இதுவும் பொய்தான் !
தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி: எங்களை யாரும் அணுகவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ யாரும் தங்களை அணுகவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும், கருத்தும் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ள அக்கட்சி, இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை.இதுவும் பொய்தான் . என விளக்கம் அளித்துள்ளது. மேலும், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மின்வாரிய அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு நீதிமன்றக் காவல் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல...