நார்த் இந்தியா கம்பெனி’

 தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

"ஜிஎஸ்டிகொங்குமண்டலத்தைஅழித்துவிட்டது.நார்த் இந்தியா கம்பெனி’ நாட்டை பாடாய்படுத்துகிறது": -கமல்ஹாசன்.

தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தருவோம்.நான் ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது" -  மோடி .(முதல்ல இந்தியாவில் அங்கிராம் கொடுங்க)

"பொய் போட்டி மோடி நம்பர் ஒன் அண்ணாமலைக்கு 2வது இடம்தான்" -கருணாஸ்.

பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் தீவைத்து எரிப்பு.



இந்திய ரயில்வேயின் பிறந்தநாள்1853ஏப்ரல் 16ல், இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.   .

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்குவோம்: -இஸ்ரேல்.


 .
திருந்தாத பா.ஜ.க.

தோற்­கப் போகி­றோம் என்று தெரிந்த பிற­கும் பா.ஜ.க. திருந்­து­ வ­தா­கத் தெரி­ய­வில்லை என்­பது அவர்­கள் வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யி­லேயே தெரி­கி­றது.

பா.ஜ.க.வுக்கு மக்­க­ளைப் பற்றி எப்­போ­தும் கவலை இருந்­தது இல்லை. மூன்றே மூன்று கொள்­கை­கள்­தான் அவர்­க­ளுக்கு உண்டு.

*பாபர் மசூ­தியை இடித்து விட்டு கோயில் கட்ட வேண்­டும்.

*காஷ்­மீ­ருக்கு இருக்­கும் 370 சிறப்­புத் தகு­தியை விலக்க வேண்­டும்.

*பொது­சி­வில் சட்­டத்­தைக் கொண்டு வர­வேண்­டும்.- – இவை மூன்­றும்­ தான் அவர்­க­ளது முழு­மு­தல் கொள்­கை­கள். இந்த மூன்­றும் நடந்­து­விட்­டால் இந்­தியா சுபிட்­சம் அடைந்­து­வி­டும்.

 இந்­தி­யா­வில் சொர்க்­கம் உரு­வாகி விடும். மற்ற எதைப் பற்­றி­யும் கவ­லை­யில்லை. முத­லில் சொன்ன இரண்­டை­யும் நரேந்­திர மோடி செய்­து­விட்­டார். மீதம் வைத்­தி­ருக்­கும் பொது சிவில் சட்­டத்தை நிறை­வேற்­றத் துடிக்­கி­றது 2024 ஆம் ஆண்­டுக்­கான பா.ஜ.க.வின் தேர்­தல் அறிக்கை.

பாபர் மசூ­தியை இடித்து விட்டு கோயில் கட்­டு­வோம், காஷ்­மீ­ருக்கு இருக்­கும் 370 சிறப்­புத் தகு­தியை விலக்­கு­வோம் என்ற இரண்டை மட்­டும்­தான் மோடி நிறை­வேற்றி இருக்­கி­றார். பொது சிவில் சட்­டம் என்ற மூன்­றா­வதை நிறை­வேற்­று­வ­தற்­காக மூன்­றா­வது முறை பிர­த­மர் ஆகத் துடிக்­கி­றார்.

புதிய வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வோம், வெளி­நாட்­டில் இருந்து கருப்­புப்­ப­ணம் மீட்­கப்­ப­டும், பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வோம், அவ­சி­யப் பொருட்­க­ளுக்­கான விலை­யைக் கட்­டுப்­ப­டுத்த தனி­நி­தி­யம், வரி­வி­திப்­பில் எளிய முறை, வட­கி­ழக்கு மாநில வளர்ச்­சிக்கு முக்­கி­யத்­து­வம், அண்டை நாடு­கள் அச்­சு­றுத்­தி­னால் உறு­தி­யான நட­வ­டிக்கை, அர­சி­யல் தலை­யீடு இல்­லா­மல் புல­னாய்வு அமைப்­பு­கள் செயல்­ப­டும், நாட்­டில் உள்ள நதி­கள் அனைத்­தும் இணைக்­கப்­ப­டும், நாட்­டில் உள்ள அனைத்து நதி­க­ளை­யும் சுத்­தப்­ப­டுத்­து­வோம், அனைத்து கிரா­மத்­துக்­கும் சுத்­த­மான தண்­ணீர், அதி­வேக புல்­லட் ரயில்­கள், எரி­வாயு விலை­யைக் குறைப்­போம், 50 சுற்­றுலா பாதை­கள் அமைப்­போம், அனைத்து மாநி­லங்­க­ளி­லும் எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­கள், கிராம சபை­கள் வலுப்­ப­டுத்­தப்­ப­டும், சிறு­பான்­மை­யி­னர் உள்­பட அனைத்­துச் சமூ­கத்­தி­ன­ருக்­கும் சம வாய்ப்பு, கல்வி- – வேலை­வாய்ப்­பு­க­ளில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் வாய்ப்பு, மறை­முக வரி விதிப்­பில் சீர்­தி­ருத்­தம் செய்ய மாநில அர­சு­க­ளு­டன் ஆலோ­சனை, சேது­ச­முத்­திர திட்­டம் குறித்து விரைந்து முடிவு, தேசிய விவ­சாய சந்­தை­கள், மாநில முத­ல­மைச்­சர்­களை சம­மா­கக் கருதி தேசக் கட்­ட­மைப்­பில் ஈடு­ப­டுத்­து­தல், மாநில அர­சு­க­ளுக்கு அதி­க­ள­வில் நிதி அதி­கா­ரம், மாநி­லப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க மாநில கவுன்­சில்­கள் அமைப்பு - –இவை அனைத்­தும் 2014 பா.ஜ.க. தேர்­தல் அறிக்­கை­யில் இடம் பெற்­றவை.

2024 வரை­யி­லான பத்­தாண்டு காலத்­தில் நிறை­வேற்­றப்படா­தவை. புதியகேரண்டி கொடுப்­ப­வர், பழைய கேரண்­டி­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டாமா?

‘தேர்­தல் அறிக்கை என்­பது வெறும் தேர்­தல் சடங்கு அல்ல, அது எங்­கள்பாதை’ என்­றார் மோடி. பிர­த­மர் ஆன­தும் தேர்­தல் அறிக்கை பாதையை அவரே மூடி­வைத்­து­விட்டு, மாற்­றுப்­பா­தை­யில் அல்­லவா போனார்?

“இன்­னும் ஏழு ஆண்­டு­க­ளில் நாட்­டின் 75 ஆவது சுதந்­திர தினம் கொண்­டா­டப்­பட இருக்­கி­றது. அந்த நேரத்­தில் குடி­நீர், மின்­சா­ரம், கழி­வறை கொண்ட வீடு­களை அனைத்து மக்­க­ளும் கொண்­டி­ருப்­பார்­கள். 

அனை­வர்க்­கும் கல்வி, சுகா­தா­ரம் கிடைத்­தி­ருக்­கும். இது அனைத்­தை­யும் செய்­வ­தற்கு என்னை ஆசீர்­வ­திக்­கும் படி மக்­க­ளைக் கேட்­டுக் கொள்­கி­றேன்”- – என்று 2014 ஆம் ஆண்டு வேண்­டி­னார் மோடி. 

இந்­தி­யா­வின் 75 ஆவது சுதந்­திர தினம் போய்­விட்­டது. ஆனால் சொன்­னது எதை­யும் மோடி செய்­ய­வில்லை.

கோவில் கட்­டி­ய­தும், ஜம்மு காஷ்­மீ­ரும் சாத­னை­க­ளா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றன. பொது சிவில் சட்­டம் கொண்டு வரு­வோம் என்­ப­தைத் தவிர முக்­கி­ய­மான வாக்­கு­றுதி எது­வும் இப்­போது சொல்­ல­வும் அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.

குற்­ற­வி­யல் சட்­டம் அனை­வ­ருக்­கும் பொது­வா­ன­து­தான். அதில் யாருக்­கும் எந்த விதி­வி­லக்­கும் இல்லை. பல்­வேறு மதங்­கள் உள்ள இந்த நாட்­டில் அவர்­க­ளது பழக்க வழக்­கங்­கள் சார்ந்த கருத்­து­ருக்­க­ளுக்கு மரி­யாதை தர வேண்­டிய கடமை அனை­வர்க்­கும் உள்­ளது. 

இசு­லா­மி­யச் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு திரு­ம­ணம் மற்­றும் மண­மு­றி­வுக்கு தனி­யாக ஒரு சட்­டம் இருக்­கி­றது. இதன்­படி திரு­ம­ணம், வாரிசு, தத்து எடுத்­தல், சொத்து அளித்­தல், வக்பு சொத்து பாது­காப்பு ஆகி­ய­வைக்­கான தனிச் சட்­டம் இது. 

இது 1937 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட ‘முஸ்­லீம் தனி­ந­பர் சட்­டம்’ ஆகும். அது­தான் இவர்­க­ளது கண்ணை உறுத்­து­கி­றது.

இசு­லா­மி­யர்க்கு மட்­டு­மல்ல; பழங்­கு­டி­யி­ன­ருக்­கும் தனி­யான வாழ்க்கை முறை­கள் இருக்­கி­றது. பழங்­குடி மக்­க­ளின் வாழ்க்கை முறை­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக, அழிப்­ப­தாக அமைந்­தி­ருப்­ப­தாக வட­மா­நில பழங்­குடி அமைப்­பி­னர் சொல்லி இருக்­கி­றார்­கள். பார்­சிக்­கள், ஜெயின்­கள், சீக்­கி­யர்­க­ளது தனிப்­பட்ட வழக்­கங்­க­ளுக்கு எதி­ராக இந்த சட்­ட­மா­னது அமைந்­து­வி­டும். 

2012 ஆம் ஆண்டு சீக்­கி­யர்­கள் தனிச்­­ சட்டத்தை உரு­வாக்­கிக் கொண்­டார்­கள்.

வாஜ்­பாய் அவர்­கள் தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி அரசு, பொது­சி­வில் சட்­டத்தை கொண்டு வரு­வ­தற்கு எதி­ரா­கவே இருந்­தது. அன்­றைய சட்ட அமைச்­சர் அருண்­ஜெட்லி இதற்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் பேசி இருக்­கி­றார். 

பொது­சி­வில் சட்­டத்­தின் தொடர்ச்சி என்­பது சிறு­பான்­மை­யி­ன­ரின் உரி­மை­யைப் பறிப்­ப­தா­க­வும் - – பட்­டி­யல் இன, பழங்­குடி மக்­க­ளது தனிச்­சட்­டங்­கள் உரி­மை­க­ளைப் பறிப்­ப­தா­க­வும் படிப்­ப­டி­யா­கச் செல்­லும். 

இத­னால் இந்­தி­யா­வில் உள்­நாட்­டுக் குழப்­பங்­கள்­தான் அதி­கம் வரும். இதைத்­தான் செய்ய நினைக்­கி­றது பா.ஜ.க.

பா.ஜ.க. திருந்­தப் போவ­தும் இல்லை, வருந்­தப் போவ­தும் இல்லை என்­ப­தையே அவர்­கள் வெளி­யிட்ட தேர்­தல் அறிக்கை காட்­டு­கி­றது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?