வெறுப்பு பேச்சு பலன்கள்!

 “இஸ்லாமியர்களுக்கு தான் நாட்டில் முதல் உரிமை என காங்கிரஸ் முன்பு கூறியது; நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்”  மோடி.

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!இந்தியா

⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.

⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது

⭕3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.

⭕4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே

⭕5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

⭕6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.

⭕7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்

⭕8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்

⭕9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்

⭕10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

⭕11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது

⭕12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ext)

⭕13) உலகில் அதிக மருத்துவ கல்லூரிகளும் மருத்துவர்களையும் உருவாக்கும் முதன் மாநிலம்.

⭕14) உலகிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளும், பட்டய பொறியல் கல்லூரிகளும் கொண்ட ஒரே மாநிலம்.

⭕15) உலகின் அனைத்து மூலைகளுக்கும் பருத்தி ஆடைகள் அளிக்கும் மாநிலம்.

⭕16) உலகிற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்தது இந்த மாநிலம் தான்.

உலகில் முதல் முதலாக

"தாய் மொழியை" உருவாக்கியது இந்த சமூகமே.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இரண்டேயடியில் உலகளந்த திருமறை திருக்குறளை தந்த வள்ளுவன் பிறந்தது இந்த மண்ணில்தான்,

அது ஏன், உலகிலேயே மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் எம் உயிரினும் மேலான

"#தமிழ்நாடு"

தமிழன் என்று சொல்லுவோம்

தலை நிமிர்ந்து வாழுவோம்..

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு.இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 வெறுப்பு பேச்சு பலன்கள்!

குஜ­ராத் மாநி­லத்­தில் ராஜ்­கோட் என்ற மக்­க­ள­வைத் தொகு­தி­யில் பா.ஜ.க. சார்­பில் போட்­டி­யி­டு­கி­றார் புரு­ஷோத்­தம் ரூபாலா. 

இவர் ஒன்­றிய அமைச்­ச­ராக இருக்­கி­றார்.

மார்ச் 22 ஆம் தேதி ராஜ்­கோட் தொகு­தி­யில் தேர்­தல் பரப்­புரை செய்த புரு­ஷோத்­தம் ரூபாலா, ராஜ்­புத் மக்­களை மிக­மிக இழி­வா­கப் பேசி இருக்­கி­றார்.

 ராஜ்­புத் பெண்­க­ளைக் கொச்­சைப்­ப­டுத்­தும் வகை­யில் பேசி இருக்­கி­றார். அவர் என்ன சொன்­னார் என்­பதை மறை­மு­க­மா­கக் கூட இங்கே பதிவு செய்ய முடி­யாத அள­வுக்கு மோச­மான வார்த்­தை­களை அவர் பயன்­ப­டுத்­தி­னார்.

 இது ராஜ்­புத் மக்­களை, குறிப்­பாக அந்த இனப்­பெண்­களை கொந்­த­ளிக்க வைத்­துள்­ளது.

வட­மா­நி­லங்­கள் முழு­வ­தும் பா.ஜ.க.வுக்கு எதி­ராக ராஜ்­புத் மக்­கள் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். புரு­ஷோத்­தம் ரூபா­லாவை கைது செய்ய வேண்­டும், அவரை இப்­போதே ஒன்­றிய அமைச்­சர் பத­வி­யில் இருந்து நீக்க வேண்­டும், அவரை வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் இருந்து நீக்க வேண்­டும் என்று மக்­கள் கோரிக்கை வைத்­தார்­கள். 

வழக்­கம் போல் மோடி­யும், அமித்­ஷா­வும் இதைக் கண்டு கொள்­ள­வில்லை. 

ராஜ்­புத் மக்­க­ளின் போராட்­டத்­தை­யும் மீறி வேட்­பு­மனு தாக்­கல் செய்து விட்­டார் புரு­ஷோத்­தம் ரூபாலா. அவர் ஊர் ஊராக பிரச்­சா­ரம் செய்ய போய்க் கொண்டு இருக்­கி­றார். வட மாநி­லத்­தில் எதிர்ப்பு கிளம்­பி­ய­தும் சென்­னைக்கு வந்து பா.ஜ.க.வுக்கு பிரச்­சா­ரம் செய்­தார் அவர்.

பா.ஜ.க.வுக்கு எதி­ராக ராஜ்­புத் மக்­க­ளும், அமைப்­பு­க­ளும் பல்­வேறு போராட்­டங்­களை வட மாநி­லங்­க­ளில் நடத்தி வரு­கி­றார்­கள். ஏப்­ரல் 7 ஆம் தேதி பிர­த­மர் மோடி, உ .பி. சென்­றி­ருந்­தார். அன்­றைய தினம் சஹ­ரன்­பூர் மாவட்­டத்­தில் ராஜ்­புத்­தி­ரர்­க­ளின் மகா பஞ்­சா­யத்து கூட்­டப்­பட்­டது. 

இதில் 14 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த அந்த இன மக்­கள் கலந்து கொண்­டார்­கள். பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளிக்­கக் கூடாது, தகு­தி­யா­ன­வர் என நினைக்­கும் வேறு கட்சி வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று இக்­கூட்­டம் தீர்­மா­னித்­தது. அடுத்த கூட்­டம் ஏப்­ரல் 16 அன்று நடை­பெற்­றது.

ஏப்­ரல் 14 ஆம் தேதி ராஜ்­கோட்­டில் பா.ஜ.க.வுக்கு எதி­ராக ராஜ­புத்­தி­ரர்­கள் மாபெ­ரும் பேரணி நடத்­தி­னர். இதில் ஒன்­றரை லட்­சம் பேர் கலந்து கொண்­டார்­கள். ‘நாடு முழுக்க எந்த மாநி­லத்­தி­லும் ராஜ­புத்­தி­ரர்­கள் பா.ஜ.க.விற்கு வாக்­க­ளிக்­கக் கூடாது’ எனத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப் பட்­டது. 

இந்­தப் பேர­ணி­யில் லட்­சக்­க­ணக்­கான ராஜ­புத்­திர சமூ­கத்­தி­னர் கலந்­து­கொண்­ட­னர். சில பெண்­கள் தீக்­கு­ளிக்க முயற்­சித்து, அவை தடுக்­கப்­பட்­டது. 

ஊர்­வ­லம் தொடர்­பான வீடியோ காட்­சி­கள் வெளி­யாகி சமூக வலை­த­ளங்­க­ளில் வைரல் ஆனது.

ராஜ்­புத் சங்­க­லான் சமிதி தலை­வர் கரன்­சிங் சாவ்தா, “ஏப்­ரல் 19--–க்குள் ரூபா­லா­வின் வேட்­பு­ம­னுவை பா.ஜ.க. வாபஸ் பெற­வில்லை என்­றால், எங்­கள் போராட்­டத்தை இந்­தி­யா­வின் பிற பகு­தி­க­ளுக்­கும் கொண்டு செல்­வோம்..” என்று தெரி­வித்­துள்­ளார்.

 புரு­ஷோத்­தம் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றால் தீக்­குண்­டத்­தில் இறங்­கு­வோம் என்று 21 பெண்­கள் அறி­வித்­துள்­ளார்­கள். ஜம்­மு­வைச் சேர்ந்த ராஜ்­புத் சமூக இளை­ஞர் அமைப்பு ஒன்று ரூபா­லா­வின் நாக்கை அறுத்து வரு­வோ­ருக்கு ரூ.11 லட்­சம் பரிசு அறி­வித்­துள்­ளது. 

ராஜ்­புத் இன பெண்­கள் விளக்கு வழி­பாடு நடத்தி பா.ஜ.க.வுக்கு எதி­ராக வாக்­க­ளிப்­போம் என்று முடிவு செய்­தார்­கள். பல்­வேறு ஊர்­க­ளில் விளக்கு வழி­பாடு நடத்தி வரு­கி­றார்­கள்.

