இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவிப்பில்லா அவசரநிலை!

படம்
  அறிவிப்பில்லா அவசரநிலை! அவசர நிலைக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதை நினைவு கூர்கிறார் மோடி. அதாவது காங்கிரசு கட்சிக்கு எதிராகப் பேசுவதற்காக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் எடுத்துக் காட்டுவது அவருக்கு எரிச்சலைத் தருகிறது. அதனால் பழைய வரலாற்றைச் சொல்லி காங்கிரசைக் கேள்வி கேட்கிறாராம் மோடி. “எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை நேசிப்பதற்காகச் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. எமர்ஜென்சியைக் கொண்டு வந்த மனநிலை, அதே கட்சியினரிடம் இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது. தேசத்தை சிறையாக மாற்றியவர்கள் அவர்கள்” என்று சொல்லி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார் பிரதமர். எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்கு வருத்தம் தெரிவித்து, 1979 செப்டம்பர் 30 சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஆகியவை இணைத்து நடைபெற விழாவில் முன்னாள் பிரத

கொடநாடும் வெளிநாடும்

படம்
கொடநாடும் வெளிநாடும் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய துறைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: "நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு40 என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன், இந்தப் பேரவைக்கு நாங்கள் வந்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்?  என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். அதனால் தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்று விட்டார்கள்.  இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித் திட்டம் தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 19ம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய

நாடாளுமன்ற சம்பளம்

படம்
  நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர்,  துணை முதல்வர் கைது: சிபிஐ விசாரணை. தருமபுரி அருகே பிரசித்தி பெற்ற பிலியனுர் முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை . ''விவாதத்தை தலைமையேற்று நடத்த வேண்டிய பிரதமர் விவாதிக்க விரும்பவில்லை'' - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி . கைவிட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. எம்.பி. சம்பளம்? எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தைத் தவிர தினசரி படி, அலுவலக வசதிகள், பயணச் செலவுகள், தங்குமிடம் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள எம்.பி.களில் புதுமுகம், அனுபவம் வாய்ந்தவர்கள் எனப் பலர் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்.பிக்களின் அனுபவத்திற்கு ஏற்ப வீடு, ஓய்வூதியம் ஆகிய சலுகைகளை அரசு வழங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதியி

பட்ஜெட்டுக்கு முன்னர்

படம்
  ஒன்றிய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களும், துறைவாரியான சம்மேளனங்களும் கூட்டாக ஒன்றிய நிதி அமைச்ச ருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளன.  அதன் விவரம் வருமாறு:  “நாட்டின் அரசமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத் தின்மீது நம்பிக்கைகொண்டு, நாட்டின்செல்வத்தைஉருவாக்குபவர்களாகிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் பட்ஜெட்டுக்கு முன் நடை பெற்றுவந்த கலந்தாலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்  மாநாட்டை கூட்டவில்லை எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது கடந்த பத்தாண்டுகளில் முத்தரப்பு அமைப்பான ஐஎல்சி எனப்படும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டை (ILC-Indian Labour Conference) கூட்ட வில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் கூட்டப்பட்ட ஒரே ஐஎல்சி மாநாடு என்பது முந்தையமாநாடுகளில்பரிந்துரைக்கப்பட்டவற்றை அமல் படுத்த வேண்டும் என்பதற்காகவே கூட்டப்பட்டதா கும்.  எனினும் அவை கேளாச் செவியினரிடம் கூறியவை போன்றே ஆயிற்று. அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. அபராதத் தொகை  விகிதம் குறைப்பு நாங

மோடி திறந்தால் பகீர்?

படம்
  விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு. கர்நாடகாவில் குன்டேனகள்ளி கோவிலுக்குச்சென்று திரும்பிய வேன் கோர விபத்து: 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி. கனமழை பெய்துவரும் நிலையில் டெல்லியில் மோடி இரு மாதங்களுக்கு முன் திறந்த விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.ஒருவர் பலி.நான்குபேர் படுகாயமடைந்தனர். டீபோட்டுத்தராததால்ஆத்திரம்:ஐதரபாத்தில்  மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் - ட்ரம்ப்நேரடிவிவாதம்தொடங்கியது! குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு தயாரித்த பொய்கள் நிரம்பிய உரை:- எதிர்கட்சிகள் . மோடி திறந்தால் பத்திரம்? அடல் சேது பாலம், ராமர் கோயில் வரிசையில் தற்போது டெல்லி விமான நிலையமும் இணைந்திருக்கிறது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருந்தது. இதனை வழமைபோல் (கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி) மோடி திறந்து வைத்திருந்தார். இப்படி இருக்கையில் தற்போது இதன் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. மோடி தொடங்கி வைத்த பல திட்ட பணிகள் இதேபோல சேதமடைந்திருக்கின்றன என எதிர்க்கட