இடுகைகள்

கலவரத் தீ

படம்
  ஆன்மீக விழாவில் கலவரத் தீ !   ஆர்எஸ்எஸ் சதித் திட்டத்தின் பின்னணி என்ன “இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புது மையான பல மனிதர்களைக் கண்டிருக்கி றது... கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக…”  1952-இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் கலைஞர் எழுதிய மேற்கண்ட வசனங்களை இப்போது கேட்கும் போது, திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பு நினைவுக்கு வருகிறது.  இந்திக்கு இராமன்; தமிழுக்கு முருகன் சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ், இராமரை முன்னிறுத்தி கலவர விதையை விதைத்து இஸ்லாமிய சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தை இடித்து ராமர் கோவிலைக் கட்டியது.  அதன் விளைவாக, மத ரீதியாக ஒரு பகுதி மக்களை அணிதிரட்டி, அரசியல் செல்வாக்கை உருவாக்கி, மத்தியிலும் பல மாநிலங்க ளிலும் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவியி ருக்கிறது. தென் மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இராமரை முன்வைத்து ஆர்எஸ்எஸ் உருவாக்க நினைக்கும் கலவர அரசியல் வெற்றி பெறவி...

ஏன் வேண்டாம்?

படம்
*என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரையை இன்று தொடங்குகிறது திமுக. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க நடவடிக்கை . * எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. உடல்நலக் குறைவால் அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் பங்கேற்காததால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம். *வரலாறு காணாத வகையில், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 கூடியது. 1 கிலோ ரூ.2,07,000க்கும், 1 கிராம் ரூ.207க்கும் விற்பனை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 கூடி, ரூ.96,240க்கு விற்பனை. *தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை (டிச.11) கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். *நாடு முழுவதும் 9வது நாளாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில...

இம்பீச்மென்ட்

படம்
 * உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது காலணியால் தாக்குதல். *ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமுலுக்கு வந்தது. * நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி தீர்மான கடிதம் - சபாநாயகரிடம் வழங்கிய இண்டியா கூட்டணி. * ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம் - சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப் பட்டது. *சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடக்கும் நிலையில், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.மக்கள் வேலைக்கு செல்ல,அலுவலகம்,பள்ளி செல்ல சிரமம் நயினாரை வரவேற்க முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வந்த ஆண். வீடியோ வெளியானதால் ஆள்மாறாட்ட வழக்கு பதிய கோரிக்கை. சேலம் அதிமுக பிரமுகரின் மகள் கொலையில் கள்ளக்காதலன் கைது: பரபரப்பு வாக்குமூலம். ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டதால் வடிவுக்கரசி என்ற பெண்ணை எரித்து கொன்ற மாஜி போலீஸ்காரர் சங்கர் கைது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு.(உச்சநீதி மன்ற வழக்கு,வழக்காகவே உள...