கள்......

📄 முதலமைச்சர் அலுவலக டெண்டர் இறுதியாகும் முன்பே பணிகளைத் தொடங்கிய விவகாரம். பதிலுரையிலும்  விளக்கம் அளிக்காததால் மேலும் வலுக்கும் சந்தேகம்.📄கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசு. சட்டப்பேரவையில் கர்நாடகத்தின் versionயே அமைச்சர் எதிரொலித்ததாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.📄தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட எந்த தடையும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் விளக்கம்.📄சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல். 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ரயில்வே வாரியம் ஒப்புதல்.📄சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் வகையில் புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை. பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.இந்தியாவின் கடனை அடைக்க அமைச்சர் கில்லி சரத் சொன்ன  யோசனை.நிர்மலா சீதாராமன் கவனிக்கவும்.

அதானியை எதிர்த்து செய்தியா .கைது!

அதானி குழுமம் குறித்து ‘தி வாசிங்டன் போஸ்ட்’  செய்தி நிறுவனத்துடன் இணைந்து கட்டுரை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் ரவி நாயரின் இல்லத்தில், டில்லி காவல்துறையின் உதவியுடன் குஜராத் காவல்துறை தீவிர சோதனை மேற் கொண்டது.

அதானி குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரவி நாயர் மீது முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இச்செய்தியை வெளி யிட்ட ‘தி வாசிங்டன் போஸ்ட்’ நிறு வனத்தின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற நடுவரின் சோதனை ஆணையைக் காட்டி காவல் துறையினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது ரவி நாயரின் 2 கைப்பேசிகள், அவருடைய மகனின் மடிக்கணினி மற்றும் சம்பவ இடத்தில் தற்செயலாக இருந்த, இவ்வழக்கில் தொடர்பில்லாத அவருடைய நண்பர் ஒருவரின் மடிக் கணினி மற்றும் அய்பேட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.டிஜிட்டல் சாதனங்களைப் பறி முதல் செய்யும்போது, அவற்றில் உள்ள தரவுகள் பின்னர் மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வழங்கப்படும் ‘ஹேஷ் வேல்யூ’ – (டிஜிட்டல் சான்றொப்ப எண்) விவரங்களை வழங்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர் .பத்திரிகையாளர் மீதான இந்த நடவடிக்கை ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு அதானியை விமர்சித்தால் கைது!இங்கு ஒரு நடிகையை விமர்சித்தால் கைது!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?மூன்று மாதங்­க­ளில்  வந்த பயம்!

சுதந்­திர தினத்­தன்று கொடி ஏற்­றிய முத­ல­மைச்­சர் விஜய்­யின் மானம் காற்­றில் பறந்­தது. வெட்­கமோ, கூச்­சமோ இல்­லா­மல் ஒரு

நடி­கையை முன்­வ­ரி­சை­யில் உட்­கார வைத்து, இரு­வ­ரும் மாறி மாறி சல்­யூட் வைத்­துள்ள காட்­சியை அவ­ருக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளா­லேயே சகிக்க முடி­ய­வில்லை.

 அசிங்­கத்­தை­யும் அரு­வ­ருப்­பை­யும் பட்­ட­வர்த்­த­ன­ மா­கச் செய்­வ­தன்­மூ­ல­மாக அதனை நியா­யப்­ப­டுத்த நினைக்­கி­ற­வர் ­தான் இன்று தமிழ்­நாட்­டுக்கு முத­ல­மைச்­ச­ராக வந்­துள்­ளார்.

மூன்றே மாதங்­க­ளில் அவ­ருக்கு தனது செல்­வாக்கு நிலைக்­குமா, பதவி நிலைக்­குமா என்ற பயம் வந்­து­விட்­டது. அதை­யும் அவர் உரையே காட்­டிக் கொடுத்­து­விட்­டது.

கொடி ஏற்­றி­விட்டு முத­ல­மைச்­சர் விஜய் பேசு­கி­றார்... “எல்­லோ­ரும் வாக்­க­ளித்­து­விட்­டோம், விஜய்யை ஜெயிக்க வைத்து முத­ல­மைச்­சர்

ஆக்­கி­விட்­டோம், எனவே கட­மை­யெல்­லாம் முடிந்து விட்­டது என்று யாரும் ஒதுங்­கிப் போய்­வி­டா­தீர்­கள். இனி­மேல்­தான் நீங்­கள் நம்­மு­டனே, அர­சு­டனே இருக்க வேண்­டும்.

 அப்­போ­து­தான் உங்­க­ளுக்­காக இருக்­கிற அனைத்து நல்ல திட்­டங்­க­ளை­யும் என்­னால் செயல்­ப­டுத்த முடி­யும்” என்று அழுது புலம்பி இருக்­கி­றார்.

இந்­தப் புலம்­ப­லுக்கு, இந்த அழு­கைக்கு என்ன கார­ணம்? அவரை நம்பி வாக்­க­ளித்­த­வர்­கள், ‘தவறு செய்­து­விட்­டோம்’ என்று வருந்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள். 10 வயது சிறுமி கோவை­யில் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்­டுச் சிதைக்­கப்­பட்­ட­போது அதை மறைக்க நினைத்­தது விஜய் அரசு. 

‘நீங்க ஆ­க்ஷன் ஹீரோ... தப்பு நடந்தா நட­ வ­டிக்கை எடுப்­பீங்­கன்னு நினைச்சு தானே வாக்­க­ளித்­தோம்’ என்று ஒரு பெண் கத­றி­னாரே. இப்­படி பல பேரும் கத­றிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

தனது படத்­தைத் தயா­ரித்த சினிமா தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மகு­டம் சூட்­டிக் கொண்டு இருக்­கி­றார் விஜய்.

‘ஜன­நா­ய­கன்’ படத்­தைத் தயா­ரித்த வெங்­கட நாரா­யணா தமிழ் நாடு அர­சின் டெல்லி சிறப்­புப் பிர­தி­நி­தி­யாம். ‘பிகில்’, ‘கோட்’ படத்தை தயா­ரித்த அர்ச்­சனா கல்­பாத்தி கோவில்­க­ளுக்­கான அறங்­கா­வ­லர்­க­ளைத் தேர்வு செய்­யப் போகி­றா­ராம்


. ‘லியோ’ படத்­தைத் தயா­ரித்த ஜெக­தீஷ் பழ­னி­சா­மி­தான் முத­ல­மைச்­ச­ரின் தனிச் செய­லா­ளர். தனது ஜோசி­ய­ருக்கு மகு­டம். தேர்­த­லுக்கு முன்­ன­தாக தனக்கு செலவு செய்­த­வ­ருக்கு பதவி. இது­தான் நடக்­கி­றது. 

இதை எல்­லாம் தலை­யாட்டி ஏற்­றுக் கொள்­வார்­கள் மக்­கள் என்று நினைக்­கி­றாரா விஜய்?

பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் நடக்­காத நாள் இல்லை. இதை விஜய் அரசு மறைக்­கும் என்­ப­தற்கு உதா­ர­ணம் தான் கோவைச் சம்­ப­வம். போதை ­ம­ருந்து நட­மாட்­டம் துளி­யும் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. போதைப் பொருள் நட­மாட்­டம் குறித்து தக­வல் கொடுத்த கார­ணத்­தால் கோவை மாண­வன் அமு­தன் அந்­தக் கும்­ப­லால் அடித்தே கொல்­லப்­பட்­டுள்­ளார்.

 அதையே மறைக்­கும் வகை­யில், ‘இது கோஷ்டி தக­ரா­றால் ஏற்­பட்ட மர­ணம்’ என்று சட்­ட­மன்­றத்­தில் சொன்­னார் அமைச்­சர் ராஜ்­மோ­கன். காவல் துறை­யைக் கையில் வைத்­துள்ள முத­ல­மைச்­சர் விஜய், வாய் திறக்­க­வில்லை.அமைச்­சர்­கள் மீது, எம்.எல்.ஏ.க்கள் மீது வந்த புகார் மீதா­வது நட­ வ­டிக்கை எடுத்­துள்­ளாரா விஜய்? திரு­வை­குண்­டம் எம்.எல்.ஏ. சர­வ­ணன் ­மீது விஜய் ரசிகை ஒரு­வரே பாலி­யல் புகார் சொன்­னார். அந்த

ரசி­கையை கட்­சி­யை­விட்டு நீக்­கி­விட்டு சர­வ­ண­னுக்கு போலீஸ் பாது­காப்பு கொடுத்­துள்­ளார் விஜய். ‘அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னத்­தில்

லஞ்­சம்’ என குற்­றம் சாட்­டிய த.வெ.க. வழக்­க­றி­ஞர் கட்­சியை விட்டு

நீக்­கப்­பட்­டுள்­ளார். பவு­டர் பயன்­ப­டுத்தி அதை வீடியோ எடுத்­துப் போட்ட அமைச்­சர் சரத்­கு­மார் இன்­ன­மும் அமைச்­ச­ர­வை­யில் இருக்­கி­றார்.

 100 கோடி ரூபாய் மதிப்­பி­லான கோவில் சொத்தை அப­க­ரித்த செய­லுக்­குப் பொறுப்­பேற்க வேண்­டிய அமைச்­சர் ரமேஷ் இன்­ன­மும் அமைச்­ச­ரா­கத் தான் நீடிக்­கி­றார். எவர்­மீ­தும் இது­வரை விஜய் நட­வ­டிக்கை எடுத்­தது இல்லை.

அர­சைப் பற்றி விமர்­சித்து ‘ட்விட்­டர்’ போட்­டால் கைது. நீதி­மன்­றங்­கள் நித்­த­மும் த.வெ.க. ஆட்­சி­யா­ளர்­கள்­மீது தலை­யில் கொட்­டு­கின்­றன. 

சொர­ணையே இல்லை இவர்­க­ளுக்கு. இப்­ப­டித்­தான் போய்க் கொண்டு இருக்­கி­றது ஆட்சி. இதை எல்­லாம் மக்­கள் சகித்­துக் கொள்­வார்­கள் என்று நினைக்­கி­றார் விஜய்.

சுதந்­திர தின விழா­வுக்கு ஒரு நடி­கையை அழைத்­து­வந்து, அவ­ருக்கு ‘சல்­யூட்’ அடிப்­பதை விஜய் ரசி­கர்­க­ளா­லேயே ஏற்­றுக் கொள்ள முடி­ய­

வில்­லையே... மக்­கள் எப்­படி ஏற்­றுக் கொள்­வார்­கள்?

சுதந்­திர தினத்­தன்று விடு­த­லைப் போராட்ட வர­லா­று­களை ஊட­கங்­கள் வெளி­யி­டும். ஆனால் இம்­முறை நடிகை ஒரு­வ­ரு­டன் முத­ல­மைச்­சர் இது­வரை ஐந்து முறை ஒன்­றாக வெளி­யில் வந்­துள்­ளார் என்று வர­லாறு போடும் கேவ­லத்­தைப் பார்க்­கி­றோம்.

‘விஜய் நன்­றாக டான்ஸ் ஆடு­வார்’ என்­ப­தற்­காக ஏறிய மின்­சா­ரக்

கட்­ட­ணத்தை ஏற்­றுக் கொள்­வார்­களா மக்­கள்? ‘விஜய் அழ­கா­கச் சிரிக்­­ கிறார்’ என்­ப­தற்­காக ‘சொத்து வரியை எவ்­வ­ளவு வேண்­டு­மா­னால் போட்­டுக் கொள்­ளுங்­கள்’ என்று சொல்லி விடு­வார்­களா தமிழ்­நாட்டு மக்­கள்?

சமூக வலை­த­ளங்­க­ளில் கழு­விக் கழுவி ஊற்­று­கி­றார்­கள். ‘உங்­க­ளுக்­குத் தான் வாக்­க­ளித்­தோம்... வாக்­க­ளித்­த­தற்­காக வருத்­தப்­ப­டு­கி­றோம்’ என்று சொல்­லும் வீடி­யோக்­கள்­தான் அதி­க­மா­கப் பர­வு­கின்­றன. 

அத­னால்­தான், ‘என்­னோடு இருங்­கள், போய்­வி­டா­தீர்­கள்’ என்று கழி­வி­ரக்­கம் தேடப்­பார்க்­கி­றார் விஜய்.

மக்­கள் ஏமா­ளி­கள் அல்ல. அவர் இன்­ன­மும் தனி­மைப்படுத்­தப்­ப­டு­வார்.

அந்த நூறு நாட்கள்!


கடந்த 100 நாளில் 546 குற்றச்சம்பவங்கள் நடந்தது தான் தவெக அரசின் சாதனை என திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன் கூறினார்.


" தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மை தான், இது ஒரு நியூ எரா 100 நாளில் 546 குற்றச்சம்பவங்களைச் செய்த ஒரு நியூ எரா இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது.


‘பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும்.


காவல் துறையை கையில் வச்சிருக்கக்கூடிய முதல்வர் ‘ஜென்-ஸி’ பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்வருக்கு, இன்னைக்கு ‘ஜென்-ஸி’கள் மட்டும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள்,

இந்த கொலைப் பழியை முதல்வர் ஏற்று தான் ஆக வேண்டும். கோவையில் போதைப்பொருளைப் பற்றி தகவல் கொடுத்ததாகச் சொல்லி, மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர்.


அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், ‘அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்’ என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை.


எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள்.


இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை.


சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள், அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா?


100 நாள் ஆச்சே இது அறிவிக்கப்படாத அவசரநிலை.

மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் யூஜிசி பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்?


பொம்மை முதலமைச்சராக, டம்மி முதலமைச்சராகத்தான் இவர் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான ‘சர்க்கார்’ அல்ல, வெறும் ‘சர்க்கஸ் சர்க்கார்’ நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இவ்வாறு அவர் கூறினார்.


‘‘மேகதாது அணணை கட்டப்படுவதை தடுக்கத் தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடத்தில் போய்க் கேட்டிருக்கீங்களா? ஒன்றிய அரசிடத்தில் பம்புகிற முதலமைச்சராகத்தான் இருக்கிறீர்களே


தவிர, தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதலமைச்சராகக் காட்டிக்கொள்கிறீர்கள்’’ என்று பரந்தாமன் தெரிவித்து உள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய