நீதிபதிகள்+பிரதமர்கள்=புனிதர்கள்?



அதுவும்-இதுவும் ஒன்றல்ல:முரசொலிக்கு பதில்
Read more about என்ற by Administratuthors: Administrator
அதுவும்-இதுவும் ஒன்றல்ல:முரசொலிக்கு பதில்

Read more about என்ற by Administrato
  # தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா பேசியது: லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் நீதிபதிகளை கொண்டுவர வேண்டும் என்ற ஹசாரேயின் கோரிக்கையை ஏற்கமுடியாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நீதிபதிகளை லோக்பால் அமைப்புக்குள் கொண்டு வந்தால், அது நாட்டின் ஜனநாயக முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். தன்னாட்சி உள்ள நீதித்துறை தேவை. அதை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர விரும்புவது தவறானது. நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து லோக்பால் உறுப்பினர்களால் கேள்வி கேட்க முடியும். இந்நிலை ஏற்படாமல் தவிர்க்கப்படவேண்டும். தவறிழைக்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடவடிக்கை தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ளது. ஹசாரே உத்தேசித்துள்ள உண்ணாவிரதம் ஜனநாயகத்துக்கு எதிரானது. இவ்வாறு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறினார். 
சரிதான்  வர்மா ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறார்.
நீதிபதிகளுக்கு எதிராக சட்டமியற்றும் அதிகாரம் எந்த அளவில் செயல்படுகிறது. நீதிபதி தினகரன் மீதான குற்றசாட்டுகளுக்கு இதுவரை நம்மால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது.அரசு செலவில் வீடுக்கு சாமான்கள் வாங்கிப்போட்டு ஒரு நீதிபதி கையும்-களவுமாக பிடிப்பட்டார்.என்ன செய்தீர்கள்.அவர் பின் அ.தி.மு.க,வில் சங்கமமாகிப்போனார்.
இதேபோல் பிறந்த தேதியை மாற்றியவர்,சாதியை மாற்றி பலன் அடைந்தவர்,புறம் போக்கை வளைத்து உறவினர் மூலம் ரியல் எஸ்டேட் நடத்தியவர்கள் .இவர்கள் அனைவரும் மகாக்கனம் பொருந்திய நீதியரசர்கள்தான்.அவர்களை அவர்கள் செய்த குற்றங்களுக்காக நம்மால் இந்த சட்டமியற்றும் அதிகாரத்தை வைத்து என்ன செய்ய முடிந்தது.எத்தனை நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.?
   வர்மா கூறுவது சரியான வாதம் அல்ல. எங்களை லோக்பால்,தகவல் உரிமை சட்டம்,சொத்துக்கணக்கு காட்டுதல்  எதிலும் சேர்க்கக்கூடாது என்றால் இவர்கள் இந்த சட்டத்தின் மீது மற்றவகளுக்கு தண்டனை வழங்கும் தகுதி இவர்களுக்குக் கிடையாது.
   சிபி அரசன் சிலையை ஏன் நீதிமன்றம் முன் வைத்திருக்கிறார்கள். தானும் சட்டத்திற்கு உட்பட்டவந்தான் எனக்காட்டத்தான்.
  நீதிபதிகள் =பிரதமர்கள் என்ன தனியாகவா பிறப்பெடுத்து வருகிறார்கள்.இந்த மனிதக் கூட்டத்தில் அவர்களும் அங்கம்தானே?
  அவர்களுக்கும் குடும்பம்,ஆசாபாசங்கள் இருக்கும்தானே.நீதிபதிகள் தங்கள் கல்வியாலும்.பிரதமர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும்[மன்மோகன் சிங் போன்றவர்கள் அமெரிக்கா மற்றும் பகாசுர நிறுவனங்கள் மூலமாகவும் ]தானே அந்தப்பொறுப்பில் வரிகிறார்கள்.
      லோக்பால் மட்டுமல்ல.தகவல் உரிமை சட்டம், சொட்துக் கணக்கைக்காட்டுதல் ஆகிய எல்லாவற்றிலும் இந்த இரு புனித பொறுப்பில் உள்ளவர்களையும் சேர்க்க வேண்டும்.
அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.வர்மா கூறும் சட்டமியற்றும் அதிகாரம் ஒரு செல்லாக்காசு என்பதையே இதுவரை நடந்தவை நமக்கு  தெளிவாக்கி விட்டதே..
=============================================================================

விண்டோசின் ஆன்லைன் டிரைவ்,,,,

என்ன தான் வன்தட்டின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும் நாம் அதில் பதியும் கோப்புகளின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.சில நெருக்கடியான வேளைகளில் எந்த கோப்பை அழிப்பது, எந்த கோப்பை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம்.
இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஓன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய கோப்புக்களை சேமித்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள கோப்புக்களை பதிவேற்றம் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஓன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பது தான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்(Windows Live Sky Drive) வசதியாகும்.
இந்த ட்ரைவில் கோப்புக்களை சேமித்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேமித்து வைக்கலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 பொட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு கடவுச்சொல் பாதுகாப்பு உண்டு.
அத்துடன் இந்த கோப்புக்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு(Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக்(Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் உங்களுக்கென்று கணக்கு ஒன்றைத் தொடங்கி கொள்ளுங்கள்.
பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று கோப்புக்களை பதிவேற்றம் செய்திடலாம். உங்கள் கோப்புக்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கணணியில் உள்ள மற்ற வன்தட்டு ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய கோப்புக்களை உங்கள் கணணியில் வைக்காமல் ஓன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன்  சிறப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?