ஒற்றை வீடியோ’ காலி

ஜிஎஸ்டி,மற்றும் பண மதிப்பிழப்புபோன்ற பாஜகவின் நடவடிக்கைகளால் பனியன்,ஜவுளி,நெசவாளர் தொழில் பாதிப்பு."கமல் குற்றச்சாட்டு.

காங்கிரஸ் வந்தால் பெண்களுக்கு 1 லட்சம் வருடத்திற்குதான்.. ஆனால் பாஜக மாதத்திற்க்கே தரும் - தமிழிசை.(15லட்சம் தந்த்து போல்?)

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்6.5அளவில்.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்

“எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? காதுகள் பாவமில்லையா!”  பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் !

உலகின் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைகள் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

"எல்லோருக்கும் ஒரே ஓட்டு மட்டும்தானே... அம்பானிக்கும், அதானிக்கும் கோடி கோடியாய் கொடுக்குறீங்க...ஏழைகளுக்கு ரூ.3000 கொடுத்தா என்னகேடு"? மோடிக்கு எடப்பாடி கேள்வி .

தேர்தலையொட்டி  தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேவை 40% அதிகரிப்பு .

“ஒரே நாடு என ஒற்றை மதத்தை பரப்ப பாஜ திட்டம்” .அமர்தியா சென் குற்றச்சாட்டு.

பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை.

தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள்  நொறுக்கப்பட்டு நீக்கப்படும் - வேல்முருகன்.

"அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அதிமுக போட்ட பிச்சை "- எடப்பாடி பழனிச்சாமி.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சம்மன்.

ஒற்றை வீடியோவால் காலி 

ஒன்றியபிர­த­மர் மோடி 8 முறை தமிழ்­நாட்­டுக்கு பிர­சார சுற்­றுப்­ப­ய­ணம் செய்­தி­ருக்­கி­றார்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு சென்னை உட்­பட 8 மாவட்­டங்­கள் பெரு­ம­ழை­யால் மூழ்கி மக்­கள் பரி­த­வித்­த­போ­தெல்­லாம் மோடி எட்­டிப் பார்க்­கா­த­தும், ஒரு பைசா கூட ஒன்­றிய பா.ஜ.க. அரசு உதவி செய்­யா­த­தும் மக்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

இத­னால் பிர­த­ம­ரு­டைய சென்னை ‘ரோடு ஷோ’ மக்­கள் கூட்­டம் இல்­லா­மல் பிசு­பி­சுத்­தது. இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும் எம்.பி.யுமான ராகுல் காந்­தி­யும், முதல்­வர் மு.க.ஸ்டாலி­னும், கோவை பொதுக்­கூட்­டத்­தில் இணைந்து பிர­சா­ரம் செய்­தது மக்­கள் கவ­னத்தை ஈர்த்­தது.

 தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் பிர­சார பொதுக்­கூட்­டத்­தில் இத்­தனை லட்­சம் மக்­கள் இது­வரை வேறு எந்த அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் கூடி­ய­தில்லை என்­கி­றார்­கள். 

மோடி கலந்து கொண்ட கூட்­டத்தை விட 5 மடங்கு அதி­கம்.

இந்த நிலை­யில் கோவை பய­ணத்­தின் போது ராகுல் காந்­தி­யின் செய­லும் அதற்கு முதல்­வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதி­லும் தற்­போது சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லாகி வரு­கி­றது.

 நெல்லை பிர­சா­ரம் முடிந்து கோவை விமான நிலை­யத்­தி­லி­ருந்து காரில் புறப்­பட்ட ராகுல் காந்தி வழி­யில் சிங்­கா­நல்­லூர் பகு­தி­யில் திடீ­ரென காரை நிறுத்தி இறங்கி சென்­டர் மீடி­ய­னைத் தாண்­டிக் குறித்து அரு­கில் இருந்த இனிப்­புக் கடைக்­குள் சென்­றார்.

உரி­மை­யா­ளர், ஊழி­யர்­க­ளோடு வெகு சக­ஜ­மாக பழ­கிய ராகுல், கடை­யில் சில இனிப்­பு­களை வாங்கி ருசி பார்த்­தார். பின்பு அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளு­டன் செல்பி எடுத்­துக் கொண்­டார்.

 மைசூர்­பாகு வாங்­கிய அவர் அதற்கு பணம் கொடுத்­தார். பின்­னர் பொதுக்­கூட்ட மேடைக்­குச் சென்ற ராகுல் காந்தி தான் வாங்­கிய இனிப்­பு­களை முதல்­வர் ஸ்டாலி­னி­டம் கொடுத்து வாழ்த்து கூறி­னார். 

இத­னால் இன்ப அதிர்ச்சி அடைந்த முதல்­வர் மு.க.ஸ்டாலி­னும், ‘எனக்­கா­கவா வாங்­கிட்டு வந்­தீங்க’ என மகிழ்ச்­சி­யு­டன் கூறி பெற்­றுக் கொண்­டார்.

இந்த வீடி­யோ­தான் இன்று இந்­தியா முழு­வ­தும் பெரிய அள­வில் வைர­லா­கப் பரவி மக்­கள் மனங்­க­ளைக்கவர்ந்து வரு­கி­றது.

 மோடி­யின் செல்­வாக்கை, ராகுல்­காந்­தி­யின் இந்த ஒற்றை வீடியோ காலி செய்து விட்­டது என்றே கூற­லாம்.

தமி­ழர்­கள் விருந்­தி­ன­ரைச் சந்­திக்­கும்­போது இனிப்பு வழங்­கு­வது வழக்­கம். தமி­ழர்­க­ளின் பண்­பாட்டை மதிப்­பது மட்­டு­மல்ல, அதைக் கடை­பி­டிக்­கும் தலை­வர் ராகுல் காந்தி என்­பதை நிரூ­பித்து விட்­டார்.

இதன் மூலம் பிர­த­மர் மோடி, அமித்ஷா போன்ற வட­நாட்­டுத் தலை­வர்­க­ளின் முயற்­சியை ராகுல்­காந்­தி­யின்‘ஒற்றை வீடியோ’ காலி செய்­து­விட்­டது என்ற பேச்சு, அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் விவா­தப் பொரு­ளாக மாறி­யுள்­ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?