பெயர் மாறிய பயங்கரவாதிகள்.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை மிக சமீபத்தில் பாகிஸ்தான் மீண்டும் செயல்படுத்தியுள்ளது என்று ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
 பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள இந்த முகாம் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமானப் படையால் தாக்கப்பட்டது.
 இந்த முகாம் எங்கே இருக்கிறது, என்னவாக இருக்கிறது என்பதை பற்றியும் இந்தியாவுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தானின் நீண்டகால திட்டத்தில் இது எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.


பாலகோட் பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மன்சேஹ்ரா மாவட்டத்தில் உள்ள அப்போட்டாபாத்திற்கு 63 கி.மீ வடக்கே உள்ளது.

அங்கேதான், 2011, மே மாதம் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் ஒசாமா பின்லேடனை கொன்றன.
இது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 200 கி.மீ தொலைவிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாஃபராபாத்திலிருந்து 40 கி.மீ வடமேற்கிலும் உள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது தனது முகாமை அமைத்திருந்த பாலகோட்டில் உள்ள காடுகள் நிறைந்த மலை உச்சி பகுதியான ஜபா முகடை இந்திய விமானப்படை தாக்கியது.
இந்திய புலனாய்வு அமைப்புகளால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு ஆவணத்தின்படிஅந்த நேரத்தில், பயிற்சி முகாம் ஆறு ஏக்கர் பரப்பளவில் பரவி இருந்தது.
அது 600 பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க போதுமான இடமாக இருந்தது.

முகாமில் பயிற்சிபெற ஜெய்ஷ் இ முகமது பணியாளர்களின் விரிவான பட்டியல்கள், வளாகத்தை சுற்றி ஆயுததாரிகள் சென்றதற்கான புகைப்பட சான்றுகள், அவர்களின் உடற்பயிற்சி கூடங்கள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு போன்றவை அந்த ஆவணத்தில் இருந்தன.

பாலகோட் பகுதியும் உண்மையிலேயே முழு மன்சேஹ்ரா மாவட்டமும் பாக்கிஸ்தானிய பாதுகாப்பு ஸ்தாபனத்தின் ஜிஹாதி திட்டத்திற்கு நீண்டகாலமாக மையமாக உள்ளது.
 இப்பகுதியில் மிக அதிக எண்ணிக்கையிலான மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் உள்ளன.
 இங்கேதான் ஆப்கானிஸ்தான் போருக்காகவும் பின்னர் காஷ்மீருக்காகவும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளிக்க முதல் முகாம்கள் அமைக்கப்பட்டன.
பாலகோட்டுக்கு அருகில் காரி ஹபிபுல்லாஹ் பகுதி உள்ளது. அங்கு ஹிஸ்புல் முஜாஹிதீன்களுக்கு ஒரு பயிற்சி முகாம் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அவை ஓரிரு ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது.
பின்னர், மன்சேஹ்ரா மாவட்டத்தில்பல்வேறு ஜிஹாதி பயிற்சி முகாம்களை மீண்டும் தொடங்குவதைப் பற்றி பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெரால்ட் செய்தி வெளியிட்டது.

இந்திய விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு, வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தனது ஊடகவியலாளர் சந்திப்பில், பாலகோட் பயங்கரவாத பயிற்சி மையத்தை மேற்பார்வையிடும் பொறுப்பை ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் தனது மைத்துனர் யூசுப் அசாருக்கு வழங்கியதாக குறிப்பிட்டார்.
மசூத் அசார் தனது பரந்த பயங்கரவாத சாம்ராஜ்யத்தில் உள்ள இலாக்காக்களை தனது குடும்ப உறுப்பினர்களிடையே பகிந்துகொள்வதன் மூலம் பணியாற்றுகிறார்.


ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் யூசுப் அசார் புகைப்படங்கள், மலைப்பாங்கான பயிற்சி களத்தில் அவருடைய தினசரி ரோந்துக்கு பயன்படுத்தும் வாகனம் மற்றும் பாலகோட்டில் துப்பாக்கிச்சூடு பயிற்சி பகுதி ஆகியவை இந்திய ஆவணக் கோப்புகளில் இருந்தன.
இந்திய உளவுத்துறை கூற்றின்படி, ஏப்ரல் 1, 2018-இல் பாலகோட்டில் பயங்கரவாத பயிற்சி முடித்தவர்களை சேர்க்கும் நிகழ்ச்சியில் அப்துல் ரவூஃப் அஸ்கார் கலந்துகொண்டார்.
இவர் மசூத் அசாரின் சகோதரர்.
பாலகோட் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு பெரிய அளவில் அடையாளரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது பரேல்வி மறுமலர்ச்சித் தலைவர் சையத் அஹமத் ஹாஹீத் மற்றும் அவருடைய கூட்டாளியான ஷா இஸ்மாயில் ஹாஹீத் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும்.
1831 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய துணைக்கண்டத்தின் முதல் போரில் இவர்கள் கொல்லப்பட்டனர். தோல்வியுற்றாலும், சீக்கிய பேரரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் இராணுவத்திற்கு எதிராக ஜிஹாத் போரிட்டனர்.
பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாமுக்கு சையத் அஹமது ஷாஹீத் பெயரிடப்பட்டது.
ஜெய்ஷ் இ முகமதுவின் சையத் அஹமது ஷாஹீத் பயிற்சி முகாமுக்குள் நடவடிக்கைகள் மிகவும் அமைப்பாக்கப்பட்டுள்ளது என்று இந்திய உளவுத்துறை நம்புகிறது.
மேலும், மசூத் அசாரின் இரண்டு மருமகன்கள் காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பின்னர், ஒரு ஆண்டு காலத்தில் பெரிய அளவிலான எண்ணிக்கையில் பணியாளர்கள் பயிற்சி பெறுவதற்கு வந்துள்ளனர்.
முதலில் நவம்பர் 2017-இல் புல்வாமாவில் நடந்த ஒரு மோதலில் அசாரின் மைத்துனர் மகன் தல்ஹா ரஷீத் கொல்லப்பட்டான்.
மற்றொருவர் அக்டோபர், 2018-இல் அசாரின் இன்னொரு மருமகன் உஸ்மான் ஹைதர் டிராலில் கொல்லப்பட்டார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூத் அசாரை இந்தியாவின் சிறையில் இருந்து விடுவிப்பதற்கு வழிவகுத்த விமான கடத்தல் ஐசி -814 நிகழ்வில் கடத்தல்காரர்களில் ஒருவரான இப்ராஹிம் அசாரின் மகன்தான் உஸ்மான் ஹைதர்.

இந்திய விமானப்படை தாக்குதல் சமயத்தில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தான் ஸ்தாபனம், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகத்தை காலி செய்துவிட்டு, பாலகோட் பயிற்சி மையத்தில் ஏராளமான பயங்கரவாத பணியாளர்களைக் கூட்டியது.


 உலக  நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவும், பாகிஸ்தானில் எளிதாக பயிற்சி பெறவும் வகையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பானது, தனது பெயரை, மஜ்லிஸ் வுரசா இ சுகுதா ஜம்முவா காஷ்மீர் என பெயர் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக, பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ரவுப் அசார் செயல்பட்டு வருகிறார்.
ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் ராணுவ முகாம்கள் மற்றும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காக 30 தற்கொலைப்படை பயங்கரவாதிகளை உருவாக்கியுள்ளது.
மசூத் அசாரின் சகோதரன் தான், பாலகோட்டில் பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமை திறந்து வைத்ததுடன், சியால்கோட், பவல்பூரில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் தேர்வு செய்து வருகிறான்.

 மசூத் அசாரின் உடல்நலக்குறைவு காரணமாக அவரது சகோதரன் தான், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை நிர்வகித்து வந்தான்,
 தற்போது, பெயரை மாற்றி கொண்டு அவனை தலைமை ஏற்று செயல்பட்டு வருகிறான்.
முன்னர், இந்த ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு, குதம் உல் இஸ்லம், அல் ரெஹ்மத் டிரஸ்ட் என்ற பெயரிலும் செயல்பட்டு வந்தது.
இந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனான மவுலானா அபித் முக்தார் " இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல்"
 ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த வேண்டும் எனக்கூறிவருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்
முன்னால்
 உலக காதுகேளாதோர் தினம்

முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்கு குடி பெயர்ந்தார்(622)
அமெரிக்க சுப்ரீம்கோர்ட் நிறுவப்பட்டது(1789)
இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)

 
அமெரிக்காவின் கருப்பு வெள்ளி
1869 - அமெரிக்கப் பொருளாதா ரத்தின் கருப்பு வெள்ளி அல்லது தங்க வளையம் என்ற நிகழ்வு ஏற்பட்டது. விடுதலையடைந்த போது காண்டினெண்டல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நாணயத்தாள்களின் மதிப்பு மிக மோசமாகச் சரிந்திருந்த நிலை யில், 1792இல் நாணயச்சட்டம் இயற்றி டாலரை நாணயமாக அறிவித்த அமெரிக்கா, ஸ்பீஷி என்றழைக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்களை மட்டுமே வெளியிட்டது.

தனியார் வங்கிகள் நாணயத்தாள்களை அச்சிட்டாலும், அது சட்டப்படி ஏற்கத்தக்கவையல்ல என்பதுடன், அந்த வங்கி திவாலாகி, உரிய தங்கத்தைத் தரமுடியாமற்போனால், அந்தத்  தாள்களும் செல்லாமற்போய்விடும்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் காலமும்(1861-65), செலவுகளும் கணித்திருந்ததை விட அதிகமாகி, போர்ச் செலவுகளால் கடன்கள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், தங்க மதிப்பு இல்லாத, ஆனால், கேட்கும்போது தங்கமாக மாற்றிக் கொள்ளக்கூடிய டிமாண்ட் நோட் என்பதை அமெரிக்க அரசு வெளியிட்டது.

அதுவும் போதாமல், (அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி, வட்டி ஆகியவற்றைத் தவிர மற்றவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய) யுனைட்டட் ஸ்டேட்ஸ் நோட் என்பதை வெளியிட்டது. (தங்கம் அதிகம் கிடைத்துக்கொண்டிருந்த கலிஃபோர்னியா, ஆரகான் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் அரசமைப்புச் சட்டத்தின்படி இவை தங்கள் மாநிலத்தில் செல்லாது என்று அறிவித்தது தனிக்கதை!)

 முந்தைய வங்கித் தாள்களில் ஒருபுறம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்த நிலையில்,  இந்த இருவகைத் தாள்களிலும் பின்புறம் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் இவை க்ரீன்பேக்ஸ் என்றழைக்கப்பட்டன.

போர் முடிந்தபின், அனைத்துக் கடன்களையும் (க்ரீன்பேக்ஸ் தங்க மதிப்பில் இல்லாததால் அவையும் கடன்களே!), திருப்பிச் செலுத்தினால்தான், உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மரியாதையாக இருக்கும் என்று, கருவூலத்திலிருந்த தங்கத்தை அமெரிக்க அரசு விற்கத்தொடங்கியது.
குடியரசுத் தலைவர் யுலிசிஸ் கிராண்டின் தங்கை கணவரைப் பயன்படுத்தி, ஜேம்ஸ் ஃபிஸ்க், ஜே கூல்ட் என்ற இரு வணிகர்கள், அரசின் விற்பனையால் தங்கம் விலை சரிவது விவசாயிகளுக்கு இழப்பு என்று நம்பச்செய்து, விற்பனையை நிறுத்தி, தங்கக் கணக்கு என்ற பெயரில் ஏராளமான நிதி திரட்டி தங்கத்தின் விலையையும் செயற்கையாக உயர்த்தினர்.
தாமதமாக விபரமறிந்த கிராண்ட் தங்க விற்பனையை மீண்டும் தொடங்கியதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதே இந்த கருப்பு வெள்ளி.
 வங்கிகளும் நிதி நிறுவனங்களும் திவால், விவசாய விளைபொருட்களின் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி என்று மிகமோசமான பின்விளைவுகளை இந்தத் தங்கச்சதி ஏற்படுத்தினாலும், அவர்களிடம் முதலீடு செய்திருந்தவர்கள் பணத்தை இழந்தாலும்,
பெரிய வழக்கறிஞர்களைக்கொண்டு ஃபிஸ்க்கும், கூல்டும் தண்டனைபெறாமல் தப்பி, செல்வந்தர்களாகவே வாழ்ந்தனர்!
                                                                                                                                  - அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
மோடி 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இந்துத்துவா கும்பல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். 
இந்த கும்பல்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது தான் அதிக அளவில் தாக்குதல் அரங்கேறுகிறது. இதை தடுக்கவேண்டிய மத்திய பா.ஜ.க அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதியன்று தப்ரிஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
அதனையடுத்து பீகாரில் ஜூலை 2-ம் தேதி திருட வந்ததாக கூறி இளைஞர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி அடித்துக் கொன்றனர். 

மேலும் அதே பீகாரில் ஜூலை 19-ம் தேதி கன்றுகுட்டிகளை திருடவந்ததாக கூறி 3 பேரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.

இதன் தொடற்சியாக தற்போது  ஜார்க்கண்ட் மாநிலம் ஜலதங்கா கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 
இங்கு 3 பேர், இறந்துபோன பசுவின் உடலுடன் இருக்கிறார்கள் என்று கூறி, பசு குண்டர்கள், ஒட்டுமொத்த கிராமத்தினரையும் திரட்டிச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில், சம்பந்தப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை போலிஸார் மீட்டு ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 எனினும் கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலாந்தஸ் பர்லா என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போயுள்ளார். பாகு கச்சாப் மற்றும் பிலிப் கோரோ ஆகிய 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து ஜலதங்கா கிராமத்தில் பதட்டம் நிலவி வருவதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச் செய்தியை ஊடகங்கள் பரப்பிவிடாமல் அரசு பார்துக்கொண்டுள்ளது.

 பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன என பலர் குற்றம் சாட்டிவருகின்றனர்.
 
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவில் கொள்ளுங்கள்.




 செப்டம்பர் .
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு 


அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு 

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு 


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு 
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு

நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org

 --------------------------------------------------------------------------------

 ரிசர்வ் வங்கிப் பனி.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------ திவாலான 178 ஆண்டுகால தாமஸ் குக்.
இங்கிலாந்தை சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம், கடனில் மூழ்கியதால் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தை நம்பி சுற்றுலா சென்ற லட்சக்கணக்கான மக்கள் தவிப்பில் உள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் குக் என்பவர், தனது பெயரிலேயே சுற்றுலா ஏஜென்சி நிறுவனத்தை தொடங்கினார்.
 பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல பயணிகளுக்கு ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளை இந்நிறுவனம் செய்து வந்தது.
 இந்நிறுவனம், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் விமானச் சேவை ஆகியவற்றை நடத்தி வந்தது.
ஒவ்வோர் ஆண்டும், 1.9 கோடி பயணியர், 16 நாடுகளுக்கு, இந்நிறுவனம் மூலம் சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.
இருப்பினும், இறுதியில் கடன் பிரச்னைகளில் சிக்கி, போதிய நிதியுதவி கிடைக்காமல் திவாலாகியது.


இதனையடுத்து, இந்த நிறுவனம் மூலம் சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த, 6 லட்சம் பயணியர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இவர்களில், 1.5 லட்சம் பேர் பிரிட்டன் குடிமக்கள்.தற்போது, பயணியருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்துதரும் முயற்சியில், பிரிட்டன் அரசு இறங்கி உள்ளது.
கடந்த, 1840ம் ஆண்டு, பிரிட்டனைச் சேர்ந்த, தாமஸ் குக் என்பவரால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. 1970 மற்றும் 1980களில், மிகப்பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடித்தது,

இருப்பினும், சமீப காலமாக கடன் பிரச்னைகளில் சிக்கி, தவித்துக் கொண்டிருந்தது. கடனிலிருந்து மீள்வதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், போதுமான நிதியுதவி கிடைக்காத காரணத்தால், தற்போது திவாலாகி விட்ட தாக அறிவித்து விட்டது.
இந்தியாவில் இந்நிறுவனத்தில், 21ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருமே திடீரென பணியிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனத்துக்கு, சுமார், 2 பில்லியன் பவுண்டுகள், அதாவது, 17 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் கடன் உள்ளதாக தெரிகிறது.நிதி நெருக்கடி மட்டுமின்றி, கடுமையான வியாபார தள்ளுபடி போட்டிகள், பருவ நிலை மாற்றங்கள், பயங்கரவாதம், அரசியல் கொந்தளிப்புகள், நாடுகளின் பொருளாதார நிலைகள் என, பல அம்சங்கள், இந்நிறுவனத்தை சாய்த்து விட்டன.

ஆகஸ்ட், 2012ல், ‘தாமஸ் குக் இந்தியா’ நிறுவனத்தை, கனடாவைச் சேர்ந்த, ‘பேர்பாக்ஸ் பைனான்ஷியல் ஹோல்டிங்ஸ்’ எனும், முதலீட்டு நிறுவனம் கையகப்படுத்தியது.

‘தற்போது, பேர்பாக்ஸ் நிறுவனத்தின் வசம், 77 சதவீத பங்குகள் உள்ளன. இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கைக்குப் பின், ‘தாமஸ் குக் இந்தியா’ நிறுவனப் பங்குகள் எதுவும் தாமஸ் குக் நிறுவனத்திடம் இல்லாமல் போனது.

கடந்த சில மாதங்களாகவே இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து, நஷ்டத்தில் இயங்கி வந்தது. சுமார் 15 ஆயிரம் கோடி கடனில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதை சரி செய்ய அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடையவே இறுதியாக இந்நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தாமஸ் குக் நிறுவனம் திவாலால் இந்நிறுவனத்தை நம்பி பயணித்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தவிப்பில் உள்ளனர்.
இவர்களில் 1.5 லட்சம் பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். இங்கிலாந்து விமானங்கள் மூலம் இரண்டு வாரங்களில் இவர்கள் மீட்கப்படுவர் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் பேங்கவுசர், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்துள்ளார். இந்தநாள் எங்களுக்கு மிகவும் சோகமான நாள் எனவும் கூறியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?