மிக மோசமான முறைகேடுகள்!

 

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கின் முக்கிய குற்றவாளியான மாதேஷே காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல்

“Omeprazole மற்றும் Fomepizole என இரு மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் MLA பதவியை இபிஎஸ் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கிறோம்”-விஷச் சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு:-இந்திய வானிலை ஆய்வு மையம்.
பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாஸ்க் அணிவித்த மர்மநபர்கள்: நடவடிக்கை எடுக்க  கோரிக்கை.
திருவாரூர்:வீடு கட்டும்போது 5 கிலோ எடையுள்ள12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் சிலை கண்டெடுப்பு.


மிக மோசமான  ஊழல் முறைகேடுகள்!

மத்தியத்துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல் களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி  அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களே தங்களுக்கான பிரத்யேக நடைமுறைகள் மூலம் மாண வர் சேர்க்கையை நடத்திக் கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் மிக  மோசமான விதத்தில் ஊழல்கள் நடை பெற்றுள்ளதை அறியும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மிகுந்த வேத னையை அடைந்துள்ளது. நீட்-இளங்க லை (NEET-UG) தேர்வாக இருந்தாலும் சரி, பல்கலைக் கழக ஆணையத்தின் ‘நெட்’ (UGC-NET) தேர்வாக இருந்தாலும் சரி, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள நீட்-முதுகலை (NEET-PG) தேர்வாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ஊழல் கள் நடைபெற்றுள்ளது வெளிச்சத் திற்கு வந்ததன் காரணமாக அனைத்தும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டி ருக்கின்றன. 

இவற்றில் நடைபெற்றுள்ள ஒழுங்கீனங் களின் விளைவாக நாட்டின் உயர்கல்வித் துறையின் கேந்திரமான துறைகளின் செயல்முறைகள் கடுமையாக பாதிப்பு க்கு உள்ளாகி இருக்கின்றன.

 கல்வி வணிகமயமாக்கல்!

இவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று முதல்நோக்கிலேயே நிறுவப் பட்டிருப்பது மட்டுமல்ல, கல்வித்துறை யில் மத்தியமயமாக்கல், வணிகமய மாக்கல் மற்றும் வகுப்புவாதமயமாக்கல் ஆகியவை தான் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியமான மூலக் கூறுமாக உள்ளன.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசாங்கம் இந்த ஊழல்கள் குறித்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என்று அதற்குக் கட்டளையிட்டிருப்பது, ‘வியாபம்’ ஊழலை மூடி மறைத் ததைப்போல இதனையும் மூடிமறைப்ப தற்கான அணுகுமுறையே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை உயர்கல்வியின் கொள்கைகளில் ஒன்றிய அரசாங்கம் முற்றிலுமாக சரிவை சந்தித்தி ருக்கிறது என்பதன் பிரதிபலிப்பேயாகும். 

ஒன்றிய கல்வியமைச்சர் விலக வேண்டும்

இதற்கு இந்த அரசாங்கம் முழுமை யாக, குறிப்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அவர் ராஜினாமா செய்திட வேண்டும்.

மிகவும் பெரிய அளவிலும் பன்மைத் தன்மைகள் நிறைந்தும் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் உயர்கல்வித்துறை யை மத்தியத்துவம் செய்தியிருப்பதை மீண்டும் மாற்றியமைத்திட வேண்டும். 

இந்தியா போன்ற பெரிய மற்றும்  பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் உயர்கல்வி நிர்வாகத்தை மையப் படுத்துவதை மாற்றியமைக்க வேண்டும். முதல் படியாக மையப்படுத்தப்பட்ட நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற்கல்வி (professional) நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை யை ஒழுங்குபடுத்துவதற்கும் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கும் அவற்றின் சொந்த நடைமுறைகளை அனுமதிக்க வேண்டும்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக