வடக்கு தேய்கிறது.


இலங்கையின் வடபகுதியில்தமது சொந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களை வெளியேற்றி அவர்களின் நிலங்களை இந்தியா, மற்றும் அமெரிக்க கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் பின்னணியில்இருந்து இந்தியாவே செய்கிறது. அதன் பலத்துடன் தான் இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
சுரன்

தமிழ் மக்களை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா இன்று அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்கள்,நிலங்களையும் பறித்து வருகிறது. வடபகுதியில் சிங்கள மக்களையும் குடியேற்றுவோம் என்ற “மாயையை’ தென்பகுதியில் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது.
ஆனால் இதில் உண்மையில்லை. இந்திய, அமெரிக்க கம்பனிகளுக்கு காணிகளை விற்றுவிட்டு எஞ்சிய நிலங்களில்இலங்கை இராணுவத்தினரைக் குடியேற்றும் திட்டமேஈலங்கை அரசிடம் உள்ளது.

உலகின் இரண்டாவது பாலஸ்தீனமாக இலங்கையில் தமிழர்களின் வடபகுதி உருவாகி வருகிறது. 
இதற்கு இஸ்ரேலின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
அதற்காகவே இலங்கையில் இஸ்ரேலிய தூதரகமும் இரகசியமாக இயங்கி வருகிறது. எனவே தமிழ் மக்கள் தங்களின் மண் மீட்புப் போராட்டத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்.
அதன்மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.. தமிழ் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் செய்து வருகின்றோம்.
இதை கூறியுள்ளவர் இலங்கை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
சுரன்

அவர் கூறியுள்ளது போல் சமீப காலமாக சிங்களர் குடியேற்றத்துக்கு என அரசு ஈழத்தமிழர் பலரின் நிலங்களை வலுக்கட்டாயமாக வாங்கி வருகிறது.
ஈழத்தமிழர் படு கொலையில் இந்திய அரசின் கைகள் இருந்தது போல் இந்நில அபகரிப்பிலும் இந்தியா பின்னாள் இருக்கிறதா?என்பதை ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிக்கும் தமிழகத்தலைவர்கள் கண்டு பிடித்து அம்பலப் படுத்த வேண்டும்.
ஏற்கனவே வடபகுதியை தங்கள் சொந்த பகுதியாக எண்ணக்கூடாது.என சிங்கள வெறியர்கள் பேசி வரும் வேளையில் கருணா ரத்ன கூறுவது உண்மையாகி விடக்கூடாது.
__________________________________________________________

டாஸ்மாக்கில் இனி கோக கோலா?

கோக்க கோலா,பெப்சி பற்றியும் அதன் விடத்தன்மையை பற்றியும் பல பதிவுகள் போட்டுள்ளோம்.ஆனால் அதை அருந்தும் போதை அடிமைகள் பலர் அதிகரித்து வருகிறனர்.
உலகம் முழுக்க தினசரி கோக கோலா அருந்துபவர்கள் எண்னிக்கை 6,00,00,000 கோடிக்கும் மேலாம்.
சுரன்

அவர்களை இப்படி தனக்கு அடிமையாக்கும் கோக கோலாவில் 10% அளவுக்கு சாராயம் அதாங்க ஆல்ஹகால் கலக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
அதனால்தான் கோக கோலா அருந்துபவர்கள் மிதமான போதைக்கு அடிமையாகி மீண்டும்,மீண்டும் அதை அருந்தி வருகின்றனராம்.
இப்போது கோக கோலாவை மதுபான வகை பட்டியலில் சேர்த்திடலாமா என்று பிரான்ஸ் யோசனையில் உள்ளதாம்.
_____________________________________________________________

மின் வெட்டும்---

தின மலரின் ஜால்ரா தட்டும்.

மே மாதம் வரை, தமிழக மக்களுக்கு, பெரும் தலைவலியை கொடுத்து வந்த விஷயம், மின் வெட்டு. இது, தற்போது படிப்படியாக குறைந்து, பொதுமக்களை சற்று நிம்மதி பெருமூச்சுவிடச் செய்து வருகிறது. தமிழகத்தில், ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், 27ம் தேதி நிலவரப்படி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மின் வெட்டு என்பதே இல்லை என்ற நிலையிலும், சென்னை, மதுரை, ஈரோடு பகுதிகளில் அறிவித்தபடி மின் வெட்டும், மற்ற இடங்களில் அறிவித்ததை விட, அதிக நேரம் மின்வெட்டும் அமலில் உள்ளது.
சுரன்

இது தினமலர் செய்தி.அதிலும் நெல்லைப்பதிப்பில் வராத செய்தி.
ஜெயலலிதா அரசுக்கு லாலி பாட வேண்டியதுதான்.அதற்காக இப்படியா?
தூத்துக்குடி பகுதியில் மின் வெட்டே இல்லையாம்.
நாங்கள் இருப்பது தூத்துக்குடி பகுதிதான்.இங்கு காலை 10 மணியளவில் மின்வெட்டு ஆரம்பிக்கிறது.அது உடனேயும் வரும் இரண்டு மணி நேரம் கழித்தும் வருகின்றது.
இரவு கண்டிப்பாக பல முறை மின் வெட்டு நிகழ்கிறது.எப்படியும் இரு முறை ஒரு மணி நேர அளவில் போய் வருகிறது.
அனல் மின் நிலையப்பகுதி என்பதால் முன்பு மின்வெட்டு குறைவாக இருக்கும்.ஆனால் ஜெ ஆட்சியில் அனைவருக்கும் சமமான மின் வெட்டுதான்.
இது போன்ற செய்தியை வெளியிட்டு ஜெயலலிதாவுக்கு லாலி பாடினாலும்.தினமலருக்கும் ஒரு நாள் ஜூனியர் விகடன் போல் ஆப்பு தயாராகிக்கொண்டுதான் இருக்கிறது.
எப்படியாவது கைதவறி செய்தியை போட்டு அம்மாவை கோபப்படுத்ததான் போகிறார்கள்.அம்மா வழக்கு போடத்தான் போகிறார்கள்.
____________________________________________________

சுரன்

உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைத்தது அக்காலம்.
சாப்பாடு உள்ளளவும் மட்டும் நினைப்பது இக்காலம்.

கொளுத்தும் வெயிலில் ஒடி கூடை அள்ளிப்போட்டால்தான் 
இன்று உப்பிட்ட சோறு உண்ணலாம்.

காலி குத்தும் உப்புமணிகள்- கண்ணை கூசச்செய்யும் 
அதன் வெண்ணிற வெளிச்சங்கள்.

ஓடி உப்பள்ளவே நேரமில்லா நேரத்தில் பேசி பிழைப்பைக்
கெடுத்திட நேரமில்லை .இங்கு யாருக்கும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?