பகத் சிங்

பகத்சிங் பிறந்த நாள் ஆன செப்டம்பர் 28யை விட, அவரது வீரமரண நினைவு நாளான மார்ச் 23க்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1870 செப்டம்பர் 28ல் பகத்சிங் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
லாகூரில் நடந்த ஊர்வலத்தின் போது லாலாலஜபதிராய் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 
அக்காலத்தில் மத்திய சட்டசபை என அழைக்கப் பட்ட இன்றைய பார்லிமென்ட் கட்டடத்தின் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் என இரு சம்பவங் களுக்காக ஆங்கிலேய அரசு பகத்சிங்கை முதல் குற்றவாளி என அறிவித்து 1931ல் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. 

பகத் சிங் தன்னை தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டிக்கொண்டார்.காரணம் தூக்கில் போட்டால் தான் சாகும் போது தனது கால்கள் இந்திய மண்ணை விட்டு பிரிந்திருக்கும் என்று கூறினார்.
ஆனால் ஆங்கிலேய அரசு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றவில்லை.
பகத்சிங்கிற்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக ஆங்கிலேய அரசு  காந்தியிடம் ஆங்கில அரசு கருத்து கேட்டது.

தாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை என்று மட்டும் கூறி பகத் சிங்கிற்கு தூக்குத்தண்டனை கொடுக்க தனது ஆதரவை தந்தார்.அவருக்கு தனது தலைமையின் கீழ் இந்தியா விடுதலை பெறுவது மட்டுமே பிடித்திருந்தது,அதற்காக தனனையே தலவராக முன்னிறுத்த ஆங்கிலேய அரசிடம் மறைமுக ஆதரவை கூட பெற்றிருந்தார்.
இவரின் வழ,வழ அரசியல் பிடிக்காத திலகர்,சுபாஷ் சந்திரபோசு போன்றோர்களை காங்கிரசை விட்டு தாமாகவே ஒதுங்க வைத்தார்.

இருமுறை காங்கிரசு தலைவாரக வாய்ப்பிருந்தும் சுபாஷ் சந்திர போசு காந்தியின் எதிர்ப்பால்தான் காங்கிரசினை விட்டு ஒதுங்கி தனையே இந்திய படை அமைத்தார்,
இதனால் பகவத் சிங் தூக்கை தடுத்து நிறுத்தவில்லை என காரணம் கூறி, 1931ல் கராச்சி காங்கிரசுக்கு வந்த காந்திக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது.அவரை கண்டித்து குரல்கள் ஆவேசமாக எழுப்பப்பட்டது.

கராச்சி அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் காந்திக்கும்,ஆங்கில அரசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன.

இவை காங்கிரசு வரலாற்றில்.ஏன் இந்திய வரலாற்றில் இருந்தும் கவனமாக நீக்கப்பட்டு விட்டன.
ஏதோ காந்தி ராட்டையில் நூல் நூற்றும்-உண்ணாநிலை இருந்ததும் தாளாமல்தான் ஆங்கிலேயர் விடுதலையை கொடுத்து விட்டு ஒடியது போலவும்,உண்மையில்அவர்கள் ஓட காரணமான ஆயுதப்போராளிகள் ,தீவிரவாத கருத்துடையவர்களை பங்கை மறைக்கும் விதமாகவுமாக இந்திய விடுதலை வரலாறு அமைக்கப்பட்டு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மீசை மீது ஆசை





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?