உரிய பங்கு நீர் தேவை!

தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக்கழகத்தில்  த.வெ.க. அரசால் பணியில் அமர்த்தப்படும் வடமாநிலத் தொழிலாளர்கள்.📰 கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் வரை பயிர்க்கடன் வாங்கியிருந்தால் ரூ.75,000 வரை தள்ளுபடி.. விவசாயிகள் போராட்டம் வலுத்த நிலையில் கூடுதல் தள்ளுபடி அறிவித்தார் முதலமைச்சர் .📰  தவெகவின் நூறு நாட்கள் ஆட்சியில் 540-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு.. சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் துறைக்கு தொடர்பில்லாத அமைச்சர்கள் பதில் அளிப்பதாகவும் குற்றசாட்டு.ஜார்க்கண்டில் மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்த மாநில அரசு.. அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புதவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும் என திருமாவளவன் அறிவிப்பு.. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக விசிக பரிணமிக்கும் என்றும் பேச்சு.📰 பாமக தலைவர் அன்புமணியுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் திடீர்சந்திப்பு.. எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடுதான் சந்தித்ததாக பேட்டி📰  உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டின் ேமடையில்  கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் உரையை சுருக்கமாக முடித்துக்கொண்ட திருமாவளவன்📰  மகாஷ்டிராவில் மெட்ரோ ரயில் பணியின்போது கீழே விழுந்த கிரானைட் கற்கள். ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.12.50  கோடி அபராதம் விதிப்பு📰  ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அடுத்த சில வாரங்களுக்குள் முழுமையாக செயல்படுத்தாவிட்டால் தாக்குதல்... அமெரிக்காவுக்கு ஈரான்  விடுத்துள்ள எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்.




உரிய நீர் வேண்டும்!

கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்தரவின்​படி, தமிழகத்​துக்​குக் காவிரி​யில் தண்​ணீர் திறக்க வேண்டும்’’ என்று கர்​நாடக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.


காவிரி​யில் தமிழகத்​துக்கு உரிய தண்​ணீரைக் கர்​நாடக அரசு திறந்து விடக் கோரி​யும் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க வேண்​டும் என்ற உத்தரவைஎதிர்த்​தும் திமுக தொடர்ந்த மனு,தமிழக அரசு தாக்​கல் செய்த மனு மற்​றும் ஆகியவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்.வைத்தி​ய​நாதன் ஆஜராகி, ‘‘கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தர​வு​களைக் கர்​நாடக அரசு எப்​போதும் செயல்படுத்துவதில்லை. தற்​போது கர்​நாடக அணை​களில் 76 சதவீதம் அளவுக்குத் தண்​ணீர் இருப்பு இருந்​தும், தமிழகத்​துக்கு உரிய நீரை திறக்​காமல் இருப்​ப​தால் தமிழகம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.


கர்​நாடக அரசு மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த ஆண்டு கடும் வறட்சி நில​வு​கிறது. காவிரி ஒழுங்​காற்​றுக் குழு​வின் பரிந்​துரை​யின்படி காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் அனைத்​தும் பின்​பற்​றப்​பட்​டன.


முதலில் கடந்த ஜூலை 30-ம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், அதை விட அதி​க​மான நீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டது.


நேற்று காலை 8 மணி நில​வரப்​படி வினாடிக்கு 12,000 கன அடியை விட அதி​க​மான அளவு தண்​ணீர் தமிழகத்​துக்​குத் திறக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.


இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘கர்​நாடகா சார்​பில் அதிகளவி​லான நீர் திறக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் எப்​படி தண்​ணீர் வரவில்லை என்று கூறுகிறீர்​கள்​?’’ என்று தமிழக அரசு வழக்​கறிஞரிடம் கேள்வி எழுப்​பினர்.


அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்​கறிஞர், ‘‘ சமீபத்​தில் கபினி உள்​ளிட்ட பகு​தி​களில் மழை அதி​க​மாகப் பெய்​த​தால் கிடைத்த உபரி நீரை மட்​டுமே கர்​நாடகா திறந்​து​விட்​டுள்​ளது.


ஆனால், இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வு​கள் எதை​யும் கர்​நாடகா முறை​யாகச் செயல்​படுத்​த​வில்​லை’’ என்று சுட்​டிக்​காட்​டி​னார்.


மேலும், விகி​தாச்​சா​ரப்​படி முந்​தைய பற்​றாக்​குறை நீர் மற்​றும் ஆகஸ்ட் 31-க்​குள் தரவேண்​டிய நீர் என மொத்​தம் 36.635 டிஎம்சி நீரைத் தமிழ்​நாடு பெறு​வதை நீதி​மன்​றம் உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார்.


பின்னர் தி.மு.க.தரப்பை விசாரித்தனர்."மழை அதிகம் பெய்து அணைகள் நிரம்பியதால்தான் உபரி நீரை கர்நாடகா வெளியேற்றுகிறது.உரியமுறையில் நடக கவில்லை" என்று தெரிவித்தனர்.


அப்​போது நீதிப​தி​கள் கூறும்​போது, ‘‘கர்​நாட​கா​வில் தற்​போது மழை நில​வரம் நன்​றாக இருப்​ப​தால், இந்த வழக்கை ஒரு வாரத்​துக்​குப் பின்​னர் விசா​ரிக்​கலாம்’’ என்று கருத்து தெரி​வித்​தனர்.


இதையடுத்து நீதிப​தி​கள், “வழக்கு விசா​ரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது. இந்த இடைப்​பட்ட காலத்​தில் கா​விரி நீர் மேலாண்மை ஆணை​யம் பிறப்​பித்​துள்ள வி​னாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற உத்​தரவை கட்​டா​யம்​ கர்​நாடக அரசு பின்​பற்​ற வேண்​டும்’’ என்​று உத்​தரவிட்டனர்​.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய