இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிலச்சரிவும்,நிவாரணப் பணிகளும்!

படம்
  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 163 ஆக அ

நிதி அறிவற்ற அரசு

படம்
  அதானி, அம்பானி களுக்கு வரிச்சலுகை கள், பல‌ இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி என பாஜக அரசு வாரி வழங்கி வருவது நாட்டின் வருமானத்தில் பெரும் இழப்பை உருவாக்கி  யுள்ளது.  பாஜக ஆட்சியில் நிதித்துறையில், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில், பங்குச் சந்தையில்  நடை பெற்று வரும் மோசடிகளைத் தடுப்பதற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படவில்லை.  நிதி அமைச்சர் எல்லாவற்றையும் மறைத்தாலும் வரி வருவாய், கடன்அளவு, வட்டி செலுத்தும் நிலை மற்றும் செலவுகளை மறைக்க முடியாது அல்லவா! நிதி அமைச்சர் கிண்டிய அல்வா எப்படி உள்ளது என்பதை நிதிநிலை அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள ஒத்த ரூபாய் பட விளக்கம் சரிந்து வரும் நிதி நிலையை அம்பலப்படுத்தியுள்ளதே! ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் வரும் வருவாய் 19  விழுக்காடு. நிறுவன வரி மூலம் வரும் வருவாய் 17 விழுக்காடு. இங்கும் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி அளவு அதிகம். பெரு நிறுவனங்கள்  இலாபத்தில் இருந்து செலுத்துவது குறைந்த வரி. கடன் அல்லாத மூலதன வருவாய் 1 விழுக்காடு ஓய்வூதியம் 4 விழுக்காடு, ஒன்றிய அரசு நிறைவேற்றும் திட்டங்கள் 8 விழுக்காடு, நிதிக் குழு

இரட்டைப் பாலம்

படம்
 தென்னிந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் பெங்களூரில் கட்டப்பட்டது என தவறான தகவல் பரப்பப்படுகிறது . ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் நெல்லையில் உள்ளது. ⚡ திருவள்ளுவர் இரட்டைப் பாலம்⚡ இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான்.  நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க,  எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் உள்ளது  ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்றது. 1969-ல் இந்த மேம்பாலம் கட்ட கலைஞர் அடிக்கல் நாட்டினார்.  1973-ம் ஆண்டில் ₹.47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்த மேம்பாலத்தை கலைஞர் திறந்து வைத்தார்.  706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது. ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும்.  இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும்

கத்தரிக்காய் பயன்கள்!

படம்
  கத்தரிக்காய் எல்லா இடங்களிலும் சுலபமாக வளரும் காய் என்பதால், அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம். கத்தரிக்காயில், 'சோலாசோடின்' எனும் ரசாயனம் உள்ளது. மாரடைப்பு மற்றும் கல்லீரல் வீக்கத்தை தவிர்க்க வழங்கப்படும் மாத்திரைகளில், இந்த ரசாயனம் தான் உள்ளது. கத்தரிக்காயின் நிறத்திற்கு ஏற்றாற்போல, ஆரோக்கிய பண்புகளும் மாறுபடும். கத்தரிக்காயில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளன.  இதைத்தவிர, மாங்கனீசு, வைட்டமின் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. பசியின்மையை நீக்குகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்ற பிரச்னைகளையும் குறைக்கிறது.  நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது. ஊதா நிற கத்தரிக்காய் சாப்பிடுவதால், நிறைய ஆரோக்கிய

வாராது வந்த மாமணி

படம்
  தனியார் செல் நிறுவனங்களில் கட்டண உயர்வு; பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிய 30 லட்சம் வாடிக்கையாளர்கள். சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதை ஊசி விற்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது 10 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை; கங்கை தூய்மை திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்வாகா: மீண்டும் மீண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஆற்றில் போட்டாலும்.... கங்கை ஆற்றில் கணக்கு வழக்கே இல்லாமல் ஒன்றிய பாஜ அரசு பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.  கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ பொறுப்பேற்றதும் நவமாமி கங்கே எனப்படும் கங்கை தூய்மை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கங்கை நதி பாயும் உபி, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கையை சுத்தப்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.  ரூ.20 ஆயிரம் கோடி செலவிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 2023ல் அடுத்த 3 ஆண்டுக்கு என மேலும் ரூ.22,500 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நடக்கும் திட்டங்களுக்கு ரூ.11,225 கோடியும், புதிய திட்டங்களுக்கு ரூ.11,275 கோடியும் செல

உயர்வுக்கு அடித்தளம்

படம்
  மாநிலங்களுக்கு நிதி வழங்குவதே சான்று ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் ஒன்றிய பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி. ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை சென்னை வழக்குரைஞர் கைது. எத்தியோப்பியாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 257. ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம். உயர்வுக்கு அடித்தளம் இட்டது யார்? மின் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது அ.தி.மு.க. அப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தார்மீக அருகதை இருக்கிறதா அ.தி.மு.க.வுக்கு? “தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அ.தி.மு.க. அரசே முழுக் காரணம்” என்று நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொல்லி இருப்பதுதான் முழு உண்மை ஆகும்.  ஒன்றிய அரசு திணித்த ‘உதய் மின் திட்டத்தில்’ அன்றைய அ.தி.மு.க. அரசு இணையாமல் இருந்திருந்தால் இதுபோன்ற கட்டுப்பாட்டுக்குள் நாம் சிக்கி இருக்க மாட்டோம். 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டபோது அந்தக் கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்தார் அன்றைய ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் பிய