முடக்கும் கொள்கைகள்.

🔸 சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. ஓ.எம்.ஆர். சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி🔸 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்.🔸 மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தும் முறைப்படி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி. காலதாமதத்திற்கு பின்னால் அரசியல் சதி உள்ளதாகவும் குற்றச்சாட்டு.🔸 வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு இ-கே.ஒய்.சி. எனப்படும் சுய விவர பதிவுக்கான காலக்கெடு வரும் 31-ம் தேதி வரை நீட்டிப்பு.🔸 ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விற்பனை கிடுகிடு உயர்வு. ரூ.15 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல்.🔸 பிரான்சில் நடந்த கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார். நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினார்.

இந்தியப் பொருளாதாரத்தை முடக்கும்  கொள்கைகள்.


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில்,வர்த்தக முறைகேடுகள் மற்றும் ‘டிரான்ஷிப்மென்ட்’ மோசடிகள் மூலம் அமெரிக்க வர்த்தக வரிகளில் இருந்துசீனாவைத் தப்பிக்க வைக்க

இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிக்கைசர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் சீனப் பொருட்களின் இடைநிலைவர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


புனே-குஜராத்-சென்னை தொழிற்பேட்டைப் பகுதிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பம்புகள் மற்றும் கம்ப்ரஸர் களைச் சிறு மாற்றங்களுடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருவதுடன், இது அமெரிக்கத் தொழிலகச் சங்கிலி அமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறியுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதையை ஒட்டிய இந்தக் குற்றச்சாட்டுகள் நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதி கட்டமைப்புமுறைகளைச் கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன.


ஏற்கெனவே டிரம்ப் தொடங்கிய வரிவிதிப்புப் போக்குகள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம்காட்டி, இந்தியபொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க செனட் சபை மசோதாவை நிறைவேற்றியுள் ளது.


அதுமட்டுமின்றி, “கட்டாய உழைப்பின்” மூலம்தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுத்து நிறுத்தத் தவறியதற்காகவும், அதிகப்படியான உற்பத்தித் திறனைக் கட்டுப்படுத்தாததற்கா கவும் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்கஅமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


தனது கார்ப்பரேட்லாப நலன்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங் கள்இந்தியாவின்இறையாண்மையையும் தற்சார்புபொருளாதாரக் கொள்கையையும் கேள்விக் குள்ளாக்கியுள்ளன.


மக்களின் வரிப்பணத்தாலும் முறையான கொள்கைகளாலும் கட்டமைக்கப்பட வேண்டிய நாட்டின்தொழில்துறை வளர்ச்சி, அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு ஏற்கெனவே வளைந்து கொடுத்திருப்ப தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மோடிஅரசின் ‘மேக் இன் இந்தியா’ போன்ற முழக்கங்கள் வெறும் வெற்று விளம்பரங்களாக மாறிவிட்டநிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களைச் சார்ந்தே இந்தியாவின் உற்பத்தித்துறை இயங்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.


மூலப்பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டால், உள்நாட்டுஉற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரித்து உலகளாவிய சந்தையில் இந்தியப் பொருட்கள் போட்டியிடும்திறனை முழுமையாக இழந்துவிடும் அபாயமும் உருவாகியுள்ளது.


மோடி அரசின் திறனற்ற வெளியுறவுகொள்கையும், கார்ப்பரேட் சார்பான பொருளாதாரக் கோட்பாடுகளுமே அமெரிக்காவின் இந்தத் தொடர் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு முக்கியகாரணமாகும்.


தேசத்தின் பொருளாதார நலன்களைபலிகடாவாக்கிவிட்டு, பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் நலனுக்காகச் சமரசம் செய்துகொள்ளும் ஒன்றிய அரசின் மண்டியிடும் போக்கை அரசு கைவிட வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய