இடுகைகள்

4 வது அலை இல்லை.

படம்
  கொரோனா பரவலின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை ஏற்பட்டும் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் தேவைப்பட்டால் கூட்டம் ஏதும் இல்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி அண்மை நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே பதிவாகி வந்தது.  இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,451 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது.  இப்படி இருக்கையில் பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அம்மாநில அரசு. அதேபோல, டெல்லிக்கு செல்வோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் கூறப்படுகிறது.  ஏனெனில், முன்பு வந்த மூன்று அலைகளும் டெல்லியில் இருந்துதான் பெரும்பாலும் தொடங்கியது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா மூன்றாவது அலைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், அதனை சமாளிக்க தேவையான முன்னெ...

இந்தியா மோடியால்

படம்
சுப்பிரமணியம் சுவாமி, தன்னை அறியாமல் சில நேரங்களில் சரியாகப் பேசிவிடுவார். அதிலும் குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான அவரது கருத்துக்கள் கவனிக்கத்தக்கதாக இருக்கும். பா.ஜ.க.வில் இருந்து கொண்டே பா.ஜ.க.வின் பொருளாதாரத்தை மிகச் சரியாக விமர்சிப்பதில் அவர் தயக்கம் காட்டுவது இல்லை.  எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு எப்படி அவர்கள் பதில் சொல்ல மறப்பார்களோ, அதைப் போலவே சுவாமி கருத்துக்கும் பா.ஜ.க. அதிகாரப் பூர்வமாகப் பதில் சொல்வது இல்லை. "பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் தோற்றுப்போய் விட்டார் மோடி. பொருளாதார வளர்ச்சியை மோடியால் ஏற்படுத்த முடியவில்லை!"  என்று சுவாமி சொல்லி இருந்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி, "கடந்த 8 ஆண்டுகளில் பிரதமராக, பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டார். மறு பக்கம் 2016-ஆம் ஆண்டிலிருந்தே வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது.  தேசிய பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் பலவீனமடைந்துள்ளது. சீனா குறித்து மோடிக்கு எந்தத் தெளிவும் இல்லை. மீண்டு வர வழிகள் உள்ளன. ஆனால் மோடிக்...

இந்தியா ஒளிர்கிறது.

படம்
  தமிழ்நாட்டில் நேற்று முதல்நாள் 2-3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக சங்கிகளும்,அஇஅதிமுக,வினரும் கடுமையாக சமூக வலைதளங்களில் எழுதினர். முந்தைய திமுக ஆட்சி போல் தமிழ்நாடே இருளில் மூழ்கிவிட்டதாகவும். விடியல் அரசு இருளையும் கொண்டு வந்து விட்டதாகவும்,அணில்கள் தமிழ்நாடு முழுக்க மின்வெட்டைக் கொண்டு வந்து விட்டதாகவும் பொரிந்தனர். ஒரு சில இடங்களில் மட்டும் சென்னையிலும், கரூரிலும் 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.  ஆனால் ஒப்பீட்டளவில் நேற்று முதல்நாளை விட நேற்று மின் வெட்டு மிகவும் குறைவாகவே இருந்தது.  இந்த மின் வெட்டே ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வராததே காரணம் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்பின் சங்கிகளும்,அதிமுகவினரும் முகத்தை மறைத்துக்கொண்டனர்.  இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாள...

இந்தியா உயர்வது விலைவாசியில் மட்டும்.

படம்
  மொத்த விலைவாசி குறியீடு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2021 மார்ச் மாதம் மொத்த விலைக் குறியீடு 7.89 சதவிகிதமாக இருந்தது.  இந்தாண்டு மார்ச் மாதம் 14.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.  இதன் விளைவு அத்தியாவ சியப் பொருட்களின் விலை பன்மடங்கு கூடியி ருக்கிறது. இது மேலும்  மக்களின்  மீது தாங்க முடி யாதளவு சுமையை ஏற்றியிருக்கிறது. இது ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையின் படுதோல்வியாகும்.  உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட் கள், உற்பத்திப் பொருட்கள், இடை நிலைப் பொருட் கள் உள்ளிட்ட சுமார் 5500 பொருட்களின் மொத்த விலைகளிலிருந்து  இந்த குறியீடு கணக்கிடப்படு கிறது. மொத்த விலைக் குறியீட்டு உயர்வால் ,  நுகர்வோர் விலைக் குறியீடும் உயரும். அதன் மூலம் பணவீக்கமும் உயர்கிறது.  உதாரணமாக இதுவரை ரூ.100க்கு வாங்கிய பொருட்கள், இனி ரூ.120 கொடுத்தால்தான் கிடைக்கும்.  ஆனால் தொழிலாளர்களின் கூலியோ, பணியாளர்களின்  ஊதியமோ உயராது.  அப்போது மக்கள் அதே 100 ரூபாய்க்கு  வாங்கும் பொருளின் அளவை குறைத்து வாங்குவார்கள். அதாவது பொதுமக்களின்  வாங்கும் சக்தி ...

காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

படம்
  இரண்டு முறை சென்ற ஜிஎஸ்டி சம்மன். மோடியை இளையராஜா புகழ்ந்த பின்னணி! இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு மோடி பற்றிய ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியின் பல திட்டங்களை குறிப்பிட்டுப் பாராட்டிய இளையராஜா இன்றைய பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த ஒப்பீட்டுக்கு சமூக தளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. கண்டித்தவர்களில் பலரும், "இளையராஜாவுக்கு பாஜக அரசிடமிருந்து என்ன நெருக்கடியோ... இப்படி பாராட்டியிருக்கிறார்" என்றும் கருத்து வெளியிட்டனர். அவர்களின் கணிப்பை போலவே இளையராஜாவுக்கு ஒன்றிய அரசிடமிருந்து கடுமையான நெருக்கடி ஒன்று கடந்த சில மாதங்களில் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து மின்னம்பலத்துக்கு கிடைத்த தகவல், மோடி பற்றிய இளையராஜாவின் மிக பெரிய புகழ்ச்சிக்கு பின்னணி இதுவாக இருக்குமோ என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது. அப்படி என்ன பின்னணி? பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி பு...

உலகநாயகன்

படம்
  பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2 என இந்திய அளவில் தெலுங்கு, கன்னடப் படங்கள் கலக்குகின்றன.  அப்படியே தமிழுக்கு வந்தால் மகான், மாறன், வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என தமிழக எல்லைக்குள்ளேயே தமிழ் படங்கள் தடுமாறுகின்றன.  கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கீறி வைகுண்டம் போன கதையாக தமிழ் சினிமாவின் நிலை பரிதாபமாக உள்ளது. 2 / 14 அதற்காக மனம் தளர வேண்டியதில்லை. தமிழ்ப் படங்கள் ஒருகாலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.  ஷங்கரின் எந்திரன் (ரோபோ), 2.0 படங்கள் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் தான். அதற்கு முன்பு கமலின் இந்தியன் வசூல் சாதனை படைத்தது.  ஆனால், இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு, 1989-ல் இதே ஏப்ரல் மாதத்தில் வெளியான கமல் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 100 நாள்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைப் படைத்தது என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், உண்மை. அந்தப் படம் கமல் மூன்று வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரபுரியும். நேர்மையான போலீஸ் அதிகாரியை நான்கு கயவர்கள் கொ...

பகுத்தறிவு

படம்
  பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியதை பல லட்சம் மக்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.  திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமி விழாவில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்திருக்கிறார்கள். திருஉத்தரகோச மங்கை கோயில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்துள்ளது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கெடுத்தார்கள். மங்கலதேவி கண்ணகி கோவில் முழு நிலவு விழாவுக்காக தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமல்ல, கேரள மக்களும் வந்திருந்தார்கள்.  இவை அனைத்தும் ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆன்மிகப் பெருவிழாக்கள். எங்கும் எந்த அசம்பாவித சம்பவமும் இல்லை.  லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் சில நேரங்களில் தேவையற்ற குழப்பம் கூட ஏற்படும். அதனை தவிர்க்க முடியாது.  அந்த சிறு குழப்பம் கூட இல்லாமல் நடந்து முடிந்துள்ளது விழாக்கள். அதுவும் கள்ளழகர் வருகையின் போது பர்தா அணிந்த ஒரு இசுலாமியப் பெண், கூட்டத்தினுள் முந்தியடித்து வந்து, வணங்கியது மட்டுமல்லாமல் - மாலையைக் கேட்டு வாங்கி தன்னோடு வந்த ஒருவருக்கு அணிவிக்கச் சொன்னார். அர்ச்சகரும் மாலையை அண...