யார் பேசுவது?
சமூகநீதி யை ப் பற்றி! தினந்தோறும் ஏதாவது ஒரு பீதியைக் கிளப்பி விடுவது பிரதமர் மோடியின் பணியாக உள்ளது. ‘உங்கள் தாலி போகப் போகிறது?’ என்று சொன்னவர் இப்போது சமூகநீதியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார். சமூக அநீதியின் நாயகரான அவரெல்லாம் சமூகநீதியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார். ‘பட்டியலின –- பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை எல்லாம் சிறுபான்மையினருக்கு கொடுத்துவிடப் போகிறது இந்தியா கூட்டணி ஆட்சி’ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ... இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்... என்று தினந்தோறும் -– ஏதாவது ஒரு மாநிலத்தில் பேசிக் கொண்டிருப்பவர் அவர்தான். இந்தியாகூட்டணியின் ஆட்சிதான் வரும் என்பதை இக்கூட்டணித் தலைவர்களைவிட மோடிதான் அதிகமான நம்பிக்கையில் இருக்கிறார். அதனால்தான் அவர்கள் ஆட்சியில் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்பதை அவர் விளக்குவதில் தனது நேரத்தைச் செலவு செய்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் பட்டியலின -– பழங்குடி மக்களின