எரிஸ் வைரஸ்

 நெல்லை திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எல்எல்பி 3 ஆண்டு கால சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மாலை வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அமலாக்கத்துறைக்கு அஞ்சும் அன்புமணி.. சென்னையில் வீராவேசம்! டெல்லியில் அடிமை - விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்சுல்வம்.

பிரிட்டனில் கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை   EG. 5.1 என்று  அழைக்கின்றனர். ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக  கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் கடந்த மே மாதமே இந்தியாவில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  இருப்பினும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3சிறுவர்கள்  யூ-டியூப் மூலம் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து,அதை வெடிக்கவைத்து அக்காணொலியை இணையத்தில் பதிவேற்றியதால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டனர். 

மலையாளபிரபல திரைப்பட இயக்குனர் சித்திக் ( 63 வயது )காலமானார்
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மலையாளம்,தமிழ்,இந்தியில் பல ஙெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
ப்ரெண்ட்ஸ் மற்றும் காவலன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் சித்திக். 
----------------------------------
மணிப்பூரில்  பழங்குடியினர் பேரணி


மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் நாகா பழங்குடியின மக்கள் இன்று பேரணி நடத்த இருக்கின்றனர். 
இந்த பேரணி ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மணிப்பூரின் நாகா பகுதிகளில் தமெங்லாங் தலைமையகம், சாண்டல் தலைமையகம், உக்ருல் தலைமையகம் மற்றும் சேனாபதி தலைமையகம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

மணிப்பூரில் உள்ள நாகா பழங்குடியின மக்களின் அமைப்பான யுனைடெட் நாகா கவுன்சில் (யுஎன்சி) பல ஆண்டுகளாக, நாகா மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (ஆகஸ்ட் 9ம் தேதி) நாகா பகுதிகளில் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளது. 

தொடர்ந்து, மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர இருதரப்புடனும் மத்திய அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க இருக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9ம் தேதி) காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும். இதில் நாகா மக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9ம் தேதி) காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும். இதில் நாகா மக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது.

மேலும், “கடந்த ஆகஸ்ட் 3, 2015 அன்று இந்திய அரசு (GOI) மற்றும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN) இடையே வரலாற்று கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தோ-நாகா அமைதி செயல்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. 

ஆனால், தற்போது வரை இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் அதிக தாமதம் ஏற்படுவது கவலைக்குரியது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் சாத்தியம் உள்ளது. 

இந்தோ-நாகா இடையே நீடித்து வரும் அரசியல் பிரச்சினைக்கு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், நாகா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இந்த பேரணி நடைபெறவுள்ளது. அனைத்து மனசாட்சியுள்ள நாகா குடிமக்கள் பங்குதாரர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த பேரணியில் மிகுந்த ஒத்துழைப்பையும், பங்கேற்பையும், பிரார்த்தனையுடன் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. 
குக்கி பழங்குடியின மக்களின் அமைப்பான குகி இன்பி மணிப்பூர், இந்த பேரணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. 

கடுமையான வன்முறைக்கு மத்தியில் நாகா பழங்குடிகளின் பேரணி நடைபெற இருப்பதால், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் உள்ள நாகா எம்.எல்.ஏக்கள் 10 பேரும் வருகின்ற 21ம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ககூடாது என நாகா பழங்குடியின மக்களின் மற்றொரு செல்வாக்கு மிக்க அமைப்பான ‘ நாகா ஹோஹோ’ வலியுறுத்தியுள்ளது. 

தொடர்ந்து, குகி இனத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. 

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகியும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
மோடி இந்த கலவரத்தை பிரதமர் என்ற முறையில் கட்டுப் படுத்த முயற்சி ஏதும் செய்யவில்லை.

இதுபற்றி பேசக் கூடச் செய்யவில்லை.அவரை இதுபற்றி வாயைத்திறந்து பேசவும்,இக்கலவரம் தொடர்பாக மக்களவையில் வாதம் செய்யவும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கின.

ஆனால் அதை மோடி கண்டு கொள்ளவே இல்லை.நாடாறுமன்றம் வரவே இல்லை.பதிலாக மக்கள் விரோதா மசோதாக்களை எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்யும் வேளையில் நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?