வீரப்பன் கொலை செய்யபட்ட.

 சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் 75% நிரம்பியது.

கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கம், விற்பனை செய்யும் பகுதிகளை உள்ளடக்கிய காவல் துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 ’தெலங்கானாவில் வென்றால் இலவச வாஷிங் மெஷின்! ஸ்மார்ட் போன்!’ பகுஜன  சமாஜ் கட்சி வாக்குறுதி .

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, C பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்கும், துணை ராணுவ படைகளில் பணிபுரிவோருக்கும் அதிகபட்சமாக ரூ.7,000 வரை தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வழக்கறிஞருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஸ்தானில் மேவார் அரச குடும்பத்தின் வாரிசான விஸ்வராஜ் சிங் மேவார் மற்றும் கர்ணி சேனா அமைப்பை நிறுவிய லோகேந்திர சிங் கல்வியின் மகன் பவானி சிங் கல்வி ஆகியோர் தேர்தல் முன்னிறுத்தி பாஜகவில் இணைக்கப்பட்டனர்.

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர். அப்பாவி மக்கள், நோயாளிகள் கொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

சிவகாசி அருகே அடுத்தடுத்து பயங்கரம் பட்டாசு கடை வெடித்து சிதறி 12 பெண்கள் உள்பட 13 பேர் பலி.ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.

------------------------------------------------

கணினி உருவாகக் காரணி பாபேஜ்

இங்கிலாந்தின் லண்டனில் 1791 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்த பாபேஜ், ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல, ஒரு கணிதவியலாளர், தத்துவஞானி மற்றும் பொறியியலாளர் ஆவார், அவருடைய பணி வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தது.

சார்லஸ் பாபேஜின் ஆரம்பகால வாழ்க்கை கணிதம் மற்றும் பொறியியலில் ஒரு தீராத ஆர்வத்தால் நிறைந்து இருந்தது. 

அவர் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் கணிதவியலாளர் ஜான் ஹெர்ஷல் மற்றும் ஜார்ஜ் பீகாக் ஆகியோரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 

கேம்பிரிட்ஜில் அவர் இருந்த காலத்தில்தான் கணிதத்தின் மீதான அவரது ஆர்வத்தையும், இயந்திரங்கள் மீதான அவரது நீடித்த ஈர்ப்பையும் கண்டறிந்தார்.

”கணினியின் தந்தை" என அழைக்கபடும் சார்ஜஸ் பாபேஜ் இன்று நாம் அறிந்த நவீன கணினியை அவர் கண்டுபிடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துவது அவசியம். மாறாக, பாபேஜின் பணிகள் கணினிகளின் வளர்ச்சிக்கான கருத்தியல் அடித்தளத்தை அமைத்தது.

கணினி அறிவியலில் சார்லஸ் பாபேஜின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று பகுப்பாய்வு இயந்திரத்தின் கருத்தாக்கம் ஆகும். பாபேஜின் மிகவும் பிரபலமான உருவாக்கம் அனலிட்டிகல் என்ஜின் ஆகும். இது பெரும்பாலும் முதல் பொது நோக்கத்திற்கான இயந்திர கணினியாக கருதப்படுகிறது.

பகுப்பாய்வு இயந்திரம் பரந்த அளவிலான கணக்கீடுகளைச் செய்ய வடிவமைக்கப்பட்டு இருந்தது மற்றும் துளையிடப்பட்ட அட்டைகளில் அறிவுறுத்தல்கள் மற்றும் தரவைச் சேமிக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 

பல்வேறு சவால்கள் காரணமாக இந்த இயந்திரம் பாபேஜின் வாழ்நாளில் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு தொலைநோக்கு கருத்தாகும், இது நவீன கணினிகளில் காணப்படும் அடிப்படைக் கருத்துக்களை அறிமுகப்படுத்தியது. 

அவரது வாழ்நாளில் பகுப்பாய்வு இயந்திரம் முழுமையாக உருவாக்கப்படவில்லை என்றாலும், வடிவமைப்பு மற்றும் கொள்கைகள் எதிர்கால கணினி வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தன.

கணினி அறிவியலில் பாபேஜின் பங்களிப்புகள் தொலைநோக்குப் பார்வை கொண்டவை, ஆனால் அதைத் தொடர்ந்து ஆலன் டூரிங் மற்றும் ஜான் வான் நியூமன் போன்ற கண்டுபிடிப்பாளர்கள்,சார்லஸ் பாபேஜின் கருத்தாக்கத்தை பின்பற்றி 20 ஆம் நூற்றாண்டில் முதல் மின்னணு டிஜிட்டல் கணினிகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர்.

பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட சார்லஸ் பாபேஜ் தனது 79 வயதில் 1871ஆம் ஆண்டு 18 அக்டோபர் தேதி மறைந்தார். 

சார்லஸ் பாபேஜ் நவீன கணினியைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அவர் முன்னோடியான பங்களிப்புகளைச் செய்தார். 

அவரது காலத்திற்கும் கூட கணினிகளின் வளர்ச்சிக்கான கருத்தியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளத்தை அமைத்தார் இதனால்தான் அவர் கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

---------------------------------------------------

மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று!

தமிழ்நாடு மக்களுக்கு காவிரி பிரச்னை ஏற்படும்போது எல்லாம், சிலருக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் செயல் பற்றி தான் நினைவுக்கு வரும். 

ஏனெனில் தமிழ்நாடு, கர்நாடக, கேரள எல்லையில் காவல்துறையினரால் 36 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த வீரப்பன், தமிழக மக்களின் பாதுகாவலனாக பலரால் கருதப்பட்டார்.  

குறிப்பாக, வீரப்பனும் அவனது ஆட்களும் 25 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் காடுகளில் உள்ளூர் பழங்குடியினரின் ஆதரவுடன் உயிர் பிழைத்தனர்.

இறுதியாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் 2004ஆம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் தேதி இதே நாளில், தமிழகத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார், வீரப்பன். 

அவருடன் அவரது சகாக்கள் மூன்று பேரும் கொல்லப்பட்டிருந்தனர். 

அந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்தவர் தான், விஜயகுமார் ஐபிஎஸ்.

 தற்போதைய கர்நாடகத்தில் கொள்ளேகலா அருகிலுள்ள கோபிநத்தம்(பழைய கோவை மாவட்டம்) என்னும் ஊரில் ஜனவரி 18, 1952ஆம் ஆண்டு ஒரு தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர், வீரப்பன்.

 இவரது தந்தையின் பெயர் கூசு. முனிசாமி கவுண்டர் - தாயின் பெயர் புலித்தாயம்மாள் என்பது ஆகும். வீரப்பன் முதலில் தனது மாமா சால்வை கவுண்டர்(அ) செவி கவுண்டர் எனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் மூலம், தனது வாழ்வையும் பணியையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார். 

வீரப்பனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்து இருந்தது. முதலில் சந்தனமரங்களை வெட்டி சந்தனக்கட்டைகளை கடத்தியும், யானைகளை வேட்டையாடி அதன் தந்தத்தை விற்கும் பணியிலும் ஈடுபட்டார். 

வீரப்பன் 1962ஆம் ஆண்டு, கோபிநத்தத்தில் தனது 10 வயதில் முதல்முறையாக யானையை சுட்டுக்கொன்று வேட்டையாடியுள்ளார். 

அப்போது அதைத்தடுக்க முயன்ற மூன்று வனத்துறை அதிகாரிகளை, அவரது குழுவினர் கொன்றுள்ளனர். இவரால் 184 பேர் வரை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அதில் 97 பேர் காவல் மற்றும் வனத்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை வீரப்பன், 900 யானைகளை தந்தத்திற்காக கொன்றதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்துள்ளது. 

 வீரப்பன் மலையூர் மம்பட்டியான்  செயல்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார். 

இதில் கொள்ளைக்குழுக்களுக்கு இடையே நடந்த பிரச்னையில் மலையூர் மம்பட்டியான் கொலையுண்டார். 

