இடுகைகள்

ஆபாச சாமியாரை ஆதரிக்கும் பாஜக அரசு ?

படம்
"ஹரியானா மாநில அரசானது, தனது அரசியல் சுயலாபத்திற்காக பஞ்ச்குலா வை தீக்கிரையாக்கி விட்டதாக, உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.‘தேரா சச்சா சவுதா’ வன்முறையாளர் களிடம், முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரசு சரணடைந்து விட்டதாகவும் நீதிபதிகள் சாடியுள்ளனர்." நன்றி:தீக்கதிர் . தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50), தனதுஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் சிஷ்யைகளை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கிய குற்றம் நிரூபணமாகி இருப்பதாக பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிஜகதீப் சிங் தீர்ப்பளித்தார். குர்மீத் ராமுக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை யன்று வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.அதைத்தொடர்ந்து, பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தேரா சச்சா தொண்ட ர்கள், வன்முறையில் இறங்கினர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துவங்கிய வன்முறை, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. தேரா சச்சா சவுதா தொண்டர்கள், பொதுமக்களின் வாகனங்களை அடித்துநொறுக்கியதுடன், பேருந்து, ரயில் களுக்கு தீ வைத்தனர். அரசு கட்ட...

காம வெறியும் பக்தி வெறியம்.

படம்
2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  பெயர் குறிப்பிடப் படாத அந்தக் கடிதத்தில், ராம் ரஹீம், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பல பெண் துறவிகளை அவன் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண் துறவி குறிப்பிட்டிருந்தார்  கடித அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், தானாகவே வழக்கை பதிவு செய்தது. ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது* ஆசிரமத்தை சேர்ந்த, 18 பெண் துறவி களிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.  அதில், இரண்டு பேர், பாலியல் பலாத்காரம் நடந்ததை ஒப்புக் கொண்டனர். ஆனால் மொத்தம் 35 பேர்களுக்கும் மேல் இந்த சாமியார் இச்சைக்கு பலியாகி உள்ளனர்.ஆனால் அனைவரும் புகார் தர ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், 'புனிதமாக்கு வதாக' கூறி, பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் துறவிகள் கூறினர்* இரண்டு பெண் துறவிகளும், நீதிமன்றத் திலும் நடந்த சம்பவத்தை பதிவு செய்தனர்.  அதன் அடிப்படையில், 2007, ஜூலை, 30ல், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், கு...

தனியார்மயமாகும் தண்ணீர் ...

படம்
நிலத்தடி நீருக்கும் ஃபுளூரைடு எனும் வேதிப்பொருளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இது நிலத்தடி நீரில் கலந்திருப்பதால், அதைபருகும் மக்களுக்கு பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் ஃபுளூரைடின் ஆரம்ப நிலையிலேயே உண்டாகி விடுகிறது.  இது நாளடைவில் உடலில் உள்ள எலும்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு வீரியம் மிக்கது. இந்த ஃபுளூரைடு பாதிப்பு எந்தெந்த பகுதிகளில் அதிகமாக உள்ளது என ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளவடபட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின்முன் பற்களில் அழியாத காவி நிறக் கோடுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், நான்என் திருமணத்திற்கு பிறகு எப்போது இந்த கிராமத்திற்கு வந்தேனோ அப்போது முதல் இந்த கறைகள் என்பற்களில் வந்துவிட்டன;  இதுபோன்று என் மகனுக்கும்உள்ளது என்றார். வடபட்டி கிராமத்தில் மட்டும், இப்படிஃபுளூரோசிஸ் பல் (Dental Fluorosis) நோயால் பாதிக்கப்பட்ட நூறு பேரில் இவரும் ஒருவர்.ஃபுளூரைடின் உயர் செறிவு அதிகளவில் வெளிப்படுவதே, ஃபுளூரோசிஸ் பல் எனும் குறைபாடு ஏற்படுவதற்கு காரணம். இப்பகுதியில் வாழ...

தன்மானத்தை விட தற் பாதுகாப்பே முக்கியம்?

படம்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரின் தெளிவற்ற நிலைப்பாடு மற்றும் நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசின் கடைசி நேர கைவிரிப்பு ஆகியவற்றின் காரணமாக, 'நீட்' விவகாரத்தில், தமிழக அரசு படுதோல்வியை சந்தித்துள்ளது. மருத்துவ கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, மாற்ற எல்லா மாநிலங்களும் ஏற்ற நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு பெறுவது சாதாரண விஷயமல்ல.  தேசிய மற்றும் மாநில அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் வைத்து, அதற்கேற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. பார்லிமென்ட்டில், அ.தி.மு.க.,வுக்கு, 50 எம்.பி.,க்கள் இருந்தும், இந்த பிரச்னை குறித்து, அவர்கள் அவ்வப்போது குரல் கொடுத்ததோடு சரி; மற்றபடி, மத்திய அரசிடம் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு, எம்.பி.,க்களின் செயல்பாடுகள் இருக்கவில்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் பயணங்கள், டில்லியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.  மிக முக்கியமான, நீட் பிரச்னையில், இவர், தனி ஆளாக, டில்லிக்கு வருவதும், போவதுமாக இருந்தார். தங்கள் கட்சிக்குள்ள எம்.பி.,க்களின் பலத்தை, இ...