இப்போதுதான் இப்படியா?.எப்போதுமே இப்படித்தானா??

 பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 80 பேர் திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய பிணையை  அடுத்து அவர்கள் ம் விடுவிக்கப்பட்டனர்.
சிறை வாயிலில் அவர்களை,இதுவரை காணாமல் போயிருந்த  புதிய பார்வை ஆசிரியர் மு .நடராஜன் வரவேற்றார்.
suran
இப்போதுதான் இப்படியா ?.எப்போதுமே இப்படித்தானா??
சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பழ.நெடுமாறன்:
"தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவரை இடித்த அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அந்த இடத்தில் அதனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.
நெடுமாறன் சிறை வாயில் செவ்வி அவரை "சிரிப்பு போராளியாக" காட்டுகிறது.
அவருக்கு சற்றும் சளைக்காதவர் சீமான்.
இவர்கள் பேச்சுகள் வடிவேலு நடிக்காத குறையைத் தான் போக்குகிறது.
வடிவேலுவுடன் இந்த மாவீரர்களை சரிசமமாக்கக் கூடாது.
சென்ற தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததால் ஜெயா அடிவருடி சினிமாக்காரர்களால் பழி வாங்கப்பட்டு ஒதுக்கப்பட்டாலும் அவர் இன்றுவரை மரியாதை நிமித்தமாக [?]முதல்வரை சந்தித்து சரணாகதி அடையவில்லை.மதுரை வீரனாகத்தான் உள்ளார்.நெடுவோ மதுரை பெயரையே தனது கோழைத்தன அரசியல் மூலம் கெடுத்து விட்டார்.
தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என சொல்லப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட சில வழக்குகளில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் தஞ்சை காவல்துறையினரால் கடந்த 13- ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .
 
 
இடிக்க உத்திரவிட்டவரையே ஏவ லால்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் திறமையும்,புத்திசாலித்தனமும் ,தகிரியமும் நமது "மாவீரன் "[?]நெடுமாறனையும்,சீமெண்ணை மன்னிக்கவும் சீமானையும் தவிர யாருக்கு வரும்.?
இனி வழக்கு தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்க முடியாது .அதிமுக" அடிவருடிகள் முத்தம் "கிளை வேண்டுமானால் நெடுமாறன்,சீமான் அமைக்க  முடியும்.
கருணாநிதி முதல்வராயிருக்கும் போது நடந்த ஈழத்தமிழர் அழித்தொழிப்புகளுக்கு கலைஞர்தான் காரணம்.அ வரத்தான்   மத்திய அரசுடன் சேர்ந்து தமிழர்களை கொன்று குவித்தார்.ராஜபக்சேயின் தமிழர்களை கொன்ற பீரங்கிகளுக்கு கருணாநிதிதான் வெடிமருந்து குண்டுகளை அடைத்து கொடுத்தார் என்று பேசிய மாவீரன்கள் வாய் இப்போது போயஸ் தோட்டத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளதோ?
இவர்களின் அன்றைய துணிச்சல்களுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி தமிழினத் தலைவர் கண்டுகொள்ள மாட்டார்,அவரின் தமிழினத தலைவர் என்ற  பெருமையை சிதைக்க  வேண்டும் என்ற தகிரியமும் .இன்றைய முதல்வர் பற்றி வாய் திறந்தால் வைகோ,நக்கீரன் கோபால் மட்டுமல்ல அவாள் பெரியவர் காஞ்சி மடத்தலைவரே  பட்ட பாடுகள் பற்றிய பயமும்தான் காரணம்.!
இனிமேலும் நீங்கள் முற்றம்,ஈழம்,பிரபாகரன் என்று பேசினால் ஈழத்தில் உள்ள தமிழன் உணர்வாளன் வளர்க்கும் நாய் கூட உங்களை நம்பாது-மதிக்காது.ஓட ,ஓட கடித்து குதறி விடும்.
போய் முன்னாள் ஈழத்தாய் ஜெயா காலில் விழுந்து கட்சியில் சேர்ந்து கூட்டத்துக்கு பத்தாயிரம் வாங்கி பிழைக்கிற வழியைப் பாருங்கள்.
முற்றம் இடிக்கப்பட்டவுடன் மறைந்து போன மு.நடராசன் திடீரென காட்சி தருகிறார் .குளிர் விட்டு போச்சா?
 
 
 
 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?