தான் தலையெடுத்து வரும்போது மலையூர் மம்பட்டியானைக் கொன்றவரின் உடன்பிறந்த சகோதரனைக் கொன்றதே, வீரப்பன் தனது இளமைக்காலத்தில் செய்த மிகப்பெரும் கொலைச்சம்பவமாகப் பார்க்கப்பட்டது. 

பாலார் குண்டுவெடிப்பினை அரங்கேற்றிய வீரப்பன்:1992ஆம் ஆண்டு வீரப்பனைப் பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினை உருவாக்கின. 

 இந்நிலையில் மேட்டூர் அருகே காவல்துறையினருக்கு துப்பு கொடுக்கும் பண்டாரியை வீரப்பன் கொன்றார்.

 அதனைத் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்க 41 காவல் மற்றும் வனத்துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையறிந்த வீரப்பன், 22 காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பயணித்த பாதையில் கண்ணிவெடிகளை வைத்தார். இதையறியாது பயணித்த இரு குழுக்கள், கர்நாடகாவின் பாலாறு என்னுமிடத்தில் நடந்த கண்ணிவெடி, குண்டுவெடிப்பில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இந்நிகழ்வில் 22 பேர் வரை கொல்லப்பட்டனர்.

 வீரப்பன் செய்த சம்பவங்களிலேயே பலரையும் புருவத்தை உயர்த்த வைத்த சம்பவம், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமாரை, 30 ஜூலை 2000ஆம் ஆண்டு கடத்தியது தான் எனலாம்.

என்னதான் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், ராஜ்குமார் பிறந்து வளர்ந்தது, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகிலுள்ள கஜனூர் என்னும் கிராமமாகும். ஒவ்வொரு மாதமும் சொந்த ஊருக்கு ராஜ்குமார் வந்து செல்வதை அறிந்த வீரப்பன், அவரை தெளிவாகத் திட்டமிட்டு கடத்தினார். 

இதனால் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வன்முறை வெடித்தது. அவரை மீட்க வேண்டும் என் கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை நேரில் வந்து சந்தித்தார். 

அதன்பின் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்த நக்கீரன் ஆசிரியர் கோபால் தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டார். 

பின் பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 108 நாட்கள் முடிந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். 

அப்போது வீரப்பன் வைத்த கோரிக்கைகள்: காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்க கர்நாடக அரசு ஆவன செய்யவேண்டும், தமிழை கர்நாடக மாநிலத்தில் 2ஆவது அலுவல் மொழியாக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்(தமிழ் தேசிய மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சார்ந்தவர்கள்) எனப் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்திக் கொலை: அதேபோல், 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் நாகப்பாவை, கர்நாடகாவின் சாமராஜநகர், காமகெரேவில் உள்ள அவரது கிராமத்திற்குச் சென்று கடத்தினார்,வீரப்பன். ஆனால் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் நாகப்பா சடலமாக மீட்கப்பட்டார்.  இந்நிலையில் சிறப்பு அதிரடிப் படைத் தலைவராக இருந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) விஜயகுமார், வீரப்பன் கும்பலுக்கு விஷம் கொடுக்க சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு 7 லட்சம் ரூபாய் கொடுத்ததாக 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீரப்பன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவரிடம் தமிழ் உணர்வு ஓங்கி இருந்தது. 36 ஆண்டுகளாக காவல் துறையினருக்குப் போக்கு காட்டினார் என்றால், அது உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெறாமல் சாத்தியமே இல்லை என்பதே நிதர்சனம். 

2004, அக்டோபர் 18ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த நாளைப் பலர் கொண்டாடினாலும் அவரால் நன்மைகள் பெற்றவருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். வரலாறு வெற்றி அடைந்த வீரனையோ, போரிட்டு தோற்ற வீரனையோ நினைவில் வைத்துக்கொள்ளும். வேடிக்கை பார்ப்பவனை நினைவில் வைத்துக்கொள்ளாது. வீரப்பன் அரசு இயந்திரங்கள் முன் சண்டை செய்து தோற்ற வீரன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?