மதவாத குரல் எழுப்பியது அறிவீனம்."

 சுங்கத்துறை ஓட்டுநர், கேண்டீன் உதவியாளர் தேர்வில் முறைகேடு விவகாரத்தில் ப்ளூடூத் பொருத்தி தேர்வு எழுதி கைதான உ.பி.யைச் சேர்ந்த 28 பேர் கைது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.


கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக மாணவர்களுக்கு டேட்டா சிம் கார்டு வழங்குவதாக அ.தி.மு.க அரசு ரூ.4.93 கோடி வீண் செலவு. கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல்.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சம்ருத்தி விரைவு சாலையில் கண்டெய்னரில் வேன் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு.20 பேர் காயம்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.ஏற்கனவே 31ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்தது.மறுபடியும் முதலில் இருந்தா?

சமூகநீதியைக் காவு வாங்கி விடுவார்கள். எந்தச் சூழலிலும் சமூகநீதியை நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

இந்தியாவில் வாழ விரும்பினால்  பாரத் மாதா கி ஜே சொல்ல வேண்டும் - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பேச்சு.

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்  நூற்றாண்டு விழா நினைவு நாணாயம் . கோரிக்கைக்கு ஒன்றிய அரசு  ஒப்புதல்

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக குஜராத்தில் “ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்."அதைஏற்றுக்கொள்ள முடியாதது.விளையாட்டை விளையாட்டகத்தான் பார்க்க வேண்டும்.நம்நாட்டிற்க்கு வந்தவர்கள் நம் ஙிருந்தினர்கள்.மதவாத குரல்கள் எழுப்பியது அறிவீனம்."உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

  எல்லையைக் கடந்து சென்று பாலஸ்தீனத்தின மக்களுக்கு இஸ்ரேல் தடை செய்த தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும்   எகிப்தியர்கள்.

------------------------------------

வாயைக்கொடுத்து முழித்தவர்

அண்­ணா­மலை என்­றாலே பொய் மட்­டுமே பேசு­வார் என்று நாளுக்கு நாள் அவரே உறு­திப்­ப­டுத்தி வரு­கி­றார். 

தின­மும் ஒரு பொய்யை சொல்லி மாட்டி கொள்­ளும் அண்­ணா­மலை, சமீ­பத்­தில் அண்ணா குறித்து சர்ச்சை, முது­கலை மருத்­துவ படிப்பு சீட், தி.மு.க. ஆட்­சி­யில் கட்­டப்­பட்ட அணை­கள் விவ­ரம் என அடுத்­த­டுத்து வாயில் வடை சுட்டு மாட்­டிக்­கொண்­டார். 

அவர் பிறக்­காத காலத்­தில் நடந்த சம்­ப­வங்­கள் மற்­றும் அவர் பார்க்­காத சம்­ப­வங்­களை நேரில் நின்று பார்த்­த­து­போல் ஒரு கதையை சொல்­வ­தில் அவ­ருக்கு நிகர் அவரே.

தமிழ்­நாடு குறித்­தும், தலை­வர்­கள் குறித்­தும் அண்­ணா­மலை அடித்­து­வி­டும் பொய்க்கு ஆதா­ரங்­கள் வெளி­வந்­தால் கப்­சிப் என ஆகி­வி­டு­வார். 

இது­கு­றித்து பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேள்வி கேட்­டால், அதுக்கு விளக்­க­ம­ளிக்­கா­மல் ஒரே கேள்­வியை அந்த நிருபரி­டமே ரிப்­பீட் மோடில் கேட்டு அவர்­தான் புத்­தி­சாலி என்று நினைத்­துக் கொள்­வார். 

ஆனால் நேற்று முன்­தி­னம் நடந்த ஒரு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற அண்­ணா­மலை மிகப்­பெ­ரிய பொய்யை சொன்­னார். 

அதற்கு மேடை­யி­லேயே அவ­ரது முகத்­திரை கிழிக்­கப்­பட்­ட­தால் வாய் ஜோக் கொடுத்­த­வர் கை கட்டி வேடிக்கை மட்­டும் பார்த்­தார்.

இந்­தி­யா­வில் வரு­கிற 2024ல் நடை­பெற உள்ள நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­த­லில் வெற்றி பெறப்­போ­வது யார்? என்ற தலைப்­பில் சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் ஒரு விவாத மேடை நிகழ்ச்சி நடந்­தது. 

இந்த விவாத நிகழ்ச்­சி­யில் காங்­கி­ரஸ் எம்.பி. கார்த்தி சிதம்­ப­ரம், தமி­ழக பா.ஜ. தலை­வர் அண்­ணா­மலை, தெலங்­கானா மாநில எம்.எல்.சி.யும், அம்­மா­நில முதல்­வர் சந்­தி­ர­சே­க­ர­ராவ் மக­ளு­மான கவிதா ஆகி­யோர் பங்­கேற்­ற­னர். 

இதில், பா.ஜ.க. மாநில தலை­வர் அண்­ணா­மலை பேசு­கை­யில், ‘இன்­றைக்கு வாரிசு அர­சி­யல் அதி­க­ரித்து விட்­டது. 

பெற்ே­றார் பின்­பு­ல­மாக கொண்டு வாரி­சாக பிள்­ளை­கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்­எல்­சி­யாக உள்­ள­னர்.

ஆனால் நான் மிக­வும் படிப்­ப­றிவு குறை­வாக உள்ள பெற்­றோ­ருக்கு மக­னாக பிறந்து இந்த நிைலக்கு வந்­துள்­ளேன். தெலங்­கானா மாநி­லத்­தில் பார­திய ராஷ்­டி­ரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்­சி­யில் ஊழல் அதி­க­ரித்து விட்­டது.

 உதா­ர­ண­மாக போலா­வ­ரம் திட்­டத்­தில் ஊழல் மலிந்­தி­ருக்­கி­றது. அது உங்­கள் கட்­சிக்கு, பணத்தை கொட்­டும் ஏ.டி.எம். போல திகழ்­கி­றது’ என்று தெரி­வித்­தார்.

இதற்கு பதி­ல­ளித்து கவிதா, அண்­ணா­ம­லை­யி­டம் சர­மா­ரி­யான கேள்­வி­க­ளால் திக்­கு­முக்­காட வைத்­தார். கவிதா பேசி­ய­தா­வது:

இதற்கு பதி­ல­ளித்து கவிதா, அண்­ணா­ம­லை­யி­டம் சர­மா­ரி­யான கேள்­வி­க­ளால் திக்­கு­முக்­காட வைத்­தார். 

கவிதா பேசி­ய­தா­வது:

தமி­ழ­கத்­தில் மது­ரை­யில் எய்ம்ஸ் இன்­னும் நடை­மு­றைக்கு வர­வில்லை உண்­மையா? 

இல்­லையா?.

 தெலங்­கா­னா­வுக்கு எந்த ஒரு சிறப்பு திட்­ட­மும் வர­வில்லை உண்­மையா?

இல்­லையா?

கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் ரூ.12 லட்­சம் கோடி கடனை தள்­ளு­படி செய்­தீர்­கள்?. ஆனால், 10 ஆண்­டு­க­ளில் விவ­சா­யி­க­ளின் கடன்­களை தள்­ளு­படி செய்ய ­வில்­லையே ஏன்?. 

மற்ற மாநி­லங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் எனது தந்­தை­யின் ஆட்­சி­யில் தெலங்­கா­னா­வின் வளர்ச்சி விகி­தம் அதி­க­மாக இருப்­பதே அதற்கு சான்­றா­கும்.

2024 தேர்­த­லில் பா.ஜ.க. வுக்கு தென் மாநி­லத்­தில் ஒரு இடம் கூட கிடைக்­காது. தெலங்­கா­னா­வில் கேசி­ஆர் செய்த வளர்ச்சி திட்­டங் களை பா.ஜ.க 100 ஆண்­டு­கள் ஆனா­லும் செய்­ய­மு­டி­யாது. 

போல­வ­ரம் திட்­டம் தெலங்­கா­னா­வில் இல்லை.

ஆந்­தி­ரா­வில் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எந்த மாநி­லத்­தில் எந்த திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது கூட தெரி­யா­மல் பேசு­கி­றீர்­கள்.

பா.ஜ.க எதற்­கெ­டுத்­தா­லும் குடும்ப ஆட்சி என கூறு­கி­றது. இந்­திய கிரிக்­கெட் வாரி­யத்­தின் தலை­வ­ராக ஜெய்ஷா இருக்­கி­றார். அவர் கிரிக்­கெட் வீர­ரும் கிடை­யாது.

ஒரு கட்­சி­யின் தலை­வர்.

 அமித்ஷா மகன் தான் அந்த பத­வி­யில் இருக்­கி­றார். ஆந்­திர பிர­தேச மாநில பா.ஜ.க. தலை­வர் புரந்­த­ரேஸ்­வரி என்.டி.ராமா­ராவ் மகள் தானே. 

அது உங்­க­ளுக்கு நினை­வுக்கு வர­வில்­லையா?

ஜோதி­ரா­தித்ய சிந்தி­ யாவை பா.ஜ.க. எப்­படி ஒன்­றி­ய­அ­மைச்­ச­ராக்­கி­யது?

தமி­ழ­கத்­தில் தி.மு.க.வுட­ னும், மகா­ராஷ்­டி­ரா­வில் சிவ­சே­னா­வு­ட­னும் கூட்­டணி வைத்­த­போது அவை குடும்ப கட்­சி­கள் என்­பது உங்­க­ளுக்கு தெரி­யாதா?.

 உங்­க­ளுக்கு தேவைப்­பட்­டால் வாரிசு அர­சி­யலை விமர்­சிப்­பீங்க?. 

உங்­க­ளுக்கு வச­திப்­பட்­டால் வாரிசு அர­சி­யலை ஏற்று கொள்­வீர்­களா?

இவ்­வாறு, அவர் பேசி­னார். 

 கவிதா பதி­லடிக்கு அண்ணாமலையால் ஒன்றும் மறுத்துப் பேசமுடியவில்லை.அசடு வழிய பரிதாபமாக அமைதியாக இருந்தார்.

----------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?