🔸 தமிழ்நாட்டில் காய்கறி, அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பு. விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு.🔸 பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு.🔸 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம். குதிரை பேரம் தொடர்பாக எடப்பாடி - செங்கோட்டையன் இடையே நேரடி மோதல்.🔸 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு. தவெகவை விலைக்கு வாங்க முடியாதா? என சவால்.🔸 ஆளுநர் அர்லேகருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்திப்பு. த.வெ.க. மீதான குதிரை பேர புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.🔸 பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதே இடத்தில் மற்ற தொழில்களை தொடங்குவோம் என்பதா?. தவெக அரசின் அறிவிப்பு முன்னுக்குப் பின் முரணானது என நயினார் நாகேந்திரன் கண்டனம்.🔸 சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரி தாமதப்படுத்தியதற்கு மாணவி பொறுப்பேற்பதா? மாணவியின் விண்ணப்பத்தை ஏற்று மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.🔸 தமிழ்நாடு முழுவதும் H1 வகை இன்ஃபுளூயன்சா காய்ச்சல் அதிகரிப்பு. பொதுவெளியில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை.🔸 கர்நாடாகவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிஐடிக்கு மாற்றம். வனத்துறையினர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நடவடிக்கை.🔸 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ். தகுதி நீக்க நடவடிக்கை குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..🔸 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டிய கனமழை. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.🔸 புதுக்கோட்டை அருகே வாட்ஸ்ஆப் வதந்தியால் ஊராட்சி அலுவலகத்தில் திரண்ட கைம்பெண்கள். உதவித்தொகைக்கு சிறப்பு அடையாள அட்டை தருவதாக பரவிய தகவலை நம்பி ஏமாற்றம்.🔸 சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானம் ஏதும் கட்டப்படவில்லை. கலைஞர் கருத்தரங்கம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்.🔸 புதுக்கோட்டை அருகே மஞ்சள் நோய் தாக்குதலால் பூசணி சாகுபடி பாதிப்பு. ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவிட்டும் பலன் இல்லாததால் கால்நடைகளுக்கு தீவனமாக்கும் அவலம்.🔸 கேரள மாநிலம் வயநாடு மலைப்பாதையில் பெய்த கனமழையால் திடீர் நிலச்சரிவு. வாகன ஓட்டிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பரபரப்பு காட்சிகள்.🔸 கொச்சி அருகே வணிக நிறுவன கிடங்கில் பயங்கர தீ விபத்து. தீ மளமளவென பரவி கரும்புகை எழுந்ததால் பரபரப்பு.🔸 தெற்கு பிரான்ஸில் சுழல் சூறாவளியால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம். கதவு, ஜன்னல், நாற்காலிகள் பறந்து சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பு.








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய