ஒரு போட்டோ எடுக்க ரூ.6 கோடி.
◼️ மதுரையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கொட்டித் தீர்த்த கனமழை. கர்டர் ரயில்வே தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம்.
◼️ திங்கள் அல்லது செவ்வாய் முதல் கிராமப்புற ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை. அடுத்த மாதம் முதல் கோதுமை மாவு பாக்கெட் விற்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தகவல்.
◼️ அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தொடர விரும்பி இசக்கி சுப்பையா கடிதம் அளித்த விவகாரம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி.
◼️ தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை. முதற்கட்டமாக இரண்டு பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை.
◼️ நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை. தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை எனக் கூறி தாக்குதல் நடத்தியவர் கைது.
◼️ ஓசூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் லஞ்சம் வாங்கிய விவகாரம். கைதான இடைத்தரகரின் சேலம் வீட்டில் 6 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.
◼️ டெல்லியில் ஏர் இந்தியா விமானம் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்ட சம்பவம். தலைமை விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, பணி நீக்கம்.
திங்கள் (7)அன்று சவால்விட்ட முதல்வரி்டம் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி மட்டுபல்ல யாருமே கேள்வி கேட்க முடியாது.அன்று சட்டசமையில் 'கேள்வி'நேரம் தடை.என பேச்சு எழுகிறது.
டெல்டா மாவட்டங்கள் வறண்டு கிடக்கின்றன. அதைப் பற்றி கொஞ்சமாவது முதலமைச்சர் விஜய்க்கு கவலை இருக்கிறதா? இல்லை.
உழவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது புதுத் திட்டம் உண்டா? சொல்லி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதியன்று திறக்கப்படும். இந்த ஆண்டு திறக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. திறப்பதற்கான முயற்சியாவது எடுத்தாரா? அதுவும் இல்லை.
ஆண்டுதோறும் வழக்கமாகத் திறக்கும் நாளில் மேட்டூர் அணையைத் திறக்க முடியவில்லையே என்ற கவலை அல்லது வருத்தமாவது முதலமைச்சர் விஜய்க்கு
இருக்கிறதா? இல்லை.
ஜூன் 12 ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையை செப்டம்பர் 1 ஆம் தேதி திறந்து வைக்க பட்டுவேட்டி சட்டையோடு போன முதலமைச்சர், விஜய்யாக மட்டுமே இருக்க முடியும். இவருக்குதான் என்ன செய்கிறோம்
என்பதைத் தெரிந்து செய்கிறாரா? இல்லை தெரியாமல் தான் செய்கிறாரா?
82 நாட்கள் தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனால் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சாகுபடி குறையும் என்கிறார்கள்.
இதற்கு முதலமைச்சரின் பதில் என்ன? ‘செல்லம் பாட்டிக்கு கூலிங்கிளாஸ் கொடுத்துவிட்டேன்’ என்பது தான் அவர் இந்த மாநிலத்துக்குச் சொல்லும் பதிலா?
ஒரே ஒரு பாட்டிக்கு கூலிங்கிளாஸ் கொடுத்து விட்டால் கோடிக்கணக்கான உழவர்களை கூல் செய்து விட முடியுமா?
மூதாட்டியைக் கட்டிப் பிடித்து போட்டோ எடுப்பதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர். செய்துவிட்டுப் போய்விட்டார். இன்னும் அந்த அதரப்பழைய பாணி தனக்கு கைகொடுக்கும் என்று விஜய் நம்புகிறாரா?
‘அரசாங்கம் மாசா மாசம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய்ல தான் என் வாழ்க்கையே ஓடுது’ என்று விஜய்யிடமே சொல்லி இருக்கிறார் அந்த மூதாட்டி.
ஆயிரம் ரூபாய் நோட்டில் தெரிவது திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகம் அல்லவா? இவரைப் போன்றவர்களை ஏமாற்ற முடியாது.
கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உரிய அளவில் வழங்குவது இல்லை. அதைத் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத முதலமைச்சராக விஜய் இருக்கிறார்.
அதை மறைக்க ‘மேட்டூர்சூட்டிங்’ போல, ‘மைசூர் சூட்டிங்’ எடுக்க நினைத்தார் விஜய். ஆனால்
கர்நாடக அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின் வாங்கினார் விஜய்.
காவிரி உரிமை நீரைத் தடுக்க மேகதாது அணையைக் கட்டுகிறது கர்நாடக மாநிலம். இதனைத் துணிச்சலோடு எதிர்க்கவில்லை முதலமைச்சர் விஜய். பாவலா காட்டிக் கொண்டு இருக்கிறார்.
இந்த உரிமைகளுக்காக ஒன்றிய அரசிடம் பேச வேண்டிய தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி, ஏதோ ஒரு விழாவில் நடிகையுடன் கைகோர்த்து ஆடிக் கொண்டு இருக்கிறார்.
தனது படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்ட வழங்கப்பட்ட பதவி அது.
தனது அதிகாரத்துக்கு உட்பட்ட மாநிலத்தில் உழவர்களுக்கு நன்மை செய்தாரா முதலமைச்சர் விஜய் என்றால் அதுவும் இல்லை.
அனைவருக்கும் பயிர்க்கடன் என்று சொல்லி விட்டு, அதிலும் பல்வேறு நிபந்தனைகளை வைத்து உழவர்களை ஏமாற்றினார் விஜய்.
இதன் தொடர்ச்சியாகத்தான் மேட்டூர் ‘சூட்டிங்.’ மேட்டூர் அணையை தண்ணீரைத் திறந்து வைக்க வருகை தரும் இவருக்கு ஆன செலவு மட்டும் ரூபாய் 5 கோடியைத் தொடுகிறதாம்.
இவரைப் பாதுகாக்கிறார்களாம்? யாரிடம் இருந்து? அவரது ரசிகர்களிடம் இருந்து. உலகத்தில் சொந்த ரசிகரை ‘பேரிகார்டு’ வைத்து தடுத்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு பயந்து போயிருக்கிறார் விஜய்.
தேவையான அளவு தண்ணீரே இல்லை. பயிர் விளைச்சலுக்கு இது போதுமானதும் இல்லை.
அரைகுறை நிலையில் மேட்டூர் அணையைத் திறந்து வைக்க கோடிகளை வாரி இறைக்க வேண்டுமா? அரசாங்கக் காசில் தனது விளம்பர வெறியைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமா?
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சரியாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர் திறந்து வைக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே திறந்து வைக்கப்பட்டது. இதெல்லாம் இன்றைய முதலமைச்சருக்குத் தெரியுமா?
மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டால் 200 நாட்கள், 180 நாட்கள் என தண்ணீர் பாயும். அதுதான் உழவர்களை மகிழ்வித்தது.
இன்று மூன்று மாத காலம் தாமதமாகத் திறப்பதால் மொத்தமே 45 நாட்கள் தான் தண்ணீர் பாயும். இது போதாது, காணாது என்கிறார்கள் உழவர்கள். இதுவாவது முதலமைச்சருக்கு சொல்லப்பட்டதா?
“டெல்டா பாசனத்துக்காக செப்.1–ம் தேதி முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும்” என அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 90 அடியாகத் தான் உள்ளது. இதனால், அணையில் இருந்து 40 முதல் 50 நாட்கள் வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இது சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது.
எனவே, அணைக்கு நீர்வரத்தும் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை இருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகோ அல்லது செப்.10–ம் தேதிக்கு பிறகோ பாசனத்துக்காக தண்ணீர் திறந்தால்தான் ஒரு போக சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுமையாக செய்ய முடியும்” என்று விவசாய சங்கங்கள் சொல்வதை முதலமைச்சர் விஜய்க்கு யாராவது சொன்னார்களா?
அல்லது, ‘சூட்டிங் தானே போய் வரட்டும்’, ‘அவர் மேட்டூர் அணையைத் திறக்கப் போகவில்லை, செல்லம் பாட்டிக்கு கூலிங்கிளாஸ் கொடுக்கத் தானே போகிறார்’ என்று அதிகாரிகள் விட்டுவிட்டார்களா?



