இதற்கு மேல் அவமானம்..?

பழநி மடத்தின் ரூ.150 கோடி இடத்தை பாஜ பிரமுகர் மனைவி ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்குவெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட கனிமவள தடையை எதிர்த்து பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவுதமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.828.36 கோடி விடுவிப்புஅரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், பிறகே தேசிய கீதம்; தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்.நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன்.மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு அமைப்பு - ரூ. 264 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தரனார் அவர்கள் இயற்றிய பாயிரப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அதனை தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் முதன்மையாக பாட மார்ச் 11.1970 அன்று அரசாணை வெளியிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.


தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை எண் 1037 நாள் 17.12.2021 மூலம், "தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்." என்ற அரசாணையே உள்ளது..

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதும் தான் தமிழ்நாட்டினுடைய நெடுங்கால மரபு.. அதனை மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டதும் தலைவர் மு. க ஸ்டாலின் அரசு தான்..

ஆனால் அந்த மரபை பாதுகாக்க தெரியாமல், ஒன்றிய அரசுக்கும் & ஆளுநருக்கும் அடிபணிந்து மூன்றாவதாகவே "தமிழ்த்தாய் வாழ்த்து" இசைக்கப்பட்டது த.வெ.க ஆட்சியில்.

கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கண் துடைப்புக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது த.வெ.க அரசு! 

இதற்கு மேல் அவ­மா­னம் வேண்­டுமா?

காவிரி பிரச்­சி­னை­யில் தனி­யா­கச் சென்று கர்­நா­டக அர­சி­டம் பேசு­வ­ தா­க­வும், ‘ஹீரோ­வைப் பார்த்த மயக்­கத்­தில்’ அவர்­கள் தண்­ணீ­ரைத் திறந்து விடு­வ­தா­க­வும், அத­னைப் பெரிய சாத­னை­யா­கத் தமிழ்­நாட்டு

மக்­கள் கொண்­டா­டு­வ­தா­க­வும் முத­ல­மைச்­சர் விஜய் கனவு கண்­டார். அது நடக்­க­வில்லை என்­ற­தும், ‘தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக எந்த அவ­மா­னத்­தை­யும் தாங்­கு­வேன்’ என்று சோக நடிப்­பை­யும் காட்­டு­கி­றார். எவ்­வ­ளவு

கோக்­கு­மாக்கு?

‘காவி­ரி­யில் நீர் உரி­மையை நிலை­நாட்­டு­வ­தற்­காக முத­ல­மைச்­சர் விஜய், கர்­நா­ட­கம் செல்­லப் போகி­றார்’ என்று முத­லில் சொன்­னது வேளாண் துறை அமைச்­சர் தான். ‘இத­னால் எந்­தப் பய­னும் இல்லை, சும்மா கணக்­குக் காட்­டத்­தான் பயன்­ப­டும்’ என்று தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறிக்கை வெளி­யிட்­டார்­கள். 

உழ­வர்அமைப்­பு­க­ளும் இதே கருத்­தைச் சொன்­னார்­கள். அதை மீறி கர்­நா­ட­கம் செல்­வ­தில் உறு­தி­யாக இருந்­தார் விஜய்.

எதிர்ப்­பு­கள் பல­மாக, தொடர்ச்­சி­யாக எழத் தொடங்­கி­ய­தும்,

போகி­றோமா, இல்­லையா என்­ப­தையே சொல்­லா­மல் மவு­னம் சாதித்­தார் முத­ல­மைச்­சர் விஜய்.


‘முத­ல­மைச்­சர் விஜய் கர்­நா­ட­கம் செல்­லும் திட்­டம் இல்லை’ என்று இன்­னொரு அமைச்­சரை வைத்­துச் சொல்ல வைத்­தார்­கள். ஆனால் இதில் முழு உண்­மையை கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மாரே உடைத்து விட்­டார்.


‘‘கர்­நா­டகா வரும் முத­ல­மைச்­சர் விஜய்யை மிகுந்த மரி­யா­தை­யு­டன் வர­வேற்­கக் காத்­தி­ருக்­கி­றேன். அவ­ரி­டம் கர்­நா­ட­கா­வின் தற்­போ­தைய நிலை குறித்து விளக்­கு­வேன். காவிரி விவ­கா­ரம் குறித்து தொலை­பே­சி­யில் முத­ல­மைச்­சர் விஜய் என்­னி­டம் பேசி­னார். 

கர்­நா­ட­கா­வின் நீர்­நி­லை­க­ளைப் பார்­வை­யி­ட­வும் அவ­ரி­டம் கோரிக்கை வைத்­துள்­ளேன். மேக­தாது உள்­ளிட்ட கர்­நா­ட­கா­வின் நீர்­நி­லை­களை முத­ல­மைச்­சர் விஜய் பார்­வை ­யி­டு­வ­தற்­காக ஹெலி­காப்­டர் தயார் நிலை­யில் இருக்­கி­றது” என்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மாரே சொன்­னார்.

கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரி­டம், தான் பேசி இருக்­கி­றேன் என்­ப­தை­யும் விஜய் வெளிப்­ப­டுத்­த­வில்லை. 

மாநி­லத்­தின் மிக முக்­கி­ய­மான பிரச்­சினை பற்றி, இன்­னொரு மாநில முத­ல­மைச்­ச­ரு­டன் பேசி­ய­தையே மறைத்­தார் விஜய்.

அடுத்­த­தாக, ‘கர்­நா­டகா வந்து பேசு­கி­றேன் என்ற விருப்­ப­மா­னது தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரி­டம் இருந்­து­தான் வந்­தது’ என்­ப­தை­யும்

அம்­மா­நில முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார் சொன்­னார். அப்­போ­தும் தமிழ்­நாடு அரசு எந்த விளக்­கத்­தை­யும் அளிக்­க­வில்லை.

‘போக­வேண்­டாம்’ என்று தமிழ்­நாட்டு மக்­கள் சொன்­ன­தைப் போலவே, ‘வரக்­கூ­டாது’ என்று கர்­நா­ட­கா­வி­லும் பல­ரும் கொந்­த­ளித்­தார்­கள்.

‘வர விடக் கூடாது’ என்று தடை போட்­டார்­கள்.

* முத­லில் விஜய்யை வரச் சொன்­னார் கர்­நா­டக முத­ல­மைச்­சர்.

பின்­னர் அவரே வர வேண்­டாம் என்­றார். இந்த அவ­மா­னம் தேவையா?

* கன்­னட அமைப்­பு­கள் மிகக்­க­டு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­தன.

இந்த அவ­மா­னம் தேவையா?

* முத­ல­மைச்­சர் விஜய்­யின் உரு­வப் பொம்­மை­கள் எரிக்­கப்­பட்­டன.

இந்த அவ­மா­னம் தேவையா?

* ‘ஜன­நா­ய­கன்’ பட விளம்­ப­ரப் பல­கை­கள் கிழித்து எரி­யப்­பட்­டுள்­ளன.

இந்த அவ­மா­னம் தேவையா?

* மாண்­டி­யா­வில் பல திரை­ய­ரங்­கு­க­ளில் விஜய் படக் காட்­சி­கள் ரத்து

செய்­யப்­பட்­டன. இந்த அவ­மா­னம் தேவையா?

* விஜய் வரு­கையை எதிர்த்து மாநி­லம் முழு­வ­தும் பந்த் அறி­விக்­கப்­ பட்­டது. இந்த அவ­மா­னம் தேவையா?

* கர்­நா­டக – தமிழ்­நாட்டு எல்­லை­யில் தீப்­பந்­தம் ஏந்தி எதிர்ப்­புத்

தெரி­வித்­துள்­ளார்­கள். இந்த அவ­மா­னம் தேவையா?

– இவ்­வ­ளவு அவ­மா­னங்­க­ளை­யும் பட்ட பிறகு, ‘தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக எந்த அவ­மா­னத்­தை­யும் தாங்­கு­வேன்’ என்று சொல்­வ­தற்கு வெட்­க­மாக இல்­லையா? இவ்­வ­ளவு நாட்­கள் கழித்து எதற்­காக இதைச் சொல்ல வேண்­டும்?

‘‘நட்­பான ஒரு சூழ­லில் நாம் சந்­திக்க வேண்­டும் என்று நான் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை வைத்­துள்­ளேன். இந்த நீதி­மன்ற வழக்­கு­கள் முடி­யட்­டும். நதி­நீர் தொடர்­பாக மாநி­லத்­தில் நில­வும் சூழ்­நி­லை­கள்

சீரா­கட்­டும். இந்த நாட்­டின் சட்­டத்தை நாம் மதிக்க வேண்­டும். இப்­போது இருப்­பதை விட இன்­னும் இணக்­க­மான சூழ­லில் நாம் சந்­திப்­போம்” – என்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார் சொல்­வ­தும் –

“நான் ஒரு முயற்சி செய்து பார்க்­க­லாம் என்று நினைத்­துத் தான் பெங்­க­ளூ­ரு­வுக்­குச் செல்ல நினைத்­தேன். பக்­கத்து மாநி­லத்­தோடு பேசிப் பார்த்­தால் என்ன என்று நினைத்­தேன். அந்த முயற்­சி­யில் அவ­மா­னம் நேர்ந்­தால் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக அதை­யும் தாங்­கத் தயா­ராக இருக்­கி­றேன்’’ என்று தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் விஜய் சொல்­வ­தும் உலக மகா நடிப்­பு­க­ளாக உள்­ளது.

இரு மாநில முத­ல­மைச்­சர்­க­ளும் பேசி வைத்­துக் கொண்டு ஏமாற்­று­ கி­றார்­கள் என்­பதை உணர முடி­கி­றது.

‘ஜன­நா­ய­கன்’ படம் கர்­நா­ட­கா­வி­லும் ரிலீஸ் ஆகி­றது. அந்த வசூ­லை­யும் முடித்த பிறகு இப்­பி­ரச்­சினை பற்றி பேச­லாம் என்று நினைத்­தி­ருந்­தாரா விஜய்? ‘ஜன­நா­ய­கன்’ ரிலீஸ் புர­மோ­ஷ­னுக்­கா­கத் தான் கர்­நா­டகா

செல்­லவே திட்­ட­மிட்­டாரா விஜய்? ‘கர்­நா­டகா வரு­கி­றார் விஜய்’

என்­ப­தன் மூல­மாக அங்கு படத்தை ஓட்­டத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார் விஜய் என்றே நினைக்­கத் தோன்­று­கி­றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய