போலி ஆன்மீக(வி)யாதி
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்து சாதி அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பி இறைவன் ஆலயங்களில் சமத்துவத்திற்காக, தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தான். இறைவன் ஆலயங்களில் குறிப்பிட்ட சாதியினர் நுழையக்கூடாது என்பதை எதிர்த்து தொடர் இயக்கம் கண்டவர் தந்தை பெரியார் . தந்தை பெரியாரின் வழியையொட்டி, அதே மரபில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும், சாதிய வர்ணாசிரம சனாதான கட்டமைப்பை எதிர்த்து களமாடி வருகிறார். மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதுதான், அரசியல் சட்ட பணி மட்டுமல்லாது இறைவன் விரும்பும் பணியும் கூட. சமூகத்தை போல் இறைவன் ஆலயங்களிலும் சமத்துவம் தழைத்தோங்க வேண்டும், என்பதே உண்மையாக இறைவன் விரும்பும் ஆன்மீகப் பணி. திருப்பதி லட்டை வைத்து, போலி மதவாத அரசியல் செய்யும் நடிகர் பவன் கல்யாண் ப