குடிநீர் பஞ்சம்.தீர்க்க

 பனிப் பாறைகள்...!

உலக அளவில் நன்​னீர் தட்​டுப்​பாடு நாளுக்கு நாள் பூதாகர​மாக உரு​வெடுத்து வரு​கிறது.

இந்நிலையில், அண்​டார்​டிகா மற்​றும் ஆர்க்​டிக் துரு​வப் பகுதிகளில் உள்ள பிரம்​மாண்​ட​மான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்​பல்​கள் மூலம் இழுத்து வந்து நன்​னீ​ராக மாற்​றும் திட்​டத்தை சர்​வ​தேச விஞ்​ஞானிகள் மற்​றும் பொறியாளர்​கள் மீண்​டும் பரிசீலித்து வரு​கின்​றனர்.

கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வின் இளவரசர் முகமது அல்​-பைசல், அரேபிய தீபகற்​பத்​தின் கடுமை​யான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த யோசனையை முதன்​முதலில் உலகுக்கு முன்​வைத்​தார்.


இத்​திட்​டத்​தின் சாத்​தி​யக்​கூறை நிரூபிப்​ப​தற்​காக, அலாஸ்கா பகு​தி​யில் இருந்த சுமார் 1.5 டன் எடை​யுள்ள மிகப்​பெரிய பனிப்​பாறை ஒன்றை ஐயோவா மாநிலத்​துக்​குப் பிரத்​யேகக் கப்​பல் மூலம் வெற்​றிகர​மாக இழுத்து வந்து செயல்​முறை விளக்​க​மும் அளித்​தார்.

அக்​காலத்​தில் தொழில்​நுட்​பக் குறை​பாடு​கள், பனிப்​பாறை வழியிலேயே உரு​கு​வதைத் தடுக்​கும் முறை​கள் இல்​லாதது மற்றும் அதி​கப்​படி​யான கடற்​போக்​கு​வரத்​துச் செலவு ஆகிய காரணங்​களால் இத்​திட்​டம் வணிக ரீதி​யாகத் தொடரப்​ப​டா​மல் கைவிடப்​பட்​டது.


இப்​போது நவீனத் தொழில்​நுட்​பத்​துடன் அந்த திட்​டத்தை மறு​பிர​வேசம் செய்ய விஞ்​ஞானிகள் தீவிர​மாக முயன்று வரு​கின்​றனர்.

தற்​போது பரு​வநிலை மாற்​றம், நிலத்​தடி நீர் மட்​டம் குறைதல் மற்றும் மக்​கள்​தொகை பெருக்​கம் காரண​மாக ஐக்​கிய அரபு அமீரகம், தென்​னாப்​பிரிக்கா போன்ற நாடு​களில் நன்​னீர் தட்டுப்பாடு உச்​சத்​தைத் தொட்​டுள்​ளது.


இதன் காரண​மாக, சர்​வ​தேசப் பொறி​யாளர்​கள் குழு இத்திட்டத்தை அதிநவீனத் தொழில்​நுட்​பங்​களு​டன் மீண்​டும் கையிலெடுத்​துள்​ளது. துரு​வப் பகு​தி​யில் மிதக்​கும் சரி​யான வடிவம் கொண்ட பனிப்​பாறை​களை செயற்​கைக்​கோள் மூலம் கண்​டறிதல். கடல் பயணத்​தின்​போது வெப்​பத்​தால் பனிப்​பாறை உரு​காமல் இருக்க, அதைச் சுற்றி வெப்​பம் கடத்தா சிறப்பு உறைப் பூச்​சுகளைப் பயன்​படுத்​துதல்.குறைந்த எரிபொருளில் அதிக எடையைச் சுமந்து செல்​லும் நவீனக் கப்​பல்​கள் மூலம் பனிப்​பாறை​களைப் பாது​காப்​பாகக் கரைக்​குக் கொண்டு வருதல் உள்​ளிட்​ட​வற்​றில் விஞ்​ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வரு​கின்​றனர்.


ஒரு மிகப்​பெரிய பனிப்பாறையைக் கொண்டு வரு​வதன் மூலம் லட்சக்கணக்​கான மக்​களுக்​குப் பல மாதங்​களுக்​குத் தேவை​யான தூய்​மை​யான குடிநீரை வழங்க முடி​யும் என ஆய்​வாளர்​கள் தெரிவிக்​கின்​றனர்.


சுற்​றுச்​சூழலுக்​குப் பெரிய பா​திப்​பு​கள் இன்றி இத்​திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்​கான இறுதி சாத்​தி​யக்​கூறுகள் குறித்து தீவிர ஆய்​வு​கள்​ தற்​போது நடைபெற்​று வருகின்​றன


|கட்டணமில்லா

ஏ.ஐ (A.I)பயிற்சி | 


இன்றைய காலக்கட்டத்தில் அடிப்படை கணினி அறிவு அனைவருக்கும் அவசியமாக இருப்பதைப் போலவே, மெல்ல மெல்ல ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தற்போது மனித வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்று, அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் மாறிவருகிறது.


இதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘யுவா ஏ.ஐ. ஃபார் ஆல்' என்கிற கட்டணமில்லா ஏ.ஐ. பயிற்சியை வழங்குகிறது.

அனைத்துத் தரப்பினரும் ஏ.ஐ. பற்றிய அடிப்படைத் திறன்களைப் பெற இந்தப் பயிற்சி உதவும்.

இது 4.5 மணி நேர இணையவழிப் பயிற்சி. தமிழ் உள்பட 11 மொழிகளில் வழங்கப்படுவதால், அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.


எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இதில் சேரலாம்.


இந்தப் பயிற்சியின் மூலம் ஏ.ஐ. செயல்பாடுகள், அதைப் பயன் படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இத் துறையில் உருவாகவுள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.


இந்தப் பயிற்சி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவல கங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். பயிற்சியை நிறைவுசெய்பவர்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.


இதில் சேர ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம்' இணையதளத்தைப் பார்வையிடலாம்.

இதைத் தவிர, ‘கூகுள் ஏ.ஐ. எசென்ஷியல்ஸ்', ‘எலிமென்ட்ஸ் ஆஃப் ஏ.ஐ.', ‘ஜியோ ஏ.ஐ. கிளாஸ்ரூம்' போன்ற பயிற்சிகளையும் கற்றுக்கொள்ளலாம்.


மேலும், ‘ஏ.ஐ. / எம்.எல். யூசிங் பைத்தன்' என்கிற 36 மணி நேரப் பயிற்சியும் ‘ஸ்வயம்' இணையதளத்தில் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.


இதில் சேர கணிதத்தில் அடிப்படை அறிவும், கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் ஓரளவு அறிவும் இருந்தால் போதுமானது.


உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய