பொய். பொய் மட்டுமே!

 இந்து அரசர்களை  பேசும் ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்? -  மோடி (நீங்கள் உங்க சாதனைகளச் சொல்லாமல் நேருவையே விமர்சிக்கிறாய்)

இதுவரை எந்த பிரச்சார கூட்டத்திலும் பாஜக 10 ஆண்டு சாதனையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை...

இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறுவது உறுதி: ப.சிதம்பரம் .

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர் இடைநீக்கம்.

ஏழைகளிடம் இருந்து மோடி பறித்த பணத்தைதிரும்பஅளிப்போம்:-ராகுல்காந்தி

 பாஜகவிற்கு ஆப்பாக மாறிய வாட்ஸ் ஆப். உ.பி, பீகாரில் வாட்ஸ் அப்பில் தீயாக பரவும் ரேவண்ணா ஆபாச வீடியோ.


பொய். 

பொய் மட்டுமே!

மக்க­ளுக்­கும் இடையே மோதலை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் பிர­த­மர் மோடி பொய்­க­ளைப் பரப்பி வரு­வ­தாக இணைய இதழ் ஒன்று குற்­றம்­சாட்டி உள்­ளது.

Scroll.in என்ற இணைய இதழ் பிர­த­மர் மோடி மக்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பேசி வரும் பொய்­களை பட்­டி­ய­லிட்டு கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்ள பிர­த­மர் மோடி தொடர்ந்து பொய்­களை கூறி வரு­வ­தா­க­வும், இஸ்­லா­மி­யர்­கள் ஊடு­ரு­வல்­கா­ரர்­கள், அதிக குழந்­தை­க­ளைப் பெறு­ப­வர்­கள் என்­றும், தனி­யார் சொத்­துக்­களை கைப்­பற்றி அவர்­க­ளுக்கு மறு­பங்­கீடு செய்ய காங்­கி­ரஸ் திட்­ட­மிட்­டுள்­ள ­தாக அவர் கூறி­ய­தை­யும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பிர­த­மர் மோடி­யின் இந்த பேச்சு அப்­பட்­ட­மான தேர்­தல் நடத்தை விதி­மீ­றல் என்­றும், இது குறித்து காங்­கி­ரஸ் உள்­ளிட்ட அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் அளித்த பின்­ன­ரும் பிர­த­மர் மோடி தனது பொய்­களை நிறுத்­த­ வில்லை என்­றும் அதில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் 21-ம் தேதி ராஜஸ்­தான் மாநி­லம் பான்ஸ்­வாரா என்ற இடத்­தில் பேசிய பிர­த­மர் மோடி, இந்­துப் பெண்­க­ளின் தாலி உள்­ளிட்ட தங்க நகை­களை பறித்து மற்­ற­வர்­க­ளுக்கு மறு­வி­நி­யோ­கம் செய்­யப்­ப­டும் என காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் உள்­ள­தா­கக் கூறி­னார். 

ஆனால், காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் இது போன்ற வாச­கங்­கள் எது­வும் இல்லை.

மற்­றொரு கூட்­டத்­தில், நாட்­டின் வளங்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு முதல் உரிமை உண்டு என்று முந்­தைய காங்­கி­ரஸ் அரசு கூறி­ய­தாக மோடி கூறி­னார். 

ஆனால், பட்­டி­யல் இனத்­த­வர், பழங்­கு­டி­யி­னர், பிற பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள், பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள், மத சிறு­பான்­மை ­யி­னர் என அனைத்து பின்­தங்­கிய மக்­க­ளுக்­கும் நாட்­டின் செல்­வத்­தின் மீது சம உரிமை உண்டு என 2009-ம் ஆண்டு அப்­போ­தைய பிர­த­மர் மன்­மோ­கன் சிங் பேசி­யதை திரித்து பொய்­களை வெளி­யிட்­டுள்­ளார் பிர­த­மர் மோடி.

பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், தலித்­து­கள், ஆதி­வா­சி­கள், ஏழை­கள், சிறு­பான்­மை­ யி­ன­ரின் வாழ்க்கை வச­தி­கள் குறித்து ஆய்வு செய்­யப்­ப­டும் என்ற ராகுல் காந்­தி­யின் பேச்சை திரித்து, தனி­யார் சொத்­துக்­கள் பறி­மு­தல்செய்­யப்­பட்டு மறு­வி­நி­யோ­கம் செய்­யப்­ப­டும் என ராகுல் காந்தி பேசி­ய­தா­க­வும், 2 வீடு­கள் உள்­ள­வர்­க­ளி­டம் இருந்து ஒரு வீடு பறி­மு­தல் செய்­யப்­ப­டும் என காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் உள்­ள­தா­க­வும் பிர­த­மர் பொய் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளார் மோடி. 

கர்­நா­டகா, ஆந்­திரா மாநி­லங்­க­ளில் இஸ்­லா­மி­யர்­கள் இட­ஒ­துக்­கீடு குறித்து காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிலை­பா­டு­களை திரித்து, ஓ.பி.சி. இட­ஒ­துக்­கீட்டை பறித்து முஸ்­லீம்­க­ ளுக்கு அளிக்க காங்­கி­ரஸ் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும்  மோடி பொய்­யான பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­டார் என்­றும்அக்­கட்­டு­ரை­யில் குறிப்­பி­டப்பட்­டுள்­ளது.

மேலும், ஒரு­வ­ரின் மர­ணத்­திற்கு பிறகு அவ­ரது சொத்­துக்­கள் வாரி­சு­க­ளுக்கு செல்­வதை தடுக்­கும்வகை­யில் பரம்­பரை சொத்துவரி கொண்­டு­வ­ரப்­ப­டும் என காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் உள்­ள­தாக மோடி பேசி­யது பொய் என­வும் அப்­ப­டிப்­பட்ட வாச­கங்­கள் எது­வும் காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் இல்லை என்­றும் Scroll.in என்ற இணைய இதழ் தெரி­வித்­துள்­ளது.

எழுமின்! விழிமின்


ராஜஸ்தான் பிரச்சாரத்தில் ஏப்ரல் 21 அன்று, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எப்படி அப்பட்டமாக விஷம் கக்கினாரோ அதே வார்த்தைகளை பாஜகவின் முக்கியப் பிரச்சாரகர்களில் ஒரு வரும், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்கூரும் பேசியுள் ளார். 


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்க ளின் செல்வங்களை எல்லாம் பறித்து முஸ்லிம்க ளிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்றும், இந்து பெண்களின் தாலியை பறித்து விடுவார்கள் என்றும் மோடி பேசிய பேச்சை அவர் அப்படியே எதிரொலித்துள்ளார். 

மோடி தூண்டிவிட்ட வெறுப்பு பேச்சை பாஜக வின் அனைத்து நபர்களும் இப்போது  வேகமாக பேசவும், பரப்பவும் துவங்கியுள்ளனர். ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிர மாக விசிறிவிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அடுத்து பல்வேறு கட்டங்களில்  வாக்குப்பதிவை சந்திக் கவுள்ள வட மாநிலங்களில் பாஜக இந்தப் பிரச்சா ரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. 

ஆனால் தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடு கவலை தரத்தக்கதாகவும், கடும் கண்டனத்திற்கு உரியதாகவும் உள்ளது. ராஜஸ்தானில் மோடி பேசிய வெறுப்பு பேச்சு தொடர்பான புகார் மீது, அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக அவரது கட்சியின் தலைவரான ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, மோடியை பகைத்துக் கொள்ளாமல் நழுவியது தேர்தல் ஆணையம்.

இதுபோன்ற அப்பட்டமான வெறுப்புப் பேச்சுகள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவ டிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பது தெரிந்துதான், பாஜகவின் அடுத்தடுத்த தலை வர்கள் மோடியின் அதே விஷத்தை தாங்களும் உமிழத் துவங்கியிருக்கிறார்கள். 

தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறுப்பை வெளிப் படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அப் பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும். 

அரசியல மைப்புச் சட்டத்திற்கும் விரோதமானதாகும். ஆனால் அதை பிரதமரே மீறுகிறார்; அவரது அமைச்சர் படையும் மீறுகிறது. 

முற்றிலும் அரசி யல் சட்டத்திற்கு விரோதமாக பேசும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு கண்ட னம் தெரிவித்து தில்லியில் உடனடியாக போ ராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலை யில், மோடி மீதும் அனுராக் தாக்கூர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள புகார் கடிதத்திற்கு இப்போதேனும் செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்? 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?