ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கிலிருந்து எஸ்.பி.ஐ வங்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஐ.ஐ.டி மும்பை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று தான், நானும் கடந்த சில மாதங்களாக பெரும் தொகையை வங்கிகளுக்குச் சேவை கட்டணமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் பயன்படுத்தும் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து, கார்ட் ஸ்வைப் செய்யப்படும் போது ஒவ்வொரு முறையும் 5 ரூபாய் வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது (குறிப்பாக பெட்ரோல் பங்கில் பயன்படுத்தும் போது). அதேபோல், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து மினிமம் பேலன்ஸ் கடைப்பிடிக்கவில்லை என்பதால், மாதம் தோறும் 600ரூபாய் வீதம் பிடிக்கப்படுகிறது. அந்த கணக்கில் இதுவரை 8ஆயிரம் ரூபாய் மைனஸ் பேலன்ஸ் ஆகிவிட்டது. வங்கிக் கணக்கை நிறுத்திவிடலாம் என்று கேட்டால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணத்தைச் சொல்லித் தடுக்கின்றனர்.
வங்கிக் கணக்குகளில் மக்களிடம் இருந்து பணம் எடுக்கப்படுவது குறித்து ஐ.ஐ.டி மும்பை நடத்திய ஆய்வில், “ஸ்டேட் பேங் ஆப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகள், பூஜ்ஜிய இருப்புத் தொகை கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளிலிருந்து சேவை கட்டணமாக அதிக அளவு பணத்தை மக்கள் மீது திணிக்கின்றனர்.
இதில், எஸ்.பி.ஐ வங்கியினால் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும், ரூ 17.70 கட்டணமாகக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஏழைகள், கரோனா தொற்று லாக்டவுனால் பாதிக்கப்பட்டவர்களைப் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து, பணப் பரிமாற்றம் செய்யப்பட்டால் அதற்குக் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வரும் நிலையில், இதுபோன்று கட்டணம் வசூலித்து மக்களைப் பழிவாங்குவது துரதிர்ஷ்டவசமானது. இவற்றை மாற்றி அமைத்துப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி கடமைப்பட்டுள்ளது” என்று ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.ஐ.டியை சேர்ந்த பேராசிரியர் ஆஷிஷ்தாஸ், “எஸ்.பி.ஐ வங்கியால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், 1 கோடியே 20 லட்சம் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளில் (BSBDA) இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2018-19 காலாண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20 காலாண்டில் 158 கோடி ரூபாயும் இந்த ஏழைகளின் வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
2012-2013-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி தரப்பில், நாட்டில் நிதி சேர்க்கும் விதமாக BSBDA வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் மத்திய அரசு தரப்பில் 2014-ம் ஆண்டில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன்தான் யோஜனா என்ற பண சேமிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுபோன்று மினிமம் பேலன்ஸ் கையாளுதலையும் எளிய மக்களுக்குக் கடினமாக்கி கடைப்பிடிக்கச் சொல்கிறது, ரிசர்வ் வங்கியின் திட்டம். காரணம், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்று தொகையையே அதிகப்படுத்தியுள்ளன. அந்த தொகையை கடைப்பிடிக்கவில்லை என்றால், அதில் குறையும் பணத்திற்கு ஏற்ப சேவை கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தனியார் வங்கி ஊழியர் ஒருவர் குறிப்பிடுகையில், “300 கோடி என்பதைப் பெரிய தொகையாகப் பார்க்க முடியாது. அந்தந்த வங்கியால் வழங்கப்படும் சேவையைப் பொறுத்து அவர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். தனித் தனியாகவும், அந்த வங்கியின் பயன்பாட்டைப் பொறுத்தே சேவை கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது” என்றார்.
ஆனால், சாதாரண மக்கள் மத்தியில் சேவை கட்டணம் என்பது மிகப்பெரும் தொகையாகவே உள்ளது. அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அரசு கட்டாயப்படுத்திவிட்டு, சேவை கட்டத்தை உயர்த்துவதும் குவிப்பதும்
ஏழை மக்களை பாதிக்கும் செயல்.வங்கியில் பணம் போடுவதாகச் சொல்லி மக்கள் அனைவரையும் வங்கியில் கணக்கு துக்கக் கூறி கட்டாயப்படுத்தி இப்போது அவர்கள் பணத்தையும் கொள்ளையடிப்பதும், பெரும் பணக்கார்ர்களுக்கு 5 லட்சம் கோடி வராக் கடனாகத்தள்ளுபடி செய்வதும் அரசுடமை வங்கிகளின் கேவலமான பிழைப்பு .
-----------------------++-----------------------
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகில் உள்ள ஞான்வாபி மசூதி நிலப் பிரச்னை வழக்கில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதா் கோயிலின் பகுதியை அகற்றி விட்டே மசூதியைக் கட்டினார். அதனால் தற்போது ஞான்வாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமானது என வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 'வேறு ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டு ஞான்வாபி மசூதி கட்டுப்பட்டுள்ளதா என்பது குறித்து உத்தர பிரதேச அரசு இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் ஐந்து போ் கொண்ட நிபுணா் குழுவை நியமித்து ஆய்வு நடத்த வேண்டும். இந்த குழுவில் குறைந்தது இரண்டு நபா்களாவது சிறுபான்மையினராக இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என உத்தர பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.------------------------------+-------------------------------
சரமாரி, பொய்மாரி...மேற்குவங்க மாநிலத்தில் நான்கு கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் நான்கு கட்டத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் படுதீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆளும் மாநிலத்தைஆளத் துடிக்கும் பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.ஆயினும் பொய்யான தகவல்களையும் வாக்குறுதிகளையும் சரமாரி பொழிகின்றனர் பாஜகவினர். இதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்களத்தில் உள்ளனர்; கொரோனா விதிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை.அதை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்வதில்லை.
மக்களைப் பிளவுபடுத்துவதாக மம்தாபானர்ஜி மீது மோடியும் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது என்று மம்தாவும்மாறிமாறி குறை கூறுகின்றனர்.
ஜெய் ஸ்ரீராம் என்று பாஜகவினரும் ஜெய் காளி என்று திரிணாமுல்காரர்களும் கூவிக் கொண்டே ஒருவரை ஒருவர்குற்றம் சாட்டுவது நகைப்புக்குரியதாகவே உள்ளது.பாஜவினர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாகக்கொண்டு வருவோம் என்பதுதான் தேர்தல் பிரச்சாரமாக அண்மையில் தேர்தல் நடந்த மாநிலங்களில் பாஜகவால் நடத்தப்பட்டது. மேற்குவங்கத்திலும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்பட்டாலும் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமித்ஷா தலையில்அ அடித்துச் சத்தியம்செய்யாத குறையாகக் கூறுகிறார்.
விகடன் குடும்பத்தில் சொத்துச் சண்டை – சரிக்கட்ட பாஜகவிடம் பேரம் பேசிய சீனிவாசன் .இதுதான் பத்திரிகை உலக இன்றைய கழுகார் பரபரசெய்தி. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் குடும்பத்தில் மீண்டும் சொத்துச் சண்டை உச்சத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனிவாசனின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு 5 மகள்களும் உள்ளனர். தாத்தாஎஸ்.எஸ்.வாசன் சேர்த்துவைத்தை சொத்துகள் மற்றும் விகடன் குழுமத்தை மொத்தமாக சீனிவாசன் அபகரித்து விட்டதாகவும். கொஞ்ச நஞ்ச சொத்துக்களைக் கொடுத்து பின்னால் செய்கிறேன் பின்னால் செய்கிறேன் என சகோதரிகளை ஏமாற்றிவிட்டதாகவும் குடும்பத்தில் அடிக்கடி குடுமியைப் பிடித்துக் கொள்வது தொடர்ந்துவந்தது. 2001 ஆம் ஆண்டு விகடன் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கையிலெடுத்த சீனிவாசன், தந்தை பாலசுப்பிரமணியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சகோதரிகளையும் ஏமாற்றி வந்ததாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின. இதனால், மகனோடு கோபித்துக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியனை அப்போதைய மூத்த பத்திரிகைகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் சீனிவாசனின் ஏமாற்றுப் போக்கை சகித்துக்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மதுரையில் பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி . திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்