ஒட்டுக் கேட்க ஒரு சட்டம்?


 Vodafone 50,000 கோடி இழப்பு..!

2  - Airtel 23,000 கோடி இழப்பு..!

3  - BSNL  14,000 கோடி இழப்பு..!

4  - MTNL 755 கோடி இழப்பு..!

5  - BPCL 750 கோடி இழப்பு..!

6  - SAIL  286 கோடி இழப்பு..!

7  - AIR INDIA  4600 கோடி இழப்பு..!

8  - Spice Jet  463 கோடி இழப்பு..!

9  - Indigo 1062 கோடி இழப்பு..!

10 - BHEL 219 கோடி இழப்பு..!

11 - India Post 15,000 கோடி இழப்பு..!

12 - GMR Infra 561 கோடி இழப்பு..!

13 - YES Bank 600 கோடி இழப்பு..!

14 - Union Bank  1190 கோடி இழப்பு..!

15 - PNB  Bank  4750 கோடி இழப்பு..!

16 - Axis Bank 112 கோடி இழப்பு..!

17 - Jet Airways மூடப்பட்டது..!

18 - BSNL 54,000 அதிக வேலைகளை குறைக்கலாம்..!

19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை..! 

20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது..!

21 - 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்..! 

22 - Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது..! 

23 - JP Group கதை முடிந்தது..!

24 - ONGC –மிகவும் இலாபகரமான நிறுவனம் இப்போது நஷ்டத்தில் செயல்படுகிறது..!

25 - நாட்டிலிருந்து 36 பெரிய கடனாளிகளைக் காணவில்லை..! 

26 - ரூ .2.4 லட்சம் கோடி கடன் தள்ளுபடி -ஒரு சில நிறுவனங்களுக்கு..!

27 - அனைத்து வங்கிகளும் பெரும் இழப்பை சந்திக்கின்றன..!

28 - நாட்டின் வெளிநாட்டு கடன் 500+ பில்லியன் டாலர்கள்..! 

29 - ரயில்வே துறைகளும் விற்பனைக்கு உள்ளது..!

30 - பாரம்பரியங்கள் செங்கோட்டை உள்பட வாடகைக்கு விட இருக்கிறார்கள்..! 

31 - மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் மாருதி உற்பத்தியைக் குறைக்கிறது..!

32 - ரூ. 55000 கோடி கார் தொழிற்சாலைகளில் கிடக்கிறது வாங்க ஆள் இல்லை..! 

33 - கட்டடம் கட்டுபவர்கள் பலர் மன உளைச்சலில் இருக்கிறார்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..! 

வாங்குபவர்கள் இல்லை கட்டுமான பொருட்கள் செலவு உயர்வு (ஜிஎஸ்டி 18% முதல் 28% வரை ) காரணமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது..!

34 - OFB நிறுவனமயமாக்கலின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிப்பு..!

35 - பணமதிப்பிழப்பு காரணமாக மில்லியன் கணக்கான வேலையற்றோர்..! 

36 - 45 ஆண்டுகளில் அதிக வேலையின்மை..! 

37 - அதானிக்கு 5 விமான நிலையங்கள் விற்கப்பட்டன..!

38 - அதிகபட்ச உள்நாட்டு தேக்கம்..!

39 - HNI நபர்கள் இந்தியாவை விட்டு அதிகமாக வெளியேறுகிறார்கள்..!

40 - Videocon திவாலானது..!

41 - CCD நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா பெரும் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்..!

42 - பார்லே-ஜி போன்ற புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனங்கள் அதன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் விளிம்பில் உள்ளன..!

43 - பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன..! 

44. 30 சதவீத இந்தியர்கள் இரத்தஅழுத்தம் இருதயநோயாளிகள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது . 

45. பெண்கள் வாழத்தகுதி இல்லாத நாடு இந்தியா என்கிறது உலக மனித உரிமை கழகம் . 

46. அதிகமான வறுமையில் வாழ்வோர் தேசம் இந்தியா என்கிறது ஆய்வுகள் .

47. நீதித்துறை கவர்னர் பதவிக்கு தீர்ப்பு எழுதும் தேசம் இந்தியா .

48. மருத்துவம் திருட்டு தொழிலாக செயல்படும் தேசம் இந்தியா .

49. ஊடக சுதந்திரம் இல்லாத தேசம் இந்தியா 

வளர்ச்சி என்று வாய்கிழியப்   பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது வைத்துள்ள கடன் 150 லட்சம் கோடி ரூபாய்.........

தனது வீட்டுக்கே ஆள் வைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் கைது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.6 பேர் உயிரிழப்பு.

'2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பணபரிமாற்றம் நடந்துள்ளது';-ரிசர்வ் வங்கி.

45.59 நிமிடத்தில் 108 சூரிய வணக்கம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தார் 81வயது மூதாட்டி சரஸ்வதி.

தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சென்று பயணம் மேற்கொள்ள  CMBT நிர்வாகம் அறிவுறுத்தல்.


ஒட்டுக் கேட்க ஒரு சட்டம்?

ன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஒரு சட்டம், மொபைல் போன் நெட்வொர்க்கை கையகப்படுத்தும் திட்டமாக அமைந்துள்ளது. 

இதன்மூலம் தனி நபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்துக் கொள்ள முடியும். 

‘மொபைல் போன் நெட்வொர்க்கை அரசு கையகப்படுத்தலாம்’ என்றே பல செய்தி நிறுவனங்கள் தலைப்பிட்டுள்ளன.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அவசரச் சூழல் போன்ற காரணங்களுக்காக, ‘மொபைல்போன் நெட்வொர்க்’ உட்பட தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை, ஒன்றிய அரசு தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொள்ளும் வகையில், புதிய தொலைத்தொடர்பு மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

.இந்திய தந்தி சட்டம், இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் போன்ற பழைய சட்டங்களுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பக் காலத்துக்கேற்ப, தொலைத் தொடர்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 138 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த தொலைத் தொடர்புச் சட்டத்தினைத் திருத்த முயற்சிக்கிறது பா.ஜ.க. அரசின் சட்டம். தொலைத் தொடர்புத் துறையில், ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்துவதாக இருப்பின், ஒன்றிய அரசு அக் குறிப்பிட்ட ஊடகத்தை முடக்கலாம் என்ற பிரிவையும் இதில் இணைத்திருக்கிறது. 

இது முழுக்க முழுக்க ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புகைக் குண்டுவீச்சு விவகாரம் தொடர்பான அமளிக்கு இடையே இந்த மசோதாவை, ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர நிலை, பேரிடர் நிர்வாகம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, மொபைல் போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை, ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு அல்லது அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள் கையகப்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலாக உள்ள தகவல் பரிமாற்றங்களைத் தடுத்து நிறுத்துவது, தொலைத் தொடர்புச் சேவையைத் துண்டிப்பது போன்ற அதிகாரமும் அரசுக்கு வழங்கப்படுகிறது. 

இதன்படி, தனிநபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்றிய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அனுப்பும் செய்திகளில் அரசுகள் தலையிடாது. 

அதே நேரத்தில் தேசியப் பாதுகாப்பை மீறுவதாக இருந்தால் மட்டும் அதில் அரசுகள் குறுக்கிட முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் சட்டவிரோதமாக தொலைபேசியை ஒட்டுக்கேட்போருக்கு மூன்று ஆண்டுகள்

2 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்தப் புதிய சட்டத்தின்படி, தொலைத் தொடர்பு தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் அமைப்பும், ஆணையமும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்த மசோதா நிதி மசோதாவாகக் கொண்டு வரப்பட்டதாலும், இதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்பதாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மசோதாவில் தன்மறைப்பு ( தனிமனித பிரைவசி) சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவும், எனவே, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இதனை அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இரண்டு நபர்களுக்கு இடையே பகிரப்படும் செய்திகளை, தேவைப்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனம் அரசுக்கு வழங்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது மற்றும் பொதுக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசால் கண்காணிக்கப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், உளவுபார்க்கும் கருவிகளே இல்லாமல் இந்தச் சட்டத்தின் துணைக்கொண்டு ஒன்றிய அரசால் ஒருவரை ஒட்டுக்கேட்க முடியும்; 

இதற்கு மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்றும் கூறப்பட்டாலும், தொலைத்தொடர்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதன் முழுமையான கட்டுப்பாடு ஒன்றிய அரசுக்குச் செல்கிறது.

தொலைத் தொடர்பு ஊடகங்களின் உரிமங்கள் தொடர்பான புது வரையறையும், இம்மசோதா முன்மொழிகிறது. இதன் மூலம், தொலைத் தொடர்புச் சேவைகள், கருவிகள், உள்கட்டமைப்பு, வலைப்பின்னல் போன்ற அனைத்தும் ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. 

இதன் மூலம் கருத்துரிமை முழுவதுமாகப் பறிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய செய்திகளை, பல்வேறு பகுதிகளிலிருந்தும், பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் சேகரித்து உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்தைக் கட்டுப்படுத்த நினைப்பது, நாட்டின் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இந்த மசோதா மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குறியாக்கப் பார்க்கிறது.

இந்த மசோதா மிகமிகக் கடுமையானது; இணையத்தை முடக்குவது ஆகும். வாட்ஸ்அப், டெலிகிராம், இமெயில் ஆகிய சேவைகளை இது குறிவைக்கிறது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நலன் கருதி என்று ஒன்றிய அரசுக்கு வழங்கும் அதிகாரங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவை ஆகும். இஸ்ரேலிய நிறுவனம் செய்த பெகாசஸ் நடவடிக்கைகள், இனி சட்டபூர்வமானவை ஆகலாம். ‘நாட்டுக்கு ஆபத்தானவர்கள்’ என்று யாருடைய போனையும் இடை மறித்துக் கேட்கலாம்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசஸ் மென் பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. 

இந்தச் செய்தியை ‘தி கார்டியன்’ இதழ் வெளியிட்டுள்ளது. ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழும் வெளியிட்டுள்ளது. 

இது இந்திய நாடாளுமன்றத்தை அதிர வைத்தது. இறுதியாக பிரச்சினையே கிடப்பில் போடப்பட்டது.

மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்டது போன்ற இணைய முடக்கத்தை இனி எந்த மாநிலத்தில் செய்தாலும் அதனை சட்டபூர்வமாகச் செய்யலாம்.

-----------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?