ஆணுறை இல்லையா கட்டு அபராதம் !


 அபராதம் நியாயமற்றது என்கிறார்கள் ஓட்டுனர்கள்
 புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று வரை பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
 இந்த சட்டத்தில் ஏராளமான குறைகள் உள்ளது.
 போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்கான அபராதம் பல மடங்குகளில் உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுவது முக்கிய பிரச்சினையாக உள்ளது.

டெல்லி,மும்பை போன்ற மாநகர்களில் போக்குவரத்து விதிகளைச் சரியாக வாகனங்களை ஒட்டி வந்தாலும், ஆணுறை இல்லாத பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த அபராதம் குறிப்பாக ஓலா மற்றும் யூபர் ஓட்டுநர்களிடம் வசூலிக்கப் படுகிறது.
 போக்குவரத்து தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமாக்க இந்த விதியை அறிவிக்கப்படாத நிலையில், போலீசார் அபராதம் வசூலிப்பது நியாயமற்றது என கார் ஓட்டுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து அதிகாரிகள் கார் ஓட்டுநர்கள் தங்கள் முதலுதவி பெட்டிற்குள் இரண்டு மூன்று ஆணுறைகளை வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியிருக் கிறார்கள்.
 இது சில ஓட்டுநர்களுக்குத் தெரிந்துள்ளதால் ஆணுறையுடன் பயணிக்கிறார்கள்.
தெரியாதவர்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டு அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் ஆணுறை வைத்திருக்கும் வாகனத்தை சோதனையிடும் ஒரு சில போக்குவரத்து போலீசார் முதலுதவிப்பெட்டியில் ஆணுறையைப் பார்த்ததும் குழப்பம் அடைகிறார்கள்.
ஓட்டுனர்களை இது தொடர்பாக விசாரிக்கவும் செய்கிறார்கள்.
காரணம் அவர்களிலேயே நிறைய பேர்களுக்கு இந்த ஏற்பாடு தெரியாததுதான்.

ஆக, இந்த விதி கட்டாயம் இல்லை என்றாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில் ஆணுறையைக் குறித்து எந்த அபராதமும் வசூலிக்கப்பட்ட நிர்பந்திக்கவில்லை.

 இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 சரி எதற்காக  ஆணுறையை முதலுதவி பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும?

 "விபத்துகள் ஏற்படும் பொழுது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலோ அந்த இடத்தில் ஆணுறையைக் கொண்டு இறுக்கிக் கட்டினால் ரத்தம் விரயம் ஆவதை தடுக்க முடியும்.

ஆணுறை அந்த அளவுக்கு விரிந்து கொடுப்பதுடன் ரத்தத்தைக்கசியாவும் விடாத தன்மையுடையது.
 இதனால் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்கப்படும் பொழுது அவரை எளிதில் காப்பாற்றிவிட முடியும்."
இதுதான் ஆணுறையை முதலுதவிப்பெட்டியில் வைக்கக் கூறியிருக்கிறார்கள்.

நம் தமிழ்நாட்டில் தொலைதூரம் செல்லும் விரைவு அரசுப்பேருந்துகளில் கூட முதலுதவிப்பெட்டியே இருப்பதில்லை.பிறகு ஆணுறையை எங்கு வைப்பது.?

---------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பீட்டுக்கு ஆயுள் குறைகிறது.
இந்திய மக்களின் வாழ்நாள் பாதுகாப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு என்ற பெயரில் மோடி அரசு வங்கியுள்ளது.

நீண்ட காலமாகவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை எல்.ஐ.சியிடம் இருந்து நிறுவனம்தான் வழங்கி வருகிறது.


கடந்த 2013-14ம் நிதியாண்டு வரை, சுமார் 11 லட்சத்து 90 ஆயிரம்கோடி ரூபாயை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளது.
தற்போது மோடி அரசு பாலிசி தாரர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் திவாலன நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய எல்.ஐ.சி-யை நிர்ப்பந்திக்கிறது.

அதேபோல பல பொதுத்துறை நிறுவனங்களில், எல்.ஐ.சி நிறுவனத்தை 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அதன் தொடர்சியாக எல்.ஐ.சி-யிடமிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 57 ஆயிரம் கோடி ரூபாயை பொதுத்துறை நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய வைத்துள்ளது மத்திய அரசு.
இதனால் வாராக் கடன்களால் நஷ்ட்டத்தை சந்தித்து வரும் வங்கிகளில், முதலீடு செய்வதால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை.
 இது பாலிசி தாரர்களின் பணம் என்பதைக் கூட உணராமல், தவறான பொருளாதார கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இதை செய்துள்ளது மோடி அரசு.

அதுமட்டுமின்றி, கடந்த 1956-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எல்.ஐ.சி முதலீடு செய்த தொகை ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் என்றால், கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் மட்டும் ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எல்.ஐ.சி-யிடமிருந்து முதலீடு என்ற பெயரில் பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோடி அரசு எல்.ஐ.சி-யை தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேவையற்ற ,மூழ்கும்,நொடித்துப்போன நிறுவனங்களில் எல்.ஐ.சி-யை ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு என்ற பெயரில் மோடி அரசு கொட்டச் சொல்வது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஆயுளை அகாலமாக்குவதுதான்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
முகநூலில் இருந்து.....
2600 வருடங்களுக்கு முன்பே எழுதிய, படித்த தமிழர்களை..!
 திராவிடமா படிக்க வைத்தது?
*2600 வருடங்களுக்கு முன்பே படித்த தமிழன் 20 ஆம் நூற்றாண்டில் ஏன் கை நாட்டாக இருந்தான்? கை நாட்டாக யார் காரணம்??

*100 வருடங்களுக்கு முன்பு கல்லூரிகளின் வாயில் முன்பு *இங்கு சூத்திரனுக்கும், நாய்களுக்கும் இடமிமில்லை" என்று எழுதி வைத்தவர்கள் யார்?

*ஆண்ட தமிழன் யாரால் அடிமையானான்??


*2600 வருடங்களுக்கு முன்பு தமிழர்களிடம் மதம் சார்ந்த எந்த வழிபாடும் இல்லை என்று உறுதியாகியுள்ள நிலையில், தமிழன் தலையில் மதத்தையும், கற்பனை கடவுள்களையும் விதைத்தவர்கள் யார்?

*தலையில் பிறந்தவன் உயர்ந்தவன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று தமிழனை சாதியால் பிரித்து #மனு_சாஸ்த்திரம் எழுதியது யார்?

*2600 வருடங்களுக்கு முன்பு இல்லாத மனு சாஸ்த்திரம் இடையில் எப்படி முளைத்தது??

*இன்றைக்கும் மனு சாஸ்த்திரம் நூலகத்தில் இருக்கின்றது..! இதற்கு எந்த சக்தி காரணம்?

*2600 வருடங்களுக்கு முன்பே படித்த தமிழகத்தில் ஏன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடந்தது??

*திராவிட இயக்கம் இல்லையென்றால் 69% இட ஒதுக்கீடு கிடைத்திருக்குமா???

*இந்த மண்ணில் இந்தியை நுழைத்து தமிழை அழிக்கத் துடிக்கும் சக்தி எது??

*தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழுக்கே இடமில்லையே ஏன்? யாரால்??

*தஞ்சை கோயிலை கட்டிய இராசராசன் சிலையை கோயிலுக்குள் அமைக்கக்கூடாது என்று எந்த சக்திகள் தடுத்தது???

*எம் தமிழச்சிகளிடம் முலைவரி வசூலித்தது யார்?

*எம் தமிழக பெண்களை கோயிலுக்கு தாசிகளாக்கியது யார்??

*1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்ற எம் தங்கை அனிதாக்கள் தூக்கில் தொங்கி செத்து சீரழிய யார் காரணம்??

*இன்றைக்கும் தமிழகத்தின் கல்வி, வேலை, உரிமைகள் அனைத்தும் சூறையாடப் படுகின்றதே இதற்கு யார் காரணம்????

எந் நேரமும் திராவிடத்தை வசைபாடும் மன நோயாளிகளே இதற்கு பதில் கூறுங்கள்....
எம் இனம், மொழி, கலாட்சாரம்,பண்பாடு, நாகாரீகம், சுயமரியாதையை காக்கின்ற #கேடயம்_அரண்_திராவிடம் மட்டுமே......
அன்றும்... ..இன்றும்... ...என்றும்......
 Prakash JP
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய கீதம் என்ன மொழி என்று தெரியாதவரெல்லாம் தமிழக அமைச்சர்.
கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்ற மாமேதை தானே இவர்களின் தல.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

 
காப்பான் உயிர் காப்பான்.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?