ஆர்.எஸ்.எஸ் ,ஆட்டம் ஆரம்பம்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது சிஏஏவுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாக கூறி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டப்பகுதியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இந்த வன்முறையில் 3 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமைக்காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் காவல் ஆணையர் அமித்ஷர்மா மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதையடுத்து துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நிலையை ஆர்.எஸ்.எஸ்.&பாஜக வினர் மற்ற போராட்டக் களங்களிலும் செயல் படுத்த உள்ளதாக தகவல் வருகிறது.
-------------------+------------------+------------------
அண்டவியல் ஹாக்கிங் கடைசி ஆய்வு.8

அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், தனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தார்.
அவர் கடைசியாக எந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தார் என்பது சார்ந்த விவரங்கள் மர்மமாகவே இருந்தன. அந்த மர்மம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தை போன்றே இருக்கும் பல கிரகங்களை கொண்டு இருப்பதாகக் கூறுகிறது.
சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வுக்கட்டுரையானது, பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கிறது.
நாம் இருக்கும் பூமி, அந்த பூமி இருக்கும் சூரிய குடும்பம், அந்த சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம் (மில்கி வே கேலக்ஸி), அந்த பால்வெளி மண்டலத்தை சுற்றி இருக்கும் இதர பால்வெளி மண்டலங்கள் என எல்லாமும் சேர ஒரு பிரபஞ்சம் உருவாகும்.
அப்படியான பிரபஞ்சம் ஆனது தனியாக இல்லை, தன்னை போன்றே உள்ள பல நூற்றுக்கணக்கான பிரபஞ்சங்களை கொண்டுள்ளது என்று நம்புமொரு கோட்பாடு தான் - பேரலல் யுனிவர்ஸ் அல்லது மல்டிவெர்ஸ் (Multiverse).!
அங்கு உயிர்கள் நிச்சயமாக இருக்கலாம் அல்லது சுத்தமாக இல்லாமல் கூட போகலாம். ஏனெனில் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமான பிக் பேங்க் (Big Bang) வெடிப்பில் சிதறிய அத்துணை பிரபஞ்சங்களிலும் அணு உற்பத்தி ஆகியிருக்கும் என்று கூற முடியாது.
அணு இல்லையேல் மூலக்கூறுகள் இல்லை, மூலக்கூறுகள் இல்லை என்றால் நட்சத்திரங்கள் உருவாகி இருக்காது. நட்சத்திரங்கள் உருவாகவில்லை என்றால் நிச்சயமான கிரகங்கள் உருவாகி இருக்காது. கிரகங்கள் இல்லை என்றால் நிச்சயமாக உயிர்கள் இல்லை என்று தானே அர்த்தம்.
சரி ஒருவேளை, அணுக்கள் உருவாகி இருந்தால், அதன் வழியாக கிரங்கங்கள் உருவாகி இருந்தால், உயிர்களும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது தானே என்று கேட்டால் - ஆம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த உயிரினம் நம்மை போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.? அல்லது நம்மை மிஞ்சியதொரு உச்சத்தை அடைந்து இருக்குமா.? என்கிற கேள்விக்கு பதில் இல்லை.
இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை, 1980 களில் ஹாக்கிங் தேட தொடங்கினார். அவருக்கு துணையாக அமெரிக்க இயற்பியலாளர் ஆன ஜேம்ஸ் ஹார்டில் பணியாற்றினார்.
இந்த கூட்டணி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை உருவாக்கியது. அது, பிரபஞ்சம் ஆனது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்கிற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் இருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களை தீர்த்தது.
ஹார்டில் - ஹாக்கிங் கூட்டணியானது, குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற ஒரு கோட்பாட்டை பயன்படுத்தி, எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விளக்கியது.
அந்த புதிய விளக்கத்தை பகுப்பாய்வு செய்தபோது, ​​பிக் பேங் எனும் பெருவெடிப்பானது ஒரே ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை, முடிவில்லாத எண்ணிக்கையின் கீழ் பல பிரபஞ்சங்களை உருவாக்கி இருக்கும் என்கிற ஒரு உறுதிப்பாடு கிடைத்தது.
-----------+----------+-----------+------------
வாழ்வாதாரம்,பாதுகாப்பின்மை.
உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லாண்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்று, நிலைத் தன்மை மற்றும் செழிப்புக் குறியீடு ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த ஆய்வை நடத்தினர்.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை, கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்புக் குறியீடுகளில் அடங்கும்.


“குழந்தைகள் வாழமுடியாத மோசமான நாடாக மாறிய இந்தியா”: மோடி ஆட்சியின் சாதனை இதுதானா? - அதிர்ச்சி தகவல்!
இதன்படி நிலைத்தன்மை குறியீட்டில், குழந்தைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய வாழ்வு ஆகியவை அடங்கு. அதன்படி, நிலைத்தன்மை குறியீட்டில் 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடமே கிடைத்துள்ளது.
அதேப்போல் செழிப்புத் திறன் குறியீட்டில், இன்னும் மோசமாக 131-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த செழிப்புத் திறன் குறியீட்டு பட்டியலில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர் 12-வது இடத்தையும், சீனா 43-வது இடத்தையும், சிறிய நாடான இலங்கை 68-வது இடத்தையும் பெற்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
பாகிஸ்தான் 140-வது இடத்தையும், வங்கதேசம் 143-வது இடத்தையும் பெற்றுள்ளன. குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, நல்ல ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை வழங்கும் நாடுகள் பட்டியலில், நார்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆனால் மோடியின் கடந்த கால ஆட்சியில் இருந்து தற்போது வரை மக்கள் எல்லாவகையான சிரமங்களையும் சந்தித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?