நேபாள பேரிடர்...,...!

 ஆகஸ்ட் 25ஆம் தேதி வரலாற்றில் இல்லாத அளவில் 9 மணி நேரம் 43 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் அவை நடைபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நொடி கூட நேரலை துண்டிக்கப்படாமல் ஒளிபரப்பு செய்யப்படுவது கவனம் ஈர்த்துள்ளது. ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்களுக்கு நன்றி என சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

ஆதவ்  பேச ஆரம்பிக்கும்வரை அவை நல்லாதான் போகுது- பிரேமலதா விஜயகாந்த்

நான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் நேரடியாக சொல்லிவிட்டேன்; அவை அமைதியாக போய்க் கொண்டிருக்கிற போது அவர் பேச எழுந்தவுடன்

 சண்டைக்கு மாறிவிடுகிறது என்று உரிமையுடன் கூறிவிட்டேன். மக்களுக்காக மக்கள் பிரச்னையைப் பற்றி பேச நாங்கள் புள்ளி விவரத்துடன் வருகிறோம்; ஆனால் ஏறக்குறைய ஒரு மணி நேரம்தான் மக்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் மீதி நேரம் முழுவதும் சண்டைதான் போய்க்கொண்டிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் அவையில் ஆதவை தாக்கி பேசியுள்ளார். 


படுத்துக்கிட்டும போத்திக்கலாம்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாத நடைமுறைகள் குறித்து எழுந்த காரசாரமான விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "இன்று காலையிலிருந்து எதை பின்பு

 சொல்லலாம், எதை முன்பு சொல்ல வேண்டும் என்கிற முடிவுகள் எடுக்கப்படுவதைப் பார்க்கும் போது, படுத்துகிட்டும் போத்திக்கலாம், போத்திகிட்டும் படுத்துக்கலாம் என்கிற முடிவுக்கு சபாநாயகர் வந்துவிட்டார் என்று தோன்றுகிறது" என நகைச்சுவையாகவும் சுடச்சுடவும் கருத்து தெரிவித்தார்.


,சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பேரவையில் கட்டாயம்

அமர்ந்திருக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அதிகாரிகள் அவையில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குக் குறிப்பெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியிருந்தார். 


சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது துறை சார்ந்த செயலாளர்கள் அனைவரும் கட்டாயமாக அவைக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

 வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசிய அவர், கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த குறிப்புகளைச் செயலாளர்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இதனைச் சபாநாயகர் அவர்களிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும் என்றும் பேரவையில்கேட்டுக்கொண்டார்.


இந்தியாவில் கல்வி தரம்  டாப் 10 மாநிலங்கள்.


பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டில் (School Education Development Index - SEDI) 2025-26 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் சண்டிகர் மற்றும் கேரளா ஆகிய இரண்டும் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துள்ளன.


இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலேயே சண்டிகர் ஒட்டுமொத்த அளவில் அதிக மதிப்பெண்ணைப் பதிவு செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.


புதுச்சேரி மூன்றாவது இடத்தையும், அதைத் தொடர்ந்து கோவா நான்காவது இடத்தையும், டெல்லி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.


பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் முறையே ஆறு, ஏழை மற்றும் எட்டாவது இடங்களைப் பிடித்துள்ளன. லட்சத்தீவு ஒன்பதாவது இடத்தைப் பிடிக்க, ஹரியானா முதல் 10 இடங்களை நிறைவு செய்துள்ளது.


பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டு அமைப்பானது அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளில் கீழ் பள்ளி கல்வியை மதிப்பிடுகிறது.


இதில் பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் போன்ற காரணிகள் அடங்கும்.


ஒட்டுமொத்த பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டு தரவரிசையில், சண்டிகர் (0.826) மற்றும் கேரளா (0.798) ஆகிய இரண்டு மாநிலமும் செயல் திறனை மீண்டும் தக்க வைத்து 2025-26 ஆம் ஆண்டிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வகிக்கின்றன. 


உயர் மதிப்பீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய இரண்டும் அதிகபட்ச முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், முதல் 10 தரவரிசைகள் பெரிதும் மாறாமல் உள்ளன.


கோவா 0.005 மதிப்பெண் உயர்வுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு தன் மதிப்பெண்ணை 0.018 மேம்படுத்தி ஏழாவது இடத்தைத் தக்க வைத்து உள்ளது. 


முதல்10 மாநிலங்களின் பட்டியல்

1. சண்டிகர்

2. கேரளா

3. புதுச்சேரி

4. கோவா

5. டெல்லி

6. பஞ்சாப்

7. தமிழ்நாடு

8. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

9. லட்சத்தீவு

10. ஹரியானா.


நேபாள பெரு வெள்ளம் பற்றிய தகவல்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு, எல்லை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரிலும் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.


போட்கோஷி மற்றும் திரிசூலி ஆறுகள், பீகார் மாநிலத்தின் உட்பகுதி வரை பாயும் கண்டக் ஆற்று அமைப்பில் இணைகின்றன.


பெயர் குறிப்பிட விரும்பாத நேபாள அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.பி.சி (BBC) வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட போட்கோஷி (Bhotekoshi) ஆற்றின் திடீர் வெள்ளப் பெருக்கு, நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் மாவட்டங்களின் சில பகுதிகளை மூழ்கடித்ததில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.


இந்த வெள்ளம் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது; சேறும் சகதியுமான நீரும் குப்பைக் கூளங்களும் சுவர்களைப் போலத் திரண்டு வந்து, பல மாடி கட்டிடங்களை இடித்துத் தள்ளுவதும் கிராமங்களைச் சிதைப்பதும் காட்சிகளில் பதிவாகியுள்ளன.


காணாமல் போன 384 பேரில் 291 வெளிநாட்டினர் (இவர்களில் 105 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் நேபாளிகள்) அடங்குவர் என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. 


நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு இந்திய ராணுவ விமானங்கள் அங்கு அனுப்பப்படவுள்ளன.


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு, எல்லை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரிலும் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.


போட்கோஷி மற்றும் திரிசூலி ஆறுகள், பீகார் மாநிலத்தின் உட்பகுதி வரை பாயும் கண்டக் (Gandak) ஆற்று அமைப்பில் இணைகின்றன.

எனவே, பீகார் துணை முதல்வர் சம்ராட் சௌத்ரி தனது நிர்வாகத்தை விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளார்.


இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


கிராமங்கள் மற்றும் கட்டிடங்களை ஊடுருவிச் செல்லும், தடுக்க முடியாத வேகத்தில் பாய்ந்த நீர் மற்றும் சேற்று வெள்ளத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக, ரசுவாகாதி (Rasuwagadhi) எல்லைக் கடப்புப் பகுதியின் சீனப் பகுதியில் உள்ள ஆறு மாடி கட்டிடம் ஒன்றை, சேற்று நீர் கொண்ட பிரம்மாண்ட வெள்ளச் சுவர் ஒன்று மூழ்கடிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.


ஆறு முக்கிய நீர்மின் மற்றும் மின் கடத்திக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.


சுமார் 430 மெகாவாட் மின்சார விநியோகம் - அதாவது மொத்த நீர்மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான அளவு - இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.


திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் ? 

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவே இந்த வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


"காலை 8.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒரு பெரிய நிலச்சரிவு உண்டாகி ஆற்றுப் பாதையை மறித்ததே இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிகிறது," என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட அதே நேரத்தில், அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (US Geological Survey) பதிவு செய்துள்ளது.


இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டு சரக்குக்Aகொண்டு செல்லும் விமானங்கள் (C-17 மற்றும் C-130) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன; அதேவேளையில், நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நேபாள எல்லையை ஒட்டி பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் வழியாகப் பாயும் கண்டக் (Gandak) நதி கரைபுரண்டு ஓடக்கூடும் என்ற அச்சத்தால், அப்பகுதிகளில் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தச் சேதங்களை 'மிகவும் கவலைக்குரியது' என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வர்ணித்துள்ளார்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பீகாரின் வால்மீகி நகரில் உள்ள கண்டக் தடுப்பணையின் 36 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆற்றுப் படுகைப் பகுதிகளில் உள்ள மாவட்ட அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு, வெள்ள நிவாரணப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்து வருகின்றனர்.


அதேவேளையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஷிகட்சே பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சாலை, தகவல் தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்துவிட்டதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நேபாள எல்லையில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார்.


அழைக்கப்பட்டதன் பேரில், நேபாள ராணுவம் மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது,


ஆனால் மலைப்பாங்கான ரசுவா மாவட்டத்தில் உள்ள சியாப்ரு பேசி மற்றும் திமுரே போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவற்றால் தரையிறங்க முடியாது. போட்டேகோஷி ஆற்றின் நீர்மட்டம் குறையும் வரை ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜா ராம் பஸ்நெட் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

இதுவரை 88 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மைலுங் (Mailung) கிராமத்தில் சிக்கியுள்ள மேலும் 115 பேரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் பாஸ்நெட் (Basnet) தெரிவித்தார். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 15 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


கடந்த ஆண்டு போட்டகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்தனர்

திபெத்தில் உற்பத்தியாகும் போட்டகோஷி ஆறு, சுமார் 100 கி.மீ தூரம் பாய்ந்து திரிசூலி (Trishuli) ஆற்றுடன் இணைகிறது; பின்னர் காண்டக் (Gandak) ஆறாக மாறி இந்தியாவுக்குள் நுழைகிறது.


கடந்த ஆண்டும் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.


அப்போது சீனாவுடனான 'நட்புறவுப் பாலம்' (Friendship Bridge) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.


இந்தச் சேதத்தினால் பல மாதங்களுக்கு வர்த்தகமும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய