இடுகைகள்

வாக்குத் திருட்டுப் பட்டியல்?

படம்
  " தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும். சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 790 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 780 கிமீ தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது" -இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது.  சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்ம...

அதானியைக் காப்பாற்ற மக்கள் பணம்?

படம்
  வங்கக் கடலில் சென்னைக்கு 850 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம். இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை தீவிர புயலாக உருவெடுக்கிறது. காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே மோந்தா புயல் கரையை கடக்கும். 110 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி வீசக்கூடும் என எச்சரிக்கை. சென்னை, செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு பெய்யும் மழை. வேலூர், தேனி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை. புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார். நிவாரண முகாம்களில் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் இரிடியம் மோசடி தொடர்பாக மேலும் 27 பேர் கைது. மொத்தம் 57 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை தீவிரம். டி.டி.வி. தினகரன் Expiry date ஆன அரசியல்வாதி என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம். தே...

புயல் எங்கு கரை கடக்கும்?

படம்
  மோ ன்தா தீவிர புயலாக உருவாகி ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 25) கூறியுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தற்போது வேளச்சேரி, கிண்டி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்தசூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பான அடுத்தடுத்த தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 25) வெளியிட்ட அறிவிப்பில், ‘தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 7 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அந்தமான் & நிகோபார் தீவுகளில் இருந்து சுமார் 440 கி.மீ தொலைவில் மேற்கு-தென்மேற்கிலும் விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து 970 கி.மீ தொலைவில் தென்கிழக்கிலும் சென்னையில் இருந்து 970 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கிலும், காக்கிநாடாவில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து 990 கி.மீ தொலைவில் தென்கிழக்கிலும் கோபால்பூரில் (ஒ...

அடிமைகளின் பைபிள்!

படம்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., மழை பதிவு. ஆக்ராவில் அதிவேகமாக சென்ற கார் ப நடந்துசென்றவர்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழப்பு. வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய விதிகள் நடைமுறை: ரிசர்வ் வங்கி. சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி தகவல். கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் அருகே கார் மரத்தில் மோதி 4 பேர் உயிரிழப்பு. விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில் முருகானந்தம்,புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு. மாணவர்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் பிரம்பை கையில் எடுப்பதை குற்றமாக கருத முடியாது: கேரள உயர்நீதிமன்றம். கேரளாவின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.2,424.28 கோடி கடன் தர உலக வங்கி ஒப்புதல்  அடிமைகளின் பைபிள்!   எபிரேயர்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பி, 'என் மக்கள் வனாந்தரத்தில் எனக்கு ஆராதனை செய்யும்படி அவர்களை அனுப்பிவிடு' என்று சொல்லச் சொன்னார்." மோசஸ் எகிப்திய மன்னன் பார்வோன் ர...

உலகின் பெருங் கல்லறை?

படம்
அக்டோபர் 24, 1801. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள். 1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக தூக்கிலேயே தொங்கியது. இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களில் வட இந்தியாவில் நடைபெற்ற போர்களே வீரம் செறிந்த வரலாறுகளாக பெரும்பாலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால் சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தெற்கில் இருந்து முதன்முதலில் கூக்குரலிட்டவர் மாமன்னர் பூலித்தேவர். அவரை தொடர்ந்து ஆங்கிலேயப் பேரரசை எதிர்த்தவர் மாவீரர் திப்பு சுல்தான். அவர்கள் வழியில் தீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் தான் மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.   புதுச்சேரி  புதுமை? புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும்,  காங்கிரஸ் தலைமையில் திமுக, இடசாரிகள் - விசிக உள்ளிட்ட ...

பொய்மூட்டை விவசாயி!

படம்
* சென்னை சீனிவாசபுரம் அருகே, அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு. *தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் அது வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல். *சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனை.  கிராமிற்கு ரூ.40 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது. *போதை பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் வரும் 28, 29 தேதிகளில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என விசாரிக்க முடிவு. *ஆந்திராவில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தகவல். *பீகாரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி. சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் நட...