தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் மழை ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு. மையம் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மழை பெய்யும் - வானிலை மையம்.
சமையல்சிலிண்டர் முதல் பாஸ்டாக் பாட்டில்வரை இன்று முதல் எல்லாமே விலை ஏறுது.
சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன்.. அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு இன்று காலை விசாரணை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறை தான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது - முதல் 3 இடத்துக்குள் தமிழ்நாடு வர திராவிட மாடல் அரசின் மேம்பாட்டு நடவடிக்கை தான் காரணம் - அமைச்சர்உதயநிதி .
CAA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது- எடப்பாடி.பழனிசாமி.
அ.மலைபாதயாத்திரையின்போது பாஜக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்..
தமிழ்நாடு அரசின் திட்டங்களை QR Code-ஐ ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட் உத்திரவு.
மும்பை பெருநகர மாநகராட்சி தொகுதி நிதி ஒதுக்கீடு.2003-ல் பாஜக, ஷிண்டே அணி எம்எல்ஏக்களுக்கு ரூ.500 கோடி. எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு ரூ.1 கூட வழங்கப்படாதது அம்பலம்.
IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகர்கோயில் செல்லவிருந்த பயணத்தை IRCTC இணையதளத்தில் ஸ்ரீதரன் ரத்து செய்துள்ளார். இணையதளத்தில் For Help-ல் இருந்த 9832603458 என்ற எண்ணில் தனது பணத்தை மீண்டும் அனுப்ப ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
எதிர்முனையில் பேசியவரிடம் ஏடிஎம் கார்டு விவரங்களை ஸ்ரீதரன் கூறிய நிலையில் வங்கி கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணையில் IRCTC இணையதளத்தில் இருந்த மொபைல் எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை என தெரியவந்தது. இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிகளின் வளர்ச்சி
உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை 2024 இல், பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் அதிகமான போலிச் செய்திகள் பரவும் என்றும், அதன் எதிரொலியாகத் தேர்தல் செயல்முறைகளே சீர்குலையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ போலிச் செய்திகளும், வதந்திகளும் வளர்ந்திருக்கின்றன.
2023 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் 15 ஆவது இடத்திலிருந்த இந்தியா, தேர்தல் நடைபெறவுள்ள இந்தாண்டு முதலிடத்திற்கு வந்திருக்கிறது.
இதன் பெருமை பாஜகவின் டிஜிட்டல் கூலிப்படைகளைத் தான் சாரும். அதில் ஒன்றிய அமைச்சர்கள் துவங்கி அடிமட்ட சங்பரிவார் உறுப்பினர் வரை யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாட்ஸ்ஆப், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம், யுடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுவது தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக வார்த்தைகளை விட பார்வையாளர்களை, படங்கள் மற்றும் வீடியோக்கள் 60 ஆயிரம் மடங்கு அதிக வேகத்தில் ஈர்க்கின்றன.
செயல்படவும் வைக்கின்றன என்கின்றன ஆய்வுகள். சுருக்கமாகக் கூறுவதென்றால், சமூக வலைத்தளங்கள் சிந்தனையை விட உணர்வுகளின் அடிப்படையில்தான் அதிகமாகச் செயல்படுகின்றன. இதைப் பயன்படுத்தியே இந்தியாவில் வலதுசாரிகள் சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டிவிட்டும், அதன் அடிப்படையில் போலியான செய்திகளைப் பரப்பியும் ஆதாயம் அடைகின்றனர். பொய்களைப் பரப்புவதில் மட்டுமல்ல, போலிகளிலும் எப்போதும் பாஜகதான் முதலிடம். அதிலும் பிரதமர் மோடி முதல்வராக இருந்த குஜராத்திற்குத் தனி இடம்.
போலி சுங்கச்சாவடி, போலி அரசு அலுவலகங்கள் எனத் துவங்கி போலி பிரதமர் அலுவலக அதிகாரி வரை போலிகளில் முத்திரை பாதித்த மாநிலம் குஜராத்தான். அங்குள்ள மோர்பியிலிருந்து கட்ச் வரையிலான நெடுஞ்சாலையில் வகாசியா சுங்கச்சாவடி போலியான ஒன்று என்று ஓராண்டிற்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் தினந்தோறும் 2 ஆயிரம் வாகனங்கள். ரூ.20 முதல் ரூ.200 வரை வசூல். இதைச் செய்தது வேறு யாருமல்ல, பாஜக மாவட்டத் தலைவர் தர்மேந்திரசிங்.
குஜராத்தின் தாஹோட் மற்றும் தபோ மாவட்டத்தில் மட்டும் 6 போலி அரசு அலுவலகங்களை 7 ஆண்டுகளாக நடத்தி வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சந்தி சிரித்தது.
இதில் இந்த போலி அலுவலகங்களுக்கு அம்மாநில அரசு ரூ.21 கோடியும் வழங்கியிருக்கிறது. இதுதான் மோடி முன்வைக்கும் டிஜிட்டல் இந்தியாவின் அதிநவீன வளர்ச்சி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மதுரையில் பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி . திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் . செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று முதல் 2 நாட்கள் தொடர் விவாதம் தொடங்க உள்ளது. சின்ன சேலம் அருகே புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "ஆம் ஆத்மியை சேர்ந்த ராகவ் சத்தா எம்.பி. அளித்த தீர்மானத்தில் எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என ராஜ்ய சபா சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன். அதில் எனது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை. தீர்மானத்தில் நான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் எனது கைய