மேலும் மோசமாக்கிய....

 "70 ஆண்டுக்கு பிறகு சாதியத்தை மீண்டும் தூக்கிப்பிடிக்கிறது பாஜக" - கமல்ஹாசன் .

வட மாநிலங்களில்அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்!

நேற்று மட்டும் குஜராத் மாநிலத்தில் இரு பாஜக வேட்பாளர்கள் தோல்வி பயத்தில் விலகிய நிலையில் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக போட்டியிடாமல் விலகியது

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யதேவ் பச்சௌரி போட்டியிடுவதில் இருந்து விலகி பரபரப்பை எற்படுத்தி இருக்கிறார்

தேர்தலில் போட்டியிட மறுத்து சத்யதேவ் பச்சௌரி பாஜக தலைமைக்குக் கடிதம்

400 எம்.பிகள் வெற்றி பெறுவோம் என்று பாஜக சொன்னது தேர்தலுக்கு முன்னரே நடக்காது என்பது நிரூபணம் ஆகிறது என்று தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது வேட்பாளர்கள்!

நேற்று மட்டும் குஜராத் மாநிலத்தில் இரு பாஜக வேட்பாளர்கள் தோல்வி பயத்தில் விலகிய நிலையில் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக போட்டியிடாமல் விலகியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யதேவ் பச்சௌரி போட்டியிடுவதில் இருந்து விலகி பரபரப்பை எற்படுத்தி இருக்கிறார்

தேர்தலில் போட்டியிட மறுத்து சத்யதேவ் பச்சௌரி பாஜக தலைமைக்குக் கடிதம்

400 எம்.பிகள் வெற்றி பெறுவோம் என்று பாஜக சொன்னது தேர்தலுக்கு முன்னரே நடக்காது என்பது நிரூபணம் ஆகிறது என்று தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் மோசமாக்கிய 

மோடி அரசு. 


உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் பெரும்பாலான வீட்டு வேலைகளை சுமக்கிறார் கள் என்று ஆய்வு கூறுகிறது.


 இது சாதாரண மாகத் தோன்றலாம், ஆனால் மற்ற நாடுகளு டன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள பெண்கள் பத்து மடங்கு பணிச்சுமையைத் தாங்க வேண்டியுள்ளது. 

சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறு வனம் (ஐஐபிஎஸ்) மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (டிஐஎஸ்) ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இது கண்டறி யப்பட்டுள்ளது.

 ஆய்வின்படி, வீட்டுவேலைக ளுடன் வீட்டையும் அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டிஇருப்பதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் வீட்டு வேலைகளில் 98 நிமிடங்களையும், பெண்கள் 301 நிமிடங்களையும் செலவிடுகிறார்கள். திரு மணமாகாத பெண்களை விட திருமணமான பெண்கள் வீட்டு வேலைகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். 

உலகெங்கிலும் உள்ள பெண்கள், ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக வேலை செய்கையில், இந்தியா வில் மட்டும் பெண்கள் பத்து மடங்கு அதிகமாக வேலை செய்வது, இங்கு பெண்களின் நிலை எப்படி உள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

 உயர் கல்வியறிவு பெற்றவர்கள் இடையேயும், சாதியப் படிநிலையில் உயர்வாகக் கருதப்படும் பிரிவினர் இடையேயும் ஒப்பீட்டளவில் குறை வாகவே உள்ளது என்பதையும் ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது.

கூட்டுக் குடும்பங்களில் உள்ள பெண்களைக் காட்டிலும் தனிக் குடும்பங்களில் உள்ள பெண்க ளுக்கு அதிக வேலைச் சுமை இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

பெண்களும் பள்ளிக் குழந்தை களுடன் வீட்டில் கூடுதல் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் வாழும் பெண்கள் மிக மோசமான நிலையை எதிர் கொள்கின்றனர். 

கல்வியறிவு இல்லாத கிராமங்க ளில் வசிக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் வீட்டு வேலைகளை 86.7 சதவிகிதம் செய்கிறார்கள்.

அதிகப்படியான வீட்டு வேலைகள் குடும் பங்களில் பெண்ணின் முக்கியத்துவத்தை, செல் வாக்கை குறைக்கிறது. 

பெண்களின் ஊதிய மில்லாத வீட்டு வேலைகளின் மதிப்பை அளந் தால், அது உலக அளவில் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 10 முதல் 60 சதவிகிதம் வரை இருக்க லாம் என்றும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. 

இதுமட்டுமல்ல, வேலை வாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு உட்பட அனைத்து அம்சங்களிலும் இந்திய பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது. 

குறிப்பாக கடந்த பத் தாண்டுகளில் நிலைமையை மேலும் மோச மாக்கியது மோடி அரசு. இந்த ஆட்சியாளர்கள் தான் இப்போது வெட்கமின்றி வாக்கு கேட்டு வருகிறார்கள். இந்திய பெண்கள் பதிலடி கொடுப்பார்கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?