இடுகைகள்

ஆண்ட்ராய்ட் .....,

படம்
கைகளில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது முதல் இடத்தில் உள்ளது. பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. நீங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனம் எதனையும் தற்போது பயன்படுத்தவில்லை என்றாலும், இது குறித்து அறிந்திருப்பது நல்லதே. ஏனென்றால், என்றாவது ஒரு நாள், கூடிய விரைவிலேயே ஆண்ட்ராய்ட் கொண்டுள்ள சாதனம் ஒன்றினை உங்களுக்கென நீங்கள் இயக்கும் நாள் வரலாம். ஆண்ட்ராய்ட் திரையில், புரோகிராம் ஐகான்களாகக் காட்டப்படுகின்றவையே விட்ஜெட் ஆகும். ஆனால், பெர்சனல் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. விட்ஜெட் கொண்டுள்ள புரோகிராம், அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொண்டு, விட்ஜெட்டில் அதனைக் காட்டும். எடுத்துக் காட்டாக, காலண்டர் கொண்டுள்ள ஒரு விட்ஜெட், வரப்போதும் நிகழ்வுகள் குறித்து உங்களுக்குக் காட்டும். அப்போதைய ...

இலவச ஆன்லைன் படிப்புகள்....,

படம்
முன்னணி ஐஐடிக்கள் நிறுவனமான, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் தொழில் லாபி நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் இணைந்து இலவச ஆன்லைன் படிப்புகள் வழங்க உள்ளன.  இதன்மூலம் 100,000-150,000 மக்களுக்கு சிறந்த உயர் கல்வியும் மற்றும் வேலைக்காகவும் உதவ முடியும். மாபெரும் திறந்த ஆன்லைன் படிப்புகள் (MOOCs) உபயோகித்து படிப்புகளை வழங்கப்படுகின்றன. இதனால் உலகில் உலகளாவிய உயர் கல்வியை உருவாக்குகின்றது. கணினி அறிவியலில் முதல் மூன்று படிப்புகளை இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வரும்  'இந்த திட்டம், குறிப்பாக இந்தியாவிற்காக தான், ஏனேனில் அதிக எண்ணிக்கையில் இளம் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வேண்டும் என்பதற்காக' என்று காக்னிசண்ட் துணை தலைவர், லட்சுமி நாராயணன், கூறியுள்ளார். மாபெரும் திறந்த ஆன்லைன் படிப்புகள் (MOOCs) மிக சிறந்த பழ்கலைகழகத்தில் இருந்து சிறந்த உயர் கல்வியை உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு வருக்கும், ஆன்லைனில் இலவசமாக வழங்கும்.  இதில் தில்லி, சென்னை, காரக்பூர், கான்பூர், ரூர்க்கி, பம்பாய் மற்றும் கவுகாத்தி போன்ற ஏழு ஐஐடிக்கள் பங்குபெறும். நிறு...

வரும் ச [தி]வால்கள்.

படம்
ஆட்டோ மொபைல் தொழில் துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமாக இருந்து வந்த மிச்சிகனின் மாகாணத்தின் டெட்ராய்ட் என்ற தொழில் நகரம் திவாலான தாக அறிவிக்கக் கோரி மிச்சிகன் மாகாண ஆளுநர் சார்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா, இந்த மனு சட்டவிரோதமானது, இது ஓய்வூதியதாரர்களை மிரட்டும் நடவடிக்கையாகும்.  எனவே திவாலனதாக அறிவிக்கக் கோரும் மனுவை மாகாண அரசு திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டார். அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழில் நகரமாக மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரம் விளங்கி வந்தது. உலக அளவில் ஆட்டோ மொபைல் தொழிலில் சிறந்து விளங்கி வந்த இந்த நகரம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வசித்த 2 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த நகரத்தை விட்டு வெளியேறி மாற்று இடங்களை தேடிச்சென்று விட்டனர். தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். அரசின் பொதுச்சேவைகள் முற்றிலும் செயலிழந்து இருக்கிறது.  நகரத்தில் இருந்து 78 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சமூக விரோதிகள...

மின் பற்றாக்குறை தொடருமா?

படம்
                                                                                                                                    -கே.விஜயன்   இந்திய நாட்டின் மக்கள்தொகை 120 கோடி ஆகும். சுதந்திரமடைந்து 67 ஆண்டு கள் ஆகின்றது. ஆனால் மக்களின் அடிப் படைத் தேவைகள் பெரும்பாலான மக்களை சென்றடையவில்ல...

வாலிப கவிஞர் "வாலி"

படம்
சினிமா பாடலாசிரியர் " வாலி " (வயது 82) இன்று காலமானார். [ 1931-2013] நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலிஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்.  உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது. அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். வாலி (1931-2013) கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாள்.  பின் ஸ்ர...

எரிவாயு விலை உயர்வு.ஆபத்து.!

படம்
எண்ணெய் நிறுவனங்கள் வரவைவிட செலவு அதிகம் என்று கணக்கு காண்பித்து “நட்டம்” எனவே கட்டுபடியான விலை கொ டுங்கள் என்று கேட்கவில்லை. முதலீட்டை பெருக்கி காட்ட கப்பல் வாங்கியதில் கள்ளக் கணக்கெழுதி காட்டிய ரிலையன்ஸ் கூட “நட்டம்” என்று கிங்பிஷ்ஷர் மல்லையாபோல் புலம்பவில்லை.  நாட்டுக்கு அவசியமான எரிவாயு உற்பத்தியை பெருக்க அந்நிய முத லீடு தேவை அதை கவரவே “கட்டுபடியான விலை” கேட்கிறோம் என்றன. “நிபுணரான” முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் கட்டுபடியான விலை என்று கணக்கு போட்டு சிபாரிசு செய்ய இந் திய அரசும் பொதுத் துறையிலிருக்கும் , மின்சா ரம், உர அலைகள், இதர, ரயில்வே போன்ற நிறுவனங்கள் இனி உலக சந்தையில் நிலவும் விலையைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலை கொடுத்து எரிவாயுவை வாங்க எண் ணெய் நிறுவனங்களோடு மூன்று வருட முன் பேர வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளது. இன்று ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் நிறுவனம், கெயிர்ன் இந்தியா(பிரிட்டன் தனியார் நிறு வனம்) என்ற மூன்று நிறுவனங்கள் இந்தியா வில் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த கூடுதல் விலை ஆங்கிலோ-அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய...

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு

படம்
செய்வது எப்படி?   தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.  முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம். மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். புதியதாக ஆன்லைனில் பதிவது எப்படி? புதியதாக ...