ஊழலின் மறுபெயர்.

 கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதுயரம் பல முனைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன்இன்மையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் போதிய அளவிற்குப் படுக்கைகளும், மருந்துகளும் இல்லை. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் சாவுகளையும் மூடிமறைத்திடும் சூழ்ச்சிகள். கொரோனா தடுப்பூசிகளில் பற்றாக்குறை ஏற்படுத்தி, அரசாங்கமே கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்துக்கொடுத்திருப்பது. இவை எல்லாவற்றையும்விட மொத்தமாக மாபெரும் ஊழல் சாம்ராஜ்யத்துடன் மோடி அரசாங்கமே திகழ்வதாகும்.இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இப்போது மிகப்பெரிய அளவில் அழிவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. 1943இல் வங்கத்தின் வறட்சி நிலைமையில் மக்கள் உயிரிழந்ததற்குப்பின்னர் (அப்போது சுமார் 30 லட்சம் பேர் பசி-பட்டினி, ஊட்டச்சத்தின்மையால் இறந்தார்கள்) மிகப்பெரிய அளவில் மோசமான பேரழிவு இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.  அப்போது ஏற்பட்ட அழிவிற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அது கடைப்பிடித்த காலனியாதிக்கக் கொள்கைகளும் காரணமாகும். நாடு ‘பிரிவினை’யுற்ற சமயத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான மரணங்கள், பரஸ்பரம் மதவெறிக் கொலைகள் என்பதால் இதுபோன்ற அழிவுநிகழ்வுகளுடன் ஒப்பிடக்கூடாது.


தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்றில், குறைந்தபட்சம் பத்து லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். இறப்போர் எண்ணிக்கை மலைபோல் தொடர்கிறது. இந்த விவரம்கூட மிகவும் குறைவான மதிப்பீடேயாகும். அதிகாரப்பூர்வமாகவே இரண்டு லட்சம் பேர் இறந்திபெற்றிருக்கின்றன.

மோடியும் அரசுமே பொறுப்பு
இத்தகைய பேரழிவுக்கு நரேந்திர மோடியும் அவருடைய அரசாங்கமும்தான் பொறுப்பு என்று கூறுவதற்குபெரிய அளவில் வரலாற்றாராய்ச்சி எதுவும் தேவை இல்லை. மோடி அரசாங்கத்தின் குற்றப்பொறுப்பை எடுத்துக்காட்டுவதற்கு, இப்போது ஏப்ரல் 19 அன்றுமோடி அரசாங்கம் பிறப்பித்துள்ள புதிய தடுப்பூசிக்கொள்கையைக் காட்டிலும் வேறெதையும் கூறவேண்டியதில்லை.இப்போது மருத்துவமனைகளில் உள்ளேயும் வெளியேயும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நோயாளிகள் மூச்சுவிடுவதற்கு ஆக்சிஜன் இன்றி திண்டாடிக் கொண்டிருக்கும் பயங்கரமான காட்சிகள் இந்தியாவையும், உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன.  வரவிருக்கும் காலங்களில், திரவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பது, மருத்துவமனைகளில் அவற்றின் சப்ளைகளை உறுதிசெய்வது, ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது ஆகியவற்றிற்குக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

தடுப்பூசிக் கொள்கையின் பாகுபாடும் அநீதியும்
எனினும், உடனடியாக, நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த வேண்டியது அவசர அவசியமாகும். ஆனால் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டமோ மிகவும் மோசமானதாகவும், பாகுபாட்டுடனும், அநீதியாகவும் வகுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இதுதொடர்பாக தன் பொறுப்பைக் கைவிட்டுவிட்டது. நாட்டின் குடிமக்களில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடையேயுள்ளவர்களுக்கு, தடுப்பூசிகள் கொள்முதல் செய்யும் பொறுப்பை, மாநில அரசுகளின் பக்கம் தள்ளிவிட்டது. அனைத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசிகள் வாங்குவதற்கான வள ஆதாரங்கள் கிடையாது. மத்திய அரசானது, தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதத்தை மாநில அரசாங்கங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருப்பதன் மூலம், மிகவும் குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளைப் பெறுவதில், மாநில அரசுகள் வாங்குவதில் தேவையற்ற போட்டிக்குவழிதிறந்து விட்டிருக்கிறது.முதலாவதாக, பிரதமரின் நேரடி ஒப்புதலின்கீழ், மக்களைக் கசக்கிப்பிழிந்து கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும், பயோடெக் நிறுவனமும் உரிமங்கள் பெற்றிருக்கின்றன.

மாநில அரசுகள் மீது பழிபோடவே...
இரண்டாவதாக, மத்திய அரசாங்கம் நாட்டில் 18 வயதுக்கு மேம்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், அவர்கள் தடுப்பூசிகள் போடுவதற்குத் தேவையான தடுப்பூசிகள் உற்பத்திசெய்ய முடியவில்லை என்பதும், அல்லது வெளிநாடுகளிலிருந்து போதுமான அளவிற்கு தடுப்பூசிகள் வாங்கி இருப்புவைக்காததும் நன்கு தெரிந்தும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இழிவான முறையில் அறிவித்திருக்கிறது. இதற்காக மாநில அரசாங்கங்கள் அதிக விலைகொடுத்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்கள் போதுமான அளவிற்குத் தடுப்பூசிகள் போடாவிட்டால் அந்தப் பழியை மாநில அரசுகள் மீது சுமத்தும் விதத்தில் மடைமாற்றிவிட்டிருக்கிறது.

மூன்றாவதாக, தடுப்பூசி உற்பத்தி செய்திடும் தனியார்நிறுவனங்கள் இரண்டும்தான், எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு அனுப்பவேண்டும், எப்போது அனுப்ப வேண்டும்என்று தீர்மானித்திடும். மத்திய அரசின் ஒரே கட்டளையின்கீழ் மாநில அரசுகள் அனைத்தும் இவ்விரு கம்பெனிகளின் விண்ணப்பதாரர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மாநில அரசாங்கங்கள் தனியார் மருத்துவமனைகளுடனும், கார்ப்பரேட்டுகளுடனும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பூசிகளை வாங்கியாக வேண்டும்.

படுதோல்வியை மூடி மறைக்க...
அனைத்து மாநிலங்களிலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதே எந்த அளவிற்குத்தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் பெற்ற அளவிற்கு பின்னர் மாநில அரசுகளால் தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை என்றும், பாதி அளவிற்குத்தான் வந்திருக்கிறது என்றும்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எதார்த்தஉண்மையை மத்திய அரசாங்கமும், சுகாதார அமைச்சகமும் மறுப்பது தொடர்கிறது. தடுப்பூசிப் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் சமாளிப்பதில் படுதோல்வி அடைந்ததை மூடிமறைப்பதற்காக, மாநில அரசாங்கங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.  

இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட், கோவிஷீல்டின் விலையைமாநில அரசாங்கங்களுக்கு ஒரு தடுப்பூசி ஒரு தடவை(dose)க்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் ஒருபடி சென்று மாநில அரசாங்கங்களுக்கு 600 ரூபாய் என்றும், தனியார்துறைக்கு 1200 ரூபாய் என்றும் நிர்ணயித்திருக்கிறது. இதனைப் பகல் கொள்ளை என்று கூறுவதைத்தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.மோடி அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கையும் ஊகிக்கக்கூடியதேயாகும். அது தடுப்பூசி உற்பத்தி செய்திடும் நிறுவனங்களிடம் விலையைக் குறைத்திடுமாறு கேட்டுக் கொள்ளும். இதனை செவிமடுத்து, அவையும் பெயரளவில் சற்றே விலைகளைக் குறைத்திடலாம். இதற்கு மத்திய அரசு உரிமை கொண்டாடிடும். ஆனாலும் தடுப்பூசிக் கொள்கையில் உள்ள சமத்துவமின்மையும், பேராசையும் தொடர்ந்து நீடித்திடும்.

இலவச தடுப்பூசிபோட ...
எந்தவிதத்திலும் இதனை ஏற்க முடியாது. இந்தக் கொள்கையை அரசாங்கம் உடனடியாகக் கிழித்தெறிய வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை இலவசமாக்கும் விதத்தில் புதிய கொள்கையை அறிவித்திட வேண்டும்.மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளுக்காக பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்திடும்போது நிதியமைச்சர், தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது மத்திய அரசு 45 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பதற்காக, அந்தத் தொகையில் வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அளிக்க
வேண்டிய பங்கினை அளிக்க மறுத்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் மூலமாக இலவசத் தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு மீதமுள்ள 25 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினாலே போதுமானதாகும்.இவ்வாறு சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில் அதனை மோடி-அமித்ஷா இரட்டையர் கையாண்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோபம்நியாயமானதேயாகும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றும் விதத்தில் ஓர்ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டமே இப்போதைய பிரதானகடமையாகும்.

இதற்கு மத்திய அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்: மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் மருந்து (விலைக் கட்டுப்பாடு) ஆணை ஆகியவற்றின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, மத்திய அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் விலைகளை நிர்ணயம் செய்திட வேண்டும். மத்திய அரசே, மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை ஒரு வெளிப்படையான சூத்திரத்தின் (formula) அடிப்படையில், அளித்திட வேண்டும். மாநிலஅரசாங்கங்கள் தடுப்பூசித் திட்டத்தை தங்கள் மாநிலங்களில் எவ்விதத்தில் அமல்படுத்திடலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னுரிமைகள் அளித்திட வேண்டும்.தடுப்பூசி உற்பத்தியை முடுக்கிவிட, கட்டாய உரிமக்கொள்கை கொண்டுவரப்பட வேண்டும். பாரத் பயோடெக்நிறுவனம் உற்பத்தி செய்திடும் கோவாக்சின் (இதன் ஆராய்ச்சிக்காக அரசாங்கத்தின் பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது) பொதுத்துறையின் கீழ் உள்ள ஆறு மருந்துக் கம்பெனிகளுக்கும், மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் அளித்திட வேண்டும். இவையன்றி இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி உற்பத்தி செய்ய முன்வந்துள்ள இந்தியக் கம்பெனிகள் அனைத்திற்கும் அனுமதி அளித்துஅவை விரைவாக உற்பத்தியைச் செய்திடக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.  இம்முயற்சிகள் அனைத்துடனும், எங்கெங்கேசாத்தியமோ அங்கிருந்தெல்லாம் இறக்குமதிகளையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.

இப்போதுள்ள அழிவுகரமான நிலைமைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் குறைந்தபட்சம் மோடி அரசாங்கம் இவற்றின் அடிப்படையில், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் ஒரு சமமான மற்றும் ஒருங்கிணைந்த விரிவான கொள்கையை அறிவித்திட வேண்டும்.

 ச.வீரமணி

------------------------------------------------------------------------------------------

மே-6 முதல்

புதிய கட்டுப் பாடுகள்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் ஒரே நாளில் 6,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 1,23,258 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழக அரசு நேற்று (மே 3) மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், 50 சதவிகிதப் பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள், இயங்க 26.4.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதி.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.

ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------

இல்லாத கொரோனா......,

பொல்லாத கொள்ளை.....

தென் சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. அங்கு 14 வயதுச் சிறுவனை அனுமதித்து சிகிச்சை பார்த்துள்ளனர். இதில் அதிர்ச்சி என்னவெனில், அந்தச் சிறுவனுக்கு கொரோனா தொற்றே இல்லை. ஆனால், இருப்பதாகச் சொல்லிச் சொல்லி தங்க வைத்து பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு செவிலியர், இந்தக் கொள்ளையைச் சகித்துக்கொள்ள முடியாமல், கொரோனாவே இல்லாமல் கோவிட் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த அப்பாவிச் சிறுவனிடம் உண்மையைச் சொல்லியிருக்கின்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட சிறுவன், தன்னுடைய பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்களோ அப்படியெல்லாம் இருக்காது என்று வெகுளியாக அந்த மருத்துவமனையை நம்பிக்கொண்டே இருந்துள்ளார். இப்படியே வைத்து போலி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர்கள், கடைசியாக 14 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துவிட்டார்கள். சென்னையின் மையப்பகுதியில் மருந்தகம் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் தம்பி மகனுக்கு நிகழ்ந்த அநியாயம்தான் இது. அவருடைய புலம்பலைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை.

நாடே கோவிட்-19 பரவலில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க, படுக்கை போதாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில், தென் சென்னையின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இப்படியோர் ஏமாற்று வேலை நடந்திருப்பது மருத்துவ உலகத்துக்கே பேரதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இந்தக் கொள்ளை இவர்களோடு நின்றுவிடவில்லை.

கொரோனா பாசிட்டிவ் என்று ஒருவர் சிகிச்சைக்கு வந்தால் அவர்களிடம் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பது மட்டுமன்றி, கொரோனா இருக்கிறதோ இல்லையோ ஒருவரை கொரோனா நோயாளியாக அனுமதித்தால், அவர்களுக்கும் அந்தக் கொள்ளையிலிருந்து தனி கமிஷன். இந்த கமிஷனுக்காக, கொரோனாவே இல்லாதவரையும் கூட பாசிட்டிவ் என்று கூறி அழைத்துவந்து அனுமதித்துவிட்டு, கமிஷன் வாங்கிச் செல்பவர்கள் பலர். பாவம், தனக்கு கொரோனா பாசிட்டிவ்தான் என்று நம்பி அச்சத்தோடும் வேதனையோடும் அங்கு சிகிச்சை எடுக்க வருபவர்களுக்கோ மன உளைச்சல், நிம்மதியின்மையோடு சேர்த்து பெருமளவு பணமும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது.


ஒருவர் உண்மையாகவே கொரோனா பாசிட்டிவ் இருந்து அங்கு சென்றாலும்கூட, குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாயைச் சுருட்டாமல் அவர்கள் சிகிச்சையை முடித்து வெளியே அனுப்புவதில்லை. இப்படிச் சிக்கிக்கொண்ட ஒருவர் இரண்டரை லட்சம் ரூபாயைக் கட்டிய பிறகுதான் வெளியே செல்லவே அனுமதித்ததாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இப்படி, கொரோனாவை வைத்துச் செய்யப்படும் முதலீடுகளும் அதிலிருந்து அடிக்கப்படும் கொள்ளைகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதுமட்டுமன்றி, கொரோனா பாசிட்டிவ்வோடும் மிக மோசமான உடல்நிலையோடு தீவிர சிகிச்சை தேவைப்பட வேண்டிய நிலையிலும் யாராவது அனுமதிக்கப்பட்டால், அவர்களை படுக்கை போதவில்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று ஏதாவது காரணத்தைக் காட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றி சென்னையைச் சேர்ந்த ஓர் அரசு மருத்துவரே கவலை தெரிவித்துள்ளார்.

அவர், “தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அனைத்தும், மோசமான உடல்நிலையோடு எந்த நோயாளியாவது தங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சை கேட்டு வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இல்லை. ஆபத்தான நிலையிலிருக்கும் அந்த நோயாளிகளை அவர்கள் அரசு மருத்துவ மனைக்குத்தான் அனுப்பி வைக்கின்றனர். தனிநபர் ஒருவரின் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கையாள தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன. ஆகையால், அரசு மருத்துவமனையையே எல்லோரும் தேடி வருகின்றனர். இதனால், இங்கும் கடுமையான இடப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அவர்களும் நோய்த்தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்” என்று வேதனையோடு தெரிவித்தார்.

இவைபோக, தனியார் மருத்துவமனைகள் அரசாங்கம் கோவிட் சிகிச்சைக்காக நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் சிகிச்சை பெற்றவர்களில் பலர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தனியார் மருத்துவமனை

அதோடு ஒரே நேரத்தில் மூன்று, நான்கு பேர் ஒரு படுக்கையைக் கேட்கும்போது, அதில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே இடம் கொடுப்பதும் நடக்கிறது. இதைத் தவிர்க்க முதலில், அரசு கோவிட் சிகிச்சை மையங்களுக்கு ஆரம்பகட்டத்திலேயே சென்று அவர்களுடைய வழிகாட்டுதலைப் பெற்று அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்” என்று கூறினார்.

தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொரோனாவே இல்லாமல் சிகிச்சை கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைப் பற்றியும் பேசிய செயற்பாட்டாளர் மருத்துவர் ரவீந்திரநாத், “மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், குறைந்த அறிகுறிகளோடு இருப்பவர்களை அதிகமாக அனுமதித்துக் கொள்கிறார்கள். இதனால், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.


இதைச் சரிசெய்ய, சிகிச்சைக்கு அனுமதிக்கும் அதிகாரத்தை அரசே கையில் எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுமே அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும்.

அதோடு, ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும், அவர்களுக்கு கொரோனா இருக்க வாய்ப்புள்ளது. நுரையீரலில் கோளாறு இருந்தால் அதை நிச்சயம் கொரோனா பாசிட்டிவ்வாகக் கருதியே சிகிச்சையளிக்க வேண்டும். ஆகையால் அதை நாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று கூறினார்.

தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனைக்குத் திருப்பிவிடுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கொரோனா கண்காணிப்பில் இருக்கும் கூடுதல் இயக்குநர் மருத்துவர்.விஸ்வநாதனிடம் கேட்டபோது, “ஏற்கெனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்து, அனைவருக்கும் அனுப்பியுள்ளது. அதை மீறும் மருத்துவமனைகள் மீது யாராவது புகார் தெரிவித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம். சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.


வால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டியது அவசியம். அதேநேரம், அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கவேண்டும். அறிகுறிகள் இன்றி பாசிட்டிவ் வந்தால், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க முடியும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், வெறுமனே படுக்கைகளை நிரப்பி பணம் சம்பாதிப்பதும் ஆங்காங்கே நடப்பதை மறுப்பதற்கில்லை.

மருத்துவர் ரவீந்திரநாத் கூறியதுபோல் அரசே அவசரகால அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளின் கொரோனா பிரிவையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அரசின் மேற்பார்வையோடு செயல்பட வைக்கவேண்டும். இதுவே, அனைவருக்கும் முறையான சிகிச்சை நியாயமான கட்டணத்தில் கிடைக்க உதவும்.

--------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?