ராஜ்­புத் மக்­கள் குஜ­ராத், ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம், உபி, பீகார், உத்­த­ர­கண்ட், அரி­யானா, டில்லி, பஞ்­சாப், ஜம்மு காஷ்­மீர், இமா­ச­லப்­ பிர­தே­சம், ஜார்க்­கண்ட், மகா­ராஷ்­டிரா ஆகிய பல்­வேறு மாநி­லங்­க­ளில் பரந்து வாழ்­கி­றார்­கள். 

பா.ஜ.க.வுக்கு கடந்த காலத்­தில் கை கொடுத்த மாநி­லங்­கள் இவை. பா.ஜ.க.வுக்கு கடந்த தேர்­தல்­க­ளில் கை கொடுத்த சமூ­கம் இது. இவர்­க­ளது வாக்­கு­கள் முழு­மை­யாக பா.ஜ.க.வுக்கு சரி­யப் போகி­றது.

அடுத்த தவ­றை­யும் செய்­தது பா.ஜ.க. தலைமை. ராஜ்­புத் சமூக அமைப்­பான கர்னி சேனா­வின் தலை­வ­ராக இருப்­ப­வர் ராஜ் ஷெகா­வத். இவர் பா.ஜ.க.விலும் செயல்­பட்டு வந்­தார்.

 ஒன்­றிய அமைச்­சர் புரு­ஷோத்­தமை கைது செய்­யாத நிலை­யில் பா.ஜ.க.வில் இருந்து ராஜ் ஷெகா­வத் வில­கி­னார். உட­ன­டி­யாக அவர் பா.ஜ.க. அர­சால் கைது செய்­யப்­பட்­டார்.

 வன்­மு­றை­யைத் தூண்­டு­வ­தாக அவர் மீது வழக்கு தாக்­கல் செய்­யப்­ ­பட்டது.

 இது­வும், பா.ஜ.க. மீதான கோபம் அதி­க­மா­கக் கார­ணம் ஆகும். இவரை விடு­தலை செய்­யக் கோரி குஜ­ராத் மாநி­லம் முழுக்க போராட்­டம் நடை­பெற்­றது.

அகில பார­திய ராஜ்­புத் சமாஜ் அமைப்­பைச் சேர்ந்த ஜெய்­பால்­சிங் வாலா கூறு­கை­யில்,“இப்­போது இந்த சண்டை ராஜ்­கோட் அல்­லது குஜ­ராத்­தில்மட்­டும் இல்லை. மகா­ராஷ்­டிரா, மத்­தி­யப்­பி­ர­தே­சம், ஜார்க்­கண்ட், உத்­த­ர­கண்ட், ராஜஸ்­தான், உத்­த­ரப்­பி­ர­தே­சம், பீகார் என 14 மாநி­லங்­க­ளி­லும் ராஜ்­புத் சமூ­கத்­தி­ன­ரைக் கூட்­டு­வோம்.

 பா.ஜ.க.விற்கு எதி­ரான போராட்­டம் நாடு முழு­வ­தும் பர­வும்”என அறி­வித்­தார்.

மே 7 ஆம் தேதி ஒரே கட்­ட­மாக குஜ­ராத் மாநி­லத்­தில் 26 தொகு­தி­க­ளுக்­கும் தேர்­தல் நடக்­கப் போகி­றது. சர்­பதா என்ற இடத்­தில் நடந்த பா.ஜ.க. கூட்­டத்­தில் ராஜ்­புத்­து­கள் நுழைந்து போராட்­டம் செய்­தார்­கள். 

உ.பி. மாநி­லத்­தில் நடை­பெற்ற மகா பஞ்­சா­யத்­தில் பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தாமரை சின்­னத்­தில் எக்ஸ் சின்­னம் போட்டு வைத்­தி­ருந்­தார்­கள். 

ராஜ் புத்­து­கள் மட்­டு­மல்ல 36 சமூ­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் எங்­க­ளோடு சேர்ந்து போரா­டு­கி­றார்­கள் என்று கிசான் மஸ்­தூர் சங்­கத் தலை­வர் பூரன் சிங் அறி­வித்­துள்­ளார்.

புதை­ம­ண­லில் பா.ஜ.க.வின் கால்­கள் சிக்­கிக் கொண்டு விட்­டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?