கடைசி ஆயுதம்!

"நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பத்திற்கு தான் தெரியும் தாலி எவ்வளவு முக்கியம் என்று…மனைவியை துரத்தியவருக்குதெரிய வாய்ப்பு இல்லை" -பிரியங்கா காந்தி

டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம், 

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால உத்தரவு.

சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

பதஞ்சலி நிறுவன பொய்விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.

விதிமீறலில் அதானி குழுமம்!  வெளியான மற்றொரு உண்மை!


நண்பனே எனது உயிர் நண்பனே

மோடி ஆட்சிக்கு பின், இந்திய துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், மின் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட எண்ணற்ற அரசு நிறுவனங்கள், அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டது.

இது குறித்து, கேள்வி எழுப்பியதற்காக, முன்னாள் பிரதமர் வேட்பாளர் என்று கூட பாராமல், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை நீக்கி, அரசு இல்லத்தை விட்டு வெளியேற்றினர் பா.ஜ.க.வினர்.

எனினும், இந்த அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு, சட்டப்படி விடை காண்பேன் என ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் சென்று, தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப்பெற்றார்.

ராகுல் காந்தியை தொடர்ந்து, திரிணாமுல் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் அதானி - மோடி தொடர்பு குறித்து கேள்வி எழுப்பியதால், மக்களவை உறுப்பினர் பதவியை பறிகொடுக்க நேர்ந்தது.

இவ்வாறான சூழலில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி அன்று, அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தில் முறைகேடு நடப்பதாக அறிக்கை வெளியிட்டது.

அதன் காரணமாக, பா.ஜ.க அரசின் உதவியால் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்த அதானி சொத்து மதிப்பு, பல மடங்கு வீழ்ச்சியடைந்தது. ஆனால், அப்போதைய நிலையில் அதானி குழுமத்தால், ஹிண்டன்பர்க் அறிக்கை பொய் தகவலை பரப்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

விதிமீறலில் அதானி குழுமம்! : தேர்தல் நேரத்தில் வெளியான மற்றொரு உண்மை!

இந்நிலையில் இது குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

எனினும், SEBI விசாரணையில் தொடர் மந்தம் நீடித்து வந்த நிலையில், தற்போது சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது ஹிண்டன்பர்க் தெரிவித்தது உண்மை தான் என அம்பலப்பட்டுள்ளது.

இது குறித்து, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “அதானியின் 12 வெளிநாட்டு நிறுவனங்கள் விதிகளை மீறியிருப்பதாக SEBI கண்டுபிடித்திருக்கிறது. 12 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள், குற்றச்சாட்டை ஏற்காமல் அபராதம் செலுத்தி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாமென SEBI-யை அணுகியிருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் மையமாக இருந்தது இந்த நிதிகள்தான்” என தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “இனி SEBI என்ன நடவடிக்கை எடுக்கும்? அதானி நிறுவனங்களில் விதிகள் மீறி முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களை அமலாக்கத்துறை விசாரிக்குமா? இந்த முதலீடுகள் செய்வதற்கென மட்டுமே அந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டனவா? அல்லது அந்த நிறுவனங்களை வெறுமனே SEBI எச்சரித்து விட்டு விடுமா? விடைதான் எல்லாருக்கும் தெரியுமே!” என குற்றம் சாட்டினார்.
இவ்வாறு, தேர்தல் நேரத்திலும், அதானியை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசிற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. 

கடைசி

ஆயுதத்தையும் பயன்படுத்தினார் மோடிக்­குள் தூங்­கிக் கொண்­டி­ருந்­த மதவெறி விழித்­து­விட்­டது!

ராஜஸ்­தா­னில் தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது, “காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யில்இருந்­த­போது, நாட்­டின் சொத்­துக்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கே முதல் அதி­கா­ரம் என்று பேசி­னார்­கள். உங்­க­ளி­டம் உள்ள தங்­கம் உள்­ளிட்ட சொத்­துக்­களைபறித்து அதிக குழந்­தை­கள் பெற்­றுக்­கொள்­ப­வர்­க­ளி­டம் கொடுத்து விடு­வார்­கள்.சட்ட விரோ­த­மாக நாட்­டிற்­குள் ஊடு­ரு­வி­ய­வர்­க­ளி­டம் உங்­கள் சொத்­துக்­களை கொடுத்து விடு­வார்­கள். நீங்­கள் கஷ்­டப்­பட்டு உழைத்த பணத்தை அவர்­க­ளி­டம் கொடுக்க வேண்­டுமா? இதை நீங்­கள் ஏற்­பீர்­களா?

இதை செய்­வோம் என்­று­தான் காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­ யி­ருக்­கி­றார்­கள். தாய்­மார்­கள், சகோ­த­ரி­க­ளின் தங்க நகை­களை கணக்­கெடுத்து அவற்றை உங்­க­ளி­ட­மி­ருந்து பறித்து அவர்­க­ளி­டம் கொடுத்­து­வி­டு­வார்­கள். மன்­மோ­கன்­சிங் என்ன சொன்­னார் தெரி­யுமா? நாட்­டின் சொத்­துக்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கே முதல் அதி­கா­ரம் எனக் கூறி­னார். சகோ­தர சகோ­த­ரி­களே இது­தான் நகர்ப்­புற நக்­சல்­க­ளின் சிந்­தனை. என் தாய்­மார்­கள், சகோ­த­ரி­க­ளின் தாலியை பறிக்க யாருக்­கும் அதி­கா­ரம் இல்லை” என்று குறிப்­பிட்­டார்.ஒரு நாட்­டின் பிர­த­மர் பேசும் பேச்சா இது?

அப்­பாவி மக்­க­ளி­டம் போய், ‘உங்­க­ளது வீடு, வாசல், சொத்து, நிலம் அத்­த­னை­யும் பறித்து முஸ்­லீம்­க­ளி­டம் கொடுத்­து­வி­டப் போகி­றார்­கள்’ என்று சொல்­லும் கீழான சிந்­தனை கொண்­ட­வ­ராக, இந்த நாட்­டுக்கு பத்­தாண்டு காலம் ஒரு­வர் பிர­த­ம­ராக இருந்­தி­ருக்­கி­றார் என்று நினைப்­பதே கேவ­ல­மாக இருக்­கி­றது.

அப்­படி காங்­கி­ரஸ் கட்சி தேர்­தல் அறிக்­கை­யில் இருக்­கி­றதா? இல்லை. ‘யாரு­டைய சொத்­தும் பறிக்­கப்­ப­டும்’ என்று காங்­கி­ரஸ் கட்சி தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லப்­ப­ட­வில்லை என அக்­கட்சி அதி­கா­ரப்­பூர்­வ­மாக மறுத்­துள்­ளது. அதன் தலை­வர் கார்­கே­வும் மறுத்­துள்­ளார்.

எப்­போ­தா­வது மன்­மோ­கன் சிங் அவர்­கள் அப்­படி பேசி இருக்­கி­றாரா என்­றால் அது­வும் இல்லை.“பட்­டி­யல் மற்­றும் பழங்­குடி வகுப்­பி­னர், ஓ.பி.சி. பிரி­வி­னர், சிறு­பான்­மை­யி­னர், பெண்­கள், குழந்­தை­கள், குறிப்­பாக, முஸ்­லிம் சிறு­பான்­மை­யி­னர் ஆகி­யோர் நாட்­டின் வளர்ச்­சி­யின் பலன்­க­ளில் சம­மா­கப் பங்­கு­ பெ­றும் வகை­யில், புது­மை­யான திட்­டங்­களை வகுக்க வேண்­டும்.வளங்­கள் மீதான முதல் உரி­மையை அவர்­கள் பெற்­றி­ருக்க வேண்­டும். நாட்­டின் வளங்­க­ளில் ஒன்­றிய அர­சுக்கு எண்­ணற்ற பிற பொறுப்­பு­கள் உள்­ளன. அது நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் சென்று சேர­வேண்­டும்”என்று மன்­மோ­கன் சிங் பிர­த­ம­ராக இருக்­கும் போது பேசி­யுள்­ளார். இந்த நாட்­டின் அனைத்து வளங்­க­ளும் பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யி­ன­ருக்­கும், பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்­கும் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் சம­மாக, முதன்­மை­யாக வழங்க வேண்­டும் - – என்ற பொரு­ளில் மன்­மோ­கன் சிங் பேசி இருக்­கி­றார்.

வளம் என்­றால் கல்வி, வேலை வாய்ப்­பு­கள், அதி­கா­ரம், சலு­கை­கள், திட்­டங்­கள், பொறுப்­பு­கள் ஆகும். இது­தான் நாட்­டின் வளம் ஆகும். இதனை பகிர்ந்து தர வேண்­டும் என்­று­தான் மன்­மோ­கன் சொல்லி இருக்­கி­றார். ராஜஸ்­தா­னில் இருக்­கும் தனிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வர் சொத்­தை­யும் பறித்து இசு­லா­மி­யர்க்கு தரப்­போ­வ­தாக மன்­மோ­கன் சிங் சொல்­ல­வில்லை. மன்­மோ­கன் சிங் என்ன இப்­போது பிர­த­மர் வேட்­பா­ளரா? அவர் எப்­போதோ சொன்­னதை இப்­போது ஏன் எடுத்து வந்து போர்த்­திக் கொள்ள வேண்­டும்?

நாட்­டின் வளம் என்­றால் என்­ன­வென்று தெரி­யா­மல், நாட்­டின் வளம் என்­றால் வீடு – - நிலம் என்று புரிந்து கொள்­ப­வர்­தான் இந்த நாட்­டில் பத்­தாண்டு காலம் பிர­த­ம­ராக இருந்­துள்­ளார்.

இப்­படி பேசிய பிர­த­மர் மோடி, அதி­லா­வது உறு­தி­யாக இருந்­தாரா என்­றால் இல்லை. அவ­ரது பேச்­சு­கள், அவ­ரது அதி­கா­ரப்­பூர்வ இணைய தளத்­தில் பதிவு செய்­யப்­ப­டும். ஆனால் ராஜஸ்­தா­னில் பேசிய இந்த பேச்சு அரை­கு­றை­யாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. ‘இஸ்­லா­மி­யர்­கள்’, ‘ஊடு­ரு­வல்­கா­ரர்­கள்’, ‘அதிக குழந்­தை­களை பெற்­றெ­டுப்­ப­வர்­கள்’ உள்­ளிட்ட வார்த்­தை­கள் மோடி­யின் அதி­கா­ரப்­பூர்வ தளத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இந்த வார்த்­தை­களை அவர் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கான வீடியோ ஆதா­ரம் சமூக வலை­த­ளங்­க­ளில் வேக­மாக பகி­ரப்­பட்டு வரு­கி­றது. ஏன் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அதைச் சொல்ல மோடி­யால் முடி­ய­வில்லை. சொன்­னது பொய்­யென்று அவ­ருக்கே தெரி­யும். அத­னால்­தான் அதை அவரே மறைத்­து­விட்­டார்.

ராஜஸ்­தா­னில் மோடி பேசி­யது கடந்த 20 ஆம் தேதி. 21 ஆம் தேதி உத்­தி­ரப்­பி­ர­தே­சம் போனார். அங்கு இசு­லா­மிய வாக்­கா­ளர்­கள் அதி­கம். ராஜஸ்­தா­னில் தான் பேசி­யது தவறு என்று அவர் நினைத்­தி­ருக்­க­லாம். உடனே அந்­தர் பல்டி அடித்­தார்.

அலி­கா­ரில் நடந்த பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் பேசும் போது, “இஸ்­லா­மியசகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்­கா­கத்­தான், நான் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றேன்.

முன்பு குறை­வான ஹஜ் ஒதுக்­கீட்­டில், லஞ்­சம் கொடுத்து அங்கு செல்ல வேண்­டிய நிலை இருந்­தது. எனது இஸ்­லா­மிய சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்­காக சவுதி இள­வ­ர­சி­யி­டம் நான் பேசி இஸ்­லா­மி­யர்­கள் ஹஜ் பய­ணம் மேற்­கொள்­வ­தற்­கான கோட்­டாவை அதி­க­ரித்­துக் கொடுத்­தேன். விசா­வும் எளி­தாக்­கப்­பட்­டது. ஆண்­கள் துணை­யின்றி பெண்­கள் தனியே ஹஜ் செல்ல முடி­யும் என்­ப­தால், இஸ்­லா­மிய சகோ­த­ரி­கள் ஆசீர்­வா­தம் எனக்கு கிடைத்­தது” என்று குறிப்­பிட்­டார்.ஒரே நாளில் ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் எப்­படி அன்­பா­ன­வர்­க­ளாக மாறி­னார்­கள்?

இது­தான் நிஜ மோடி. எந்­தக் கொள்­கை­யி­லும் உண்­மையோ, உள­மார்ந்த ஈடு­பாடோ இல்­லா­த­வர். தனது சுய­ந­ல­னுக்­காக எதை­யும் அர­வ­ணைப்­பார், காவு கொடுப்­பார். இந்­துக்­க­ளாக பேசும் இவர், இந்த நாட்டு இந்­துக்­க­ளுக்­காக செய்­தது என்ன? அவ­ரது விரல்­விட்டு எண்­ணக் கூடிய இந்து நண்­பர்­களை வளப்­ப­டுத்­தி­னார். இந்த நாடு வளங்­களை அமுக்­கிய விரல்­விட்டு எண்­ணக் கூடிய சிலரை இந்த நாட்டை விட்டு தப்ப விட்­டார். மற்­ற­படி இந்­துக்­க­ளுக்­காக எந்த நன்­மை­யும் செய்­யா­த­வர்­தான் மோடி.

அவ­ரது ஆட்­சி­யில் அதே இந்­துக்­க­ளுக்­கும் – இசு­லா­மி­யர்­க­ளுக்­கும் –அனைத்து மதத்­த­வ­ருக்­கும் - அனைத்து இனத்­த­வர்க்­கும் - அனைத்து மொழி­யி­ன­ருக்­கும் ஒரே வித­மான துன்­பம்­தான். இதற்கு ஒரே வித­மான முடிவு என்­பது, அவரை ஆட்­சி­யில் இருந்து இறக்­கு­வதே! இதனை மக்­கள் உணர்ந்­து­விட்­டார்­கள். மக்­கள் உணர்ந்து விட்­டார்­கள் என்­பதை மோடி­யும் உணர்ந்­து­விட்­டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?