கள்ளக்குறிச்சியும்,ஹாத்ராசும்!

 அசாம் மாநிலத்தை போன்று இமாச்சலப்பிர தேத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தலைநகர் சிம்லா உள்ளிட்ட மாநி லத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற் பட்டுள்ளது. 

--------------------------------

ஜூலை முதல் வாரம் முழுவதும் தில்லியின் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக, காற்று தரக்  குறியீடு ஆணையம் (ஏகியூஐ) தகவல் தெரிவித்துள்  ளது. தற்போது தில்லி பகுதியின் காற்றின் தரம் 60க்குள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

------------------------------------

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டி டம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகிய  நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ள னர்.

---------------------------------------

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிவ சேனா (ஷிண்டே) தலைவர் ராஜேஷ் ஷாவுக்கு சொந்தமான   பிஎம்டபிள்யு கார் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பெண், கார் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

---------------------------------

கர்நாடகாவில் டெங்கு காயச்சலால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்ததாக கூறப்படும் நிலையில், டெங்கு காயச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

--------------------------------------

பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவைகளின் அளவுகளை கட்டாயம் பெரிய அளவிலான எழுத்துக்களில் அச்சிட வேண்டும் என இந்திய உணவு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

----------------------------------

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2ஆவது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை முடிவு செய்ய விரைவில் கூட்டம் நடத்தப்  படும் என அம்மாநில அமைச்சர் எம்.பி. பாட்டீல் தக வல் தெரிவித்துள்ளார்.

--------------------------------

இந்திய மீனவர் பிரச்னை குறித்து கலந்துரை யாட தில்லிக்கு வருமாறு இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

-------------------------------

வரவிருக்கும் ஹரியானா சட்டமன்ற தேர்த லில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என இந்திய தேசிய லோக்  தளம் கட்சியின் மாநிலத் தலைவர் ராம்பால் மஜ்ரா  கூறியுள்ளார்.

(-------------------------------)

சூரத்
குஜராத் அடுக்குமாடி கட்டிட விபத்து
பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் சூரத் நகரில்  ஜவுளித்துறையில் வேலை செய் யும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பலர் தங்கி  இருந்த 6 தளங்கள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் சனியன்று பிற்பகல் இடிந்து  விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகி யுள்ளதாகவும் 10-க்கும் அதிகமானவர் கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு வதாகவும் சூரத் மருத்துவமனை தகவல்  தெரிவித்துள்ளது. 

7 ஆண்டுகள் கூட தாக்குபிடிக்காத கட்டிடம்

இடிந்து விழுந்த அடுக்குமாடி குடி யிருப்பு கட்டிடம் கடந்த 2016-17இல்  கட்டப்பட்டது. அருகில் உள்ள ஜவுளி  தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் கட்டிடத்தின் 5 மாடி களில் குடியிருந்த நிலையில், வெறும் 7  ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியா மல் இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற்  படுத்தியுள்ளது.

ரஜோரி
ஜம்மு- காஷ்மீரில் பதற்றம்
30 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனியன்று இந்திய  ராணுவ வீரர்களுக்கும் - பயங்கர வாதிகளுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்றது. 

 இந்த  துப்பாக்கி மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல் லப்பட்ட நிலையில், ராணுவம் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரி விக்கப்பட்டது. தொடர்ந்து ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் குல்காம்  மாவட்டத்தின் மஞ்சாகோட் பகுதியில்  உள்ள கலுதி கிராமத்தில் ராணுவ வீரர்  களின் முகாம்களின் மீது பயங்கரவாதி கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

ராணுவ  வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் அரைமணி நேரம் துப்  பாக்கி மோதல் நடைபெற்றது.

இந்த துப்பாக்கி மோதலில் பயங்கர வாதி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட  நிலையில், 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த னர். குல்காம் மாவட்டத்தில் கடந்த 30  மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், 4 வீரர்கள் உயிரிழந்துள்ளதால் ஜம்மு-  காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வால்
வங்கதேச அகதிகளை திருப்பி அனுப்ப முடியாது
மிசோரம் முதல்வர் திட்டவட்டம்


வங்கதேசத்தில் கிளர்ச்சியா ளர்களின் குழுவான குக்கி - ஸின்  தேசிய ராணுவத்தின் (கேஎன்ஏ)  மீது, வங்கதேச ராணுவம் நடத்திய தாக்கு தலால் கடந்த நவம்பர் 2022 முதல் 2,000க்கும் மேற்பட்ட “ஸோ” இன மக்கள்   மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள னர். அதே போல மிசோ இனத்தில் ஒன்  றான “பாம்” பழங்குடியின மக்கள் மிசோ ரமில் தஞ்சமடைந்து வருகின்றனர். 

“ஸோ” மற்றும் “பாம்” இன மக்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்த மோடி அரசு தீவிரமாக முயற்சித்து வரு கிறது. இதுபற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாது காப்பு என்ற பெயரில் அடிக்கடி மிசோரம்  அரசிற்கு நெருக்கடி அளித்து வந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 6 அன்று மிசோ ரம் முதல்வர் லால்துஹோமா, பிரதமர்  மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி னார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் வெளி யிட்ட அறிக்கையில்,”வங்கதேச அகதி களுடன், மிசோரம் மக்கள் இனரீதியான  பிணைப்பில் உள்ளனர்.

 அதனால் இந் தியா மற்றும் வங்கதேச எல்லையிலுள்ள சிட்டகாங் மலைப்பகுதிகளில் தஞ்சம டைந்துள்ள “ஸோ” மற்றும் மிசோ  இனத்தின் ஒன்றான “பாம்” பழங்குடியின  மக்களை என்னுடைய அரசு அவர்களது  நாட்டுக்குள் திருப்பித் தள்ளவோ, நாடு  கடத்தவோ முடியாது. 

 அதற்கான வாய்ப்  பும் கிடையாது” என திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியும்,ஹாத்ராசும்!

கள்ளக்குறிச்சியில் ஒரு சம்பவம் நடந்ததும் நட்டா அதனை இந்தியப் பிரச்சினையாக ஆக்கினார். 

 காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது? ஏன் மவுனமாக இருக்கிறது? என்று கேட்டார்.

 ஆனால், உ.பி.யில் 121 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியாகி இருப்பது நட்டா கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? என்றும், நிர்மலா சீதாராமன், கள்ளக்குறிச்சி பிரச்சினையை வைத்து அரசியல் முழக்கங்கள் செய்தாரே? 

 உ.பி.யில் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் விட்டாரா?

நடந்தது உத்தரப்பிரதேசம். அதனால் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டு விட்டது. அதைப் பற்றியே பேசவில்லை. உத்தரப்பிரதேசத்தில்நடந்ததுஇந்தியாவையே கண்ணீரில் மிதக்கவைக்கும் மாபெரும் பேரழிவு அல்லவா? 

உத்தரப் பிரதேசத்தையே அமைதியாக மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்களே, யோகி!

 எங்கே போனார் யோகி? 

மக்களைக் காப்பாற்றாமல் எங்கே இருந்தார்? 

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் காவல் துறை இருந்ததா? 

இத்தனை மனித உயிர்கள் இழப்புக்கு காரணமான போலே பாபா கைது செய்யப்பட்டாரா?

 இல்லை! எங்கே போனார்?

 தலைமறைவாகி விட்டார். 

தலைமறைவு ஆக்கப்பட்டார். ஒப்புக்கு 6 பேரைக் கைது செய்துள்ளார்கள். அவ்வளவுதான். நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் பாபா பெயரே இல்லை.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டம், சிக்கந்தராவ் தாலுகா, முகல்வடி கிராமத்தில் போலே பாபாவின் ஆன்மிகக் கூட்டம் நடந்துள்ளது.

 ரகசியமாக நடந்த கூட்டமல்ல இது. "விஷ்வ ஹரி" என அழைக்கப்படும் போலே பாபா வருகிறார் என்று ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

 "மானவ் மங்கள் மிலான்" என்ற இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை "மானவ் மங்கள் மிலான் சத்பவன சம்மேளன சமிதி" என்ற அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.

ஆறு பேர்கள் கொண்ட குழுவாம் இது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் இந்த ஆறு பேரின் எண்களும் அணைத்து வைக்கப்பட்டு விட்டன. எந்த மாதிரியான ரகங்கள் இவர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

 அனுமதி கோரும் போது, சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள், காவல் துறையிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள். வந்தவர்கள் இரண்டரை லட்சம் பேர். ஏன் உரிய பாதுகாப்பை உ.பி. பா.ஜ.க. அரசு தரவில்லை. 

நிகழ்ச்சி முடிந்தபிறகு, போலே பாபாவின் கால் மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்கிறார்கள். நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழ முடியாத அளவுக்கு கூட்டம் இருந்துள்ளது.

போலே பாபா கடந்து செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டது. அவரை தரிசனம் செய்வதற்காகப் பல பெண்கள் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

 வழிபாடு, சொற்பொழிவு முடிந்த பிறகு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

 "போலே பாபா" தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது, அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. காப்பாற்ற வழியில்லாமல் கண்ணுக்கு முன்னால் பலரும் இறந்துள்ளார்கள். நான் நான்கு மணிக்கு இங்கு வந்தேன். 

எங்கும் சடலங்கள் இருந்தன. ஒரு பெண் சுவாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் சிகிச்சை கிடைக்காததால் என் கண்முன்னே இறந்துவிட்டார் என்று பத்திரிகையாளர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

உ.பி.யில் இறந்தவர்களுக்காக நட்டாவும், நிர்மலா சீதாராமனும் கண்ணீர் விட்டார்களா? : முரசொலி சரமாரி கேள்வி!

இந்த போலே பாபா, பலே ஆசாமியாகத் தெரிகிறார். இறந்த பெண்ணை உயிர்த்தெழச் செய்வதாகக் கூறி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு இருப்பதாக இந்து தமிழ் திசை செய்திக் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. 

போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராக இருந்துள்ளார். 1997-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளார். பின்னர் விடுதலை ஆகி இருக்கிறார்.

 இதன்பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதன்பிறகு தனது பெயரை, "சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா" என மாற்றிக் கொண்டார். காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கினார். இவரது பேச்சுக்கு கூட்டம் கூடத் தொடங்கியது.

அதன் பிறகு அவரைப் பற்றிச் சொல்வது எல்லாம் திகில் கதையைப் போல இருக்கிறது. 

பாபா ஆனபிறகு ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்பு பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன் மகிமையால் அப்பெண் உயிர்த்தெழுந்ததாக பொதுமக்களை நம்ப வைத்துள்ளார். 

பிறகு அப்பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். 

 பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார் என்கிறது "இந்து தமிழ் திசை" நாளிதழ்.

பிச்சுவாவில் அமைந்துள்ள மைன்புரி ஆசிரமத்தில்தான் போலே பாபா வசித்து வருகிறார். 

13 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்து உள்ள இந்த ஆசிரமத்திற்கு ஹரி நகர் என்று பெயரிட்டார். இந்த பாபாவுக்கு மாநிலம் முழுக்க 24 ஆசிரமங்கள் உள்ளன. போலே பாபா மீது ஆக்ரா, எரவாடா, காஸ்கஞ்ச், பரூக்காபாத் ஆகிய இடங்களிலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனாலும், அவர் நாட்டு மக்களுக்கு சொற்பொழிவுகள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். 

121 பேர் மரணத்துக்கு காரணமானவர், சில நாட்களில் மறக்கப்படுவார். மீண்டும் இதே சொற்பொழிவுகளைத் தொடங்கியும் விடுவார். அவரெல்லாம் உலகின் பார்வையில் குற்றம் சாட்டப்படுபவராக பார்க்கப்பட மாட்டார். அப்படி பார்த்தால் "பாவம்". "இறந்தவர்கள்" பாவம் ஆக மாட்டார்கள். 

ஏனென்றால், இந்த சமூகத்தில் நடக்கும் இடத்தைப் பொறுத்து நீதியும், தீர்ப்பும் மாறிவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக