இடுகைகள்

மிஞ்சியது என்ன?

படம்
எல்லோருக்கும் லிவிங்ஸ்டன் நடித்த திரைப்பட நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வரும். படையப்பா ஸ்டைலில் மவுத்தார்கான் வாசிக்க, ஒரு புற்றிலிருந்து அவர் ஏற்பாடு செய்த பாம்பு வெளிவர, இன்னொரு புற்றிலிருந்து மற்றொரு பாம்பு தலையைத் தூக்கி படமெடுக்கும். மோடியின் நிலைமையும் அப்படி ஆகிவிட்டது. பணமதிப்பு நீக்க புற்றிலிருந்து அவர் எதிர்பாராமல் பல பாம்புகள் படமெடுக்கின்றன. பணமதிப்பு நீக்கத்தால் உள்ளே வந்து சேர்ந்த செல்லாத நோட்டுக்களையெல்லாம் ரிசர்வ் வங்கி எண்ணி முடித்த போது கறுப்புப்பணமும் பிடிபடவில்லை, கள்ளப்பணமும் பிடிபடவில்லையென படமெடுத்த பாம்புகள்... மோடி பக்த கோடிகளின் ஆட்சி நடைபெறுகிற தமிழகத்திலேயே சட்டமன்றத்தில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் 50000 சிறு தொழிலகங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வீதியிலே நின்றார்கள் என்று அமைச்சரொருவர் அறிவித்தபோது படமெடுத்த பாம்பு... இது நாதர்முடி நல்ல பாம்பு மோடியின் கோட்டைக்குள் இருந்தேபடமெடுத்துள்ள பாம்பு இது. ஆம்! மத்தியவிவசாய அமைச்சகம், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அளித்துள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்கம் விவசாயிகளைக...

கஜாவும் பாஜவும் ..,

படம்
கஜா புயல் பேரழிவில் தமிழக மக்கள் வருந்திக்கொண்டிருக்கையில் பாஜகவோ தனது கேவல அரசியல் நாடகத்தை நடத்தியுள்ளது. சபரி மலை விவகாரத்தில் கேரளா அரசு நீதி  மன்றத் தீர்ப்பின்படி நடக்கையில் அதில்  மதவெறி அரசியல் செய்கிறது பாஜக . கஜா புயல் கவலையில் மக்கள் இருக்கையில் பாஜகவின் இந்த அசிங்க அரசியல் தமிழ் நாட்டில் குட்டையில் கூட தாமரை மலர விடாமல்தான் ஆக்கும். மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் அவமதித்துவிட்டதாகக்கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் வன்முறை தாண்டவத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்கள் அழைப்பு விடுத்த முழுஅடைப்புப் போராட்டத்தை மக்கள் புறக்கணித்த நிலையில், தங்களது வழக்கமான பாணியில் பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.  பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். பாஜகவினருக்கு தமிழக மக்களின் மீது கொஞ்சம் கூட அக்கறையில்லை என்பதையே இது காட்டுகிறது.   பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு சென்றதே கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தீய நோக்கம்தான். இவர் சபரிமலைக்க...

ஆட்சியில் ஊழல் நடக்கலாம் ஆனால்,

படம்
  ஆட்சியே ஊழல் நடத்துவது புதியது! மத்தியில் இருக்கும் பாஜக அரசு, தானே முன்னின்று ஊழல்களை செய்யும் அரசாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அதனொரு பகுதியாக இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருஆட்சியில் ஊழல் நடக்கலாம்தான்; ஆனால்,ஆட்சியே ஊழலை நடத்தக் கூடாது; மத்தியில் நடக்கும் மோடி ஆட்சியோ தானேமுன்னின்று ஊழலை நடத்திக் கொண்டிருக்கிறது; அதில் ரபேல் ஊழல் முதன்மையானதாக உள்ளது” என்று தாக்கியுள்ளார். ஊழலைக் கண்டுபிடிக்க வேண்டிய அரசு அமைப்பின் (சிபிஐ) முதலாம் மற்றும்இரண்டாம் அதிகாரிகள் ஊழலில் தொடர் புள்ளவர்கள் என்று கூறப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.ரிசர்வ் வங்கி உடனான மோடி அரசின்மோதல் போக்கு தவறானது என்றும்,மோடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளும் தவறாகவே முடிந்துள்ளதாக குறிப் பிட்டுள்ள மன்மோகன் சிங், அதில், “மோடிஅரசின் பணமதிப்பு நீக்கம் மிக முக்கி...

பேரிடர்களில் உதவாத ஆண்டாள் ஆர்மி!

படம்
மூடப்படும்  1,13,000 ஏடிஎம்கள் இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 2,38,000 ஏடிஎம்கள் உள்ளன. அதில், போதுமான செயல்பாடுகள் இல்லாத 1,13,000 ஏடிஎம்கள் மூடப்பட உள்ளன. இவற்றில் 1,00,000 ஏடிஎம்கள் வங்கி கிளை இல்லாத இடங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ளவை.  மேலும், 15,000 ஏடிஎம்கள் வங்கி அல்லாத வேறு நிறுவனங்களால் நடத்தப்படுபவை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஏடிஎம்கள் மூடப்படுவதன் மூலம், பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா திட்டத்தின் மூலம் ஏடிஎம்களில் மானியத்தை எடுத்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மக்கள் கூட்டமாக ஏடிஎம்களில் நின்றது போல, தற்போது ஏடிஎம்கள் மூடப்படுவதன் மூலம் மீண்டும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏடிஎம் தொடர்பான தொழிலில் பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும் என்றும் ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ======================================================================================= “ ஊழல் கரையான் யார்? “ஊழல் கரையான்களை ஒழிப்பதற்காகவே கசப்பு மருந்த...