இடுகைகள்

இதிலேயும்v ஏழை-வசதியானவர்கள்பாகுபாடு ?

படம்
  மக்களின் உயிரை காவு வாங்கும் வகையில் தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் இந்தியா வில் விநியோகிக்கப்பட்டு வருவதாக வெளி வந்திருக்கும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியளிப்ப தாக இருக்கிறது. 2017 புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் மட்டுமே இருக்கி றார். 90,343 பேருக்கு ஒரு அரசு மருத்துவனை என்ற அடிப்படையில்தான் மருத்துவ வசதி இருக் கிறது. ஆனால் உலக அளவில் மருந்துகள் விற்ப னையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. அப்படி உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 34 சதவிகிதம் தரம் குறைந்தவையாகவும் ஆபத்தை விளை விக்கக் கூடியதாவும் இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் செய்த சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதம மந்திரி பாரதிய ஜனாயுஷாதி பரியோ ஜனா என்கிற பெயரில் மத்திய அரசு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் வகையில் மருந்தகங்களை ஏற்படுத்தி பாஜக ஆதரவாளர்க ளின் கைகளில் கொடுத்திருக்கிறது. அந்த மருந்த கங்களில் விற்கப்படும் மருந்துகளை பரிசோதனை ...

வெற்றிகரமான அசிங்கம்..

படம்
  ‘பயங்கரவாத ஒழிப்பு புகழ்’ ‘ப யங்கரவாத நிதியுதவி’ தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்துவரும் நிறுவனத்திடமிருந்து ‘பயங்கரவாத ஒழிப்பு புகழ்’ பாஜக, பெரிய அளவிலான நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவரும் மாஃபியா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியுமான இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சியிடமிருந்து சொத்துக்களை வாங்கியது தொடர்பாக ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிட். நிறுவனத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிறுவனம் பாஜகவுக்கு நிதியளித்திருப்பதாக, அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தகவலில் தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலையில் இருக்கும் திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர். கே. டபிஸ்யூ, 2014 – 15 ஆண்டில் பாஜக -வுக்கு ரூ. 10 கோடி நிதியளித்துள்ளது. இந்த விசயத்தை கோப்ரா போஸ்டு, கடந்த ஜனவரி 2019-ல் வெளியே கொண்டுவந்தது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டுகிற பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து பாஜக தொடர்ந்து பெரிய அளவிலான நிதியை ...

‘ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு ஆளுநர்

படம்
 தேவையில்லை பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு வகையில் ஆட்சியை பிடிப்பது. இல்லையெனில் ஆளுநர்களை வைத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற குற்றச்சாட்டுகளை பாஜக மீது அரசியல் விமர்சகர்கள் வைத்தாலும், கடைசி நிமிடம் வரை அமைதியாக இருப்பது போல தெரிந்த பாஜக, மகாராஷ்டிரத்திலும் தனது காவிக் கொடியை பறக்கவிட்டுள்ளது.  அதில் ஆளுநரின் பங்கு முக்கியமானது.   அரசியல் களத்தில் ஆறாவது விரல் போல ஆளுநர் பதவி நீடித்துக் கொண்டிருப்பது ஆங்கிலேய ஆட்சியின் சீதனமாகும் ”பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டவாறு, ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்ற வகையில் விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆங்கிலேயர்கள் மாநில அரசுகளை கண்காணிக்கும் கண்காணிகளாக ஆளுநர்களை நியமித்தனர். நாட்டின் விடுதலைக்கு பின் வைஸ்ராய் பதவி தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் பதவியாக மாற்றப்பட்டது. ஓய்வு காலங்களில் மத்தியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுநர்களை நியமித்தனர்.  “தமிழகத்தில் இதுவரை பதவியில் இருந்த ஆள...