போதையின் பாதை குஜராத்

  • தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
  • நாகை, திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • தேர்தல் பத்திர விவகாரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் எஸ்பிஐ வங்கிக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்றும், நாளையும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

  • 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை,ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
  • ஒன்றிய மோடி அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13 ஆம் தேதி டெல்லி நோக்கிய பேரணியை தொடங்கினர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை தடுத்தனர்..

  • காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாசிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

போதையின் பாதை குஜராத்


நாமக்கல் மாவட்டத்தில் போதை மாத்திரையை புழக்கத்தில் விட்ட குஜராத் கும்பல் தலைவனை 24மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 தமிழகத்தில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதால் பல மாவட்டங்களில் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டது. இதனால் போதை மாத்திரைகள் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். 

இந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கவுதம் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்குமார், அசோக்குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(எ)சித்திக் சவுத்திரி என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். 

இவர்தான் தமிழகத்துக்கு போதை மாத்திரைகளை அதிக அளவில் விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் குஜராத்தில் உள்ள தினேஷ்குமாரை கைது செய்ய முடிவு செய்து, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 இந்த தனிப்படையினர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

 இரவு 11 மணிக்கு அங்கு இறங்கியதும், குற்றவாளிகளின் இருப்பிடத்தை அவரது செல்போன் எண் மூலம் கண்காணித்தபடியே அகமதாபாத் விரைந்தனர்.

அங்கு தினேஷ்குமாரின் நண்பர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 அவர் கொடுத்த தகவலின்படி நேற்று அதிகாலை 3மணிக்கு தினேஷ்குமாரின் வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த தினேஷ்குமாரை தட்டி எழுப்பி போலீசார் கைது செய்தனர். தமிழகப் போலீசாரைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த தினேஷ் தனது வக்கீலுக்கு போன் செய்ய முயன்றார். 

மேலும் அங்குள்ள சில அரசியல்வாதிகளுக்கும் போன் செய்ய முயன்றார். 

போலீசார் மின்னல் வேகத்தில் அவரை கைது செய்து, ராஜ்கோட் வந்து, மீண்டும் விமானம் மூலம் கோவைக்கு நேற்று பகல் 2 மணிக்கு அழைத்து வந்தனர். 

அங்கிருந்து பள்ளிப்பாளையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற சித்திக்சவுத்ரி(40) கடந்த இரண்டு வருடங்களாக ஈரோட்டில் தங்கியுள்ளான்.

 இங்கு சென்ட் விற்பனை கடை வைத்து அதில் தனது உறவினர்களான பரத்குமார், அசோக்குமார் ஆகியோரை வேலைக்கு வைத்துக்கொண்டான். அதோடு போதை மாத்திரை விற்பனை தொழிலிலும் ஈடுபட்டுள்ளான். 

கடந்த மாதம் ஈரோடு போலீசார் அவனது கடையில் சோதனையில் ஈடுபட்டு போதை மாத்திரை வைத்திருந்த அசோக்குமார் மற்றும் கடை ஊழியர் ஒருவரை கைது செய்தனர்.


இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த தினேஷ்குமார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பதுங்கினான். செல்போன் மூலம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த கவுதம், மோகன் குமார் உள்ளிட்டோருக்கு போதை மாத்திரைகளை கொரியர் மூலம் அனுப்பி விற்பனை செய்து வந்தான். 


மீண்டும் பள்ளிப்பாளையம் வெப்படை பகுதிகளில் போதை மாத்திரை நடமாட்டத்தை அறிந்து கவுதம்குமாரை பிடித்து விசாரணை நடத்தினோம்.

 இதில் தொடர்புடைய 15 நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தோம்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் குஜராத்திலிருந்து தினேஷ்குமார் வாரம் ஒரு முறை மாத்திரைகளை கொரியரில் அனுப்பி வைத்துள்ளார். உயரதிகாரிகளின் அறிவுரைப்படி நேற்று முன்தினம் விமானம் மூலம் குஜராத் விரைந்தோம். 

அங்கு பதுங்கியிருந்த தினேஷ்குமாரை மடக்கி பிடித்து பள்ளிபாளையம் கொண்டு வந்தோம். வெப்படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், போதை மாத்திரைகளை கொரியரில் அனுப்பி வைத்ததை தினேஷ்குமார் ஒப்புக்கொண்டான். 

இதையடுத்து அவனை கைது செய்துள்ளோம். அதேபோல் தினேஷ்குமாரிடம் மாத்திரைகளை வாங்கி புழக்கத்தில் விட்ட ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (33), தீபக் (25), சந்தோஷ்குமார் (22), சதாம் உசேன் (23) ஆகியோரும் ைகது ெசய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


இதற்கிடையே குஜராத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்து 2 ஆண்டுகளாக தினேஷ்குமார் போதை மாத்திரை விற்பனையை செய்துள்ளார்.

 அவருக்கு பின்னால் அந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மூளையாக இருந்தார்களா? 

அவர்களுக்கும் இந்த விற்பனைக்கும் தொடர்புள்ளதா? 

தமிழ்நாட்டை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்வதற்கு அவர்கள் உதவியாக இருந்தார்களா? 

என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குஜராத் சென்று துரித கதியில் குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு மக்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது


எதிர்பார்த்தபடியே தேர்தல் பத்திரங்களின் விபரங்களை சமர்ப்பிப்பதற்கு எஸ்பிஐ வங்கி ஜூன் வரை நீதிமன்றத்திடம் கால அவகாசம் கேட்டிருக்கிறது. இந்தத் தரவுகள் இரண்டு தனித்தனி டேட்டாபேஸ்களில் இருப்பதாலும், பல தரவுகள் தேசம் முழுக்க வங்கிக் கிளைகளில் இருப்பதாலும் அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து வழங்க நேரம் பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறது.  

தேர்தல் பத்திரம் துவங்கிய காலம் தொட்டு சுமார் 16,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இவை மொத்தம் 22,271 பத்திரங்களில் உள்ளன. 

இவை இரண்டு இடத்தில் தனித்தனியே பிரிந்து இருந்தால் 45,000 ரெகார்ட்டுகள்.
கூகுள் ஒரு நிமிடத்துக்கு 60 லட்சம் தேடல்களை மேற்கொள்கிறது. அதாவது கூகுள் நிறுவனத்திடம் இந்த வேலையைக் கொடுத்தால் இரண்டு நிமிடங்களில் முடித்துக் கொடுத்து விடலாம்! 

அவ்வளவு கூடப் போக வேண்டாம். எஸ்பிஐ வங்கியே கூட ஒரு நாளைக்கு சுமார் 13 லட்சம் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. ஏடிஎம் மூலம் தினமும் 3800 கோடிகளை எடுக்கவும் கொடுக்கவும் செய்கிறது. (இது அவர்கள் ஆண்டறிக்கையில் இருந்து எடுத்த தகவல்.) 

வெறும் எக்சல் (Excel) கூட சுமார் 11 லட்சம் ரெகார்ட்டுகளை process செய்யும். அதாவது எஸ்பிஐயிடம் சுமாரான டேட்டாபேஸ் மென்பொருள் இருந்தாலே கூட இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் தேவைப்படாது. 

தேர்தல் பத்திரம் போன்ற அதி முக்கியமான, சென்ஸிட்டிவ்வான தகவல்களை கண்டிப்பாக நோட்டுப்  புத்தகங்களில் எழுதி வைத்திருக்க மாட்டார்கள். அப்படியே எழுதி வைத்திருந்தாலும் அவற்றை OCR மென்பொருள்கள் மூலம் ஓரிரு நாட்களில் digitise செய்து விட முடியும் என்பது தனி மேட்டர். ஆனால் கண்டிப்பாக அவை டேட்டாபேஸ்களில்தான் இருக்க முடியும். எனவே, அவற்றை ஒருங்கிணைத்து, பரிசீலித்து, ரிப்போர்ட்டுகள் எடுக்க ஒரு வாரத்துக்கு மேல் ஆனால் ஆச்சரியம். சரி எஸ்பிஐ அரசு வங்கி, அங்கே வேலை செய்வது அரசு ஊழியர்கள் என்பதால் இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

எனவே, நீதிமன்றம் கால அவகாசம் வழங்கக் கூடாது. மாறாக, எஸ்பிஆல் முடியாது என்றால், இந்த ரெகார்ட்டுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் கோர்க்கும் பணியை ஒரு ஐடி நிறுவனத்திடம் வழங்க உத்தரவிட வேண்டும். தனியாரிடமா? இந்தத் தரவுகள் ரொம்ப சென்ஸிட்டிவ் ஆனவையாயிற்றே என்று பலர் வாதிடக் கூடும். அதற்கும் தொழில் நுட்ப வழிமுறைகள் இருக்கின்றன. சென்ஸிட்டிவ் தரவுகளை டேட்டாபேஸ்சில் மறைத்து விடுவார்கள். வெறும் கண்களுக்கு பார்ப்பதற்கு மேலே கறுப்பு மை தீற்றியது போல இருக்கும். கம்ப்யூட்டருக்கு உள்ளே என்ன டேட்டா இருக்கிறது என்று தெரியும். மென்பொருள் இன்ஜினியர்கள் முடித்து விட்டு இறுதி அறிக்கையை எடுக்க அனுமதி பெற்றவர் உள்ளே போய் password போட்டு எடுத்தால் அவருக்கு மட்டும் அந்தத் தகவல் தெரியும்படி access permissions வைத்துக் கொள்வார்கள். இதெல்லாம் ரொம்பப் பழைய தொழில் நுட்பங்கள். நான் யூகேவில் இருந்த போது எங்கள் நிறுவனம் UK அரசுக்கு இப்படிப்பட்ட ப்ராஜக்ட் செய்தார்கள். அதில் இப்படி ஒளிக்கப்பட்ட கோப்புகளில்தான் நான் வேலை பார்த்தேன். Redacted என்று கூகுள் செய்து பாருங்கள். இதை எக்சல், வேர்ட்டில் கூட செய்ய முடியும். 

ஒருவேளை அப்படியெல்லாம் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தால் பரவாயில்லை. பாரத் எலக்டிரானிக்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் உதவியைக் கூட நாடலாம். சட்டென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். 

எனவே எஸ்பிஐயின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து, ஆனால் ஒரு 15-20 நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுத்து, அவர்கள் மேல் அழுத்தம் கொடுத்து இந்த அறிக்கையை தேர்தலுக்கு முன் வெளியாக உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

- ஸ்ரீதர் சுப்ரமணியம்( முகநூல் பதிவு)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?