உச்சத்தில் சூரியன்!
* வங்கக்கடலில் காற்றழுத்தப் பகுதி.*
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

நான்காயிரத்து நானூற்றி நாற்பத்தி ஒன்று எனப் படிக்க வேண்டியதை, “நான் இப்படித்தான் பழகி இருக்கேன்” எனச் சொல்லி, “நாலாயிரத்தி நானூத்தி நாப்பத்தி ஒன்னு”ன்னு படிச்சிருந்தா, யாரும் கிண்டல் பண்ணப் போறதில்லை.
அதைவிட்டுட்டு, “நாலாயிரத்து நாலு லட்சத்து நாற்பத்தி நானூறு ஒன்னு”ன்னு படிச்சா, கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க.
25 ஆண்டுகளாகத் தமிழகக் கல்வித் துறையில் இருந்தவருக்குத் தமிழே தெரியவில்லை என்றால், எவ்வளவு பெரிய கேவலம் அது?
பார்த்துப் படிக்கிறதையே தப்பாகப் படிப்பீங்களா என நக்கலாகத்தான் பேசுவார்கள். தமிழ் மட்டும் இல்ல, நீங்க நம்பரையே தப்பாத்தானே படிச்சீங்கன்னு சுட்டிக்காட்டத்தானே செய்வாங்க?
அவர் பேச்சு வழக்கை யாரும் கிண்டல் பண்ணல. “பேசவே தெரியல”ன்னுதான் கிண்டல் பண்றாங்க. தமிழ்நாட்டில் எத்தனையோ விதமான உச்சரிப்புகள் இருக்கு. அதற்காக எல்லாரும் எல்லாரையும் கிண்டல் பண்ணிக்கிட்டா இருக்காங்க?
அப்படி கேலியாகப் பேசியவருக்குப் பதிலாக, பொறுமையாக, “எனக்கு சரளமாகத் தமிழில் படிக்க, பேசத் தெரியவில்லை.
அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சரி செய்து கொள்வேன்” என்று தாழ்மையோடு பேசியிருந்தால் பிரச்சனை இல்லை.
ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழகத்தின் நிதியமைச்சருக்குத் தமிழைப் பார்த்துப் படிப்பதில் தகராறு என்றால், அனைவரும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் எனப் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.
அட, அப்படித்தான் நீங்கள் லண்டன் ரிட்டர்னாக இருந்தால் கூட, தமிழுக்குப் பதிலாகத் தங்கிலீஷில் எழுதி, உச்சரிப்பு தெளிவாகப் படித்திருக்கலாமே.
அதைவிட்டுட்டு...
பார்த்துப் படித்ததையே ஒழுங்காகப் படிக்காமல், “நான் அப்படித்தான் பேசுவேன்” எனப் பேசுவது அகங்காரத்தின் உச்சம்.
உங்கள் வீடியோ ஒன்றில் உங்கள் சகோதரர்வீட்டில் தகராறு செய்யும்போது நீங்கள் கெட்ட வார்த்தைகள் அனைத்தும் சுத்தமாக,தெளிவாக,தவறின்றி பேசும்போது உங்களுக்கு சட்டசபையில் மட்டும் தவறு ஏற்படுவது நம்பும் படி இல்லை.
அதிலும் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்வது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நீங்கள் கொடுத்த பதிலும், உங்கள் முன்னால் உள்ள மைக்கைக் கோபமாக மடித்துத் தள்ளியதன் மூலம், நீங்கள் படித்ததாகக் கூறிய பைபிளின் மூலம் அன்பு மொழி, அமைதி மொழி எல்லாம் நீங்கள் கற்றுக் கொண்டதாகவும் அல்லது அதை பின்பற்றுவதாகவோ கொஞ்சம் கூடத் தெரியவே இல்லையே...தமிழ்த்தாயை
ஏமாற்றுவதா?
‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியாக மனிதனையே கடிக்கலாமா?’ – என்று ஒரு பழமொழி உண்டு.
அதைப் போல விவசாயிகளை ஏமாற்றினார்கள்.
அடுத்து மக்களையே ஏமாற்றினார்கள்.
இப்போது தமிழ்த்தாயையே ஏமாற்றுகிறார்கள்.
உண்மையில் முதலமைச்சர் விஜய்யின் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும். கூச்சமே இல்லாமல் பொய்களையும் அநியாயங்களையும் செய்வது முதலமைச்சர் விஜய்யின் பாணியாக இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்துள்ளார். ‘‘தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது” என்பதுதான் அந்தத் தனித்தீர்மானம் ஆகும
இதனை திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு ஆதரித்துள்ளார்கள்.
இப்படி ஒரு தனித்தீர்மானம் கொண்டு வர என்ன காரணம்? முதலமைச்சர் விஜய்க்கு இருக்கும் குற்றவுணர்ச்சிதான் முதல் காரணம் ஆகும்.
அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழை மூன்றாவது இடத்துக்கு தள்ளி வைத்து தனது பதவியேற்பு விழாவை நடத்தினார் விஜய். ஆளுநரின் அஜெண்டாவுக்கு விஜய் தலையாட்டினார்.
அதே போலத் தான் தனது உரைக்கு முன்னதாக தேசியகீதம் பாடப்பட வேண்டும் என்ற ஆளுநர் மாளிகையின் கோரிக்கைக்கும் அடிபணிந்து விட்டார்கள். சபையில் ஆளுநர் உரையாற்றும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இப்படி ஒட்டுமொத்தமாக ஆளுநர் ஆசைக்கு இணங்கி விட்டு, இப்போது தமிழ்த்தாயைக் காப்பாற்றுவது போல நடிக்கிறது த.வெ.க. அரசு.
தமிழ்த்தாய் வாழ்த்தை ஓங்கி ஒலிக்க வைத்தவர் முத்தமிழறிஞர்கலைஞர் அவர்கள்.
56 ஆண்டுகளுக்கு முன்பே இதனைச் செய்து விட்டார். 11.3.1970 ஆம் நாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பொது நிறு வனங்கள், நிகழ்ச்சிகளில் முதலில் பாட வேண்டும் என்று அரசாணைவெளியிட்டார்கள்.
அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து இன்று வரை ஒலித்து வருகிறது.
12.12.2021 ஆம் நாள் முதலமைச்சராக இருந்த திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்தினார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அரசாணை (நிலை) எண். 1037. பொதுத் (பொது-- --1) துறை, நாள். 17.12.2021.
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
இப்பாடல் 55 வினாடிகளில் முல்லைப் பாணியில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும். தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைவட்டுகளைக் கொண்டு இசைக்கப்படு வதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும். அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், தனியார் அமைப்புகளும் பொதுமக்களும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கியம். பொதுநிகழ்வுகள் ஆகியவற்றின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் - என்று அரசாணை வெளியிட்டவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எனவே அனைத்தும் அரசாணைகளாக இருக்கிறது. த.வெ.க. அரசுக்கு துணிச்சல் இருந்தால் இதனை சட்டம் ஆக்குங்கள். ஆளுநருக்குஅனுப்புங்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அனுப்புங்கள். அதை விட்டுவிட்டு தனித்தீர்மானம் போடுவதால் என்ன பயன்?
நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடுங்கள் என்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேசிய கீதம் பாடுங்கள் என்கிறார் ஆளுநர்.
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களை மன்னர்களாக நினைத்துக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக தள்ளிவைக்கும் அளவுக்கு துணிச்சலைப் பெற்றுவிட்டார்கள்.
இவற்றை எல்லாம் த.வெ.க. அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்ய முடியாது.
தனித்தீர்மானத்தின் போது உரையாற்றிய சபாநாயகர், ‘’யாருக்கும் அனுப்பி அனுமதி கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை’’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
அப்படியானால் இந்த தனித்தீர்மானம் எதற்காக நிறைவேற்றப்படுகிறது? அரசே வைத்துக் கொள்வதற்கு எதற்காக தனித்தீர்மானம்?
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து சர்ச்சை எழுப்புவது ஆளுநர் மாளிகை. அவர்களுக்கு இந்த தனித்தீர்மானம் அனுப்பி வைக்கப்படவேண்டாமா?
அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டாமா?
தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்